30
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர் சேவுகன், மாமன்ற உறுப்பினர்
மகேஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.