செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான பராமரிப்பு இன்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த சுமார் 50 பன்றிகளை மாவட்ட ஆட்சியர், மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் (பொ) அவர்களின் உத்தரவின்படி அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இப்பணி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல அலுவலர் Dr. தினேஷ் குமார் MD மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அறிவுறுத்தின் படி, நகராட்சி ஊழியர்கள் மற்றும் திருநெல்வேலியில் இயங்கி வரும் “மாசு அறக்கட்டளை” யின் துணை கொண்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முறையான பராமரிப்பில்லாமல் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பன்றிகள் ஆட்சியர் அறிவுறுத்தலின் படி மாசு அறக்கட்டளையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தி A.சாதிக் பாட்சா, நிருபர்.தேனி மாவட்டம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்கரை காவல் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் – வீடியோ..
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ஆய்வாளர் உட்பட தென்கரைகாவல் நிலைய ஆட்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் உட்பட அனைவரையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.
செய்தி .சாதிக் பாட்சா , நிருபர் தேனி மாவட்டம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் இன்று(17/10/2018) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் ஒரு சில அரசுத் துறை அதிகாரிகளை தவிர மற்ற அரசு அதிகாரிகள் பங்கேற்காததாலும் மக்களுக்கு முறையாக அறிவிப்பு செய்யப்படாததாலும் இன்று 17/10/2018 காலை 11:00 மணிக்கு கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர் தலைமையில் துவங்கிய கூட்டம் மாலை 05:00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மாலை 05:30க்கு துவங்கிய கூட்டத்தில் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி (கி.ஊ)அலுவலர் ராஜா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வேலவன் மற்றும் சேக்கிபட்டி ஊராட்சி செயலர் வடிவேல் உட்பட சில அரசு அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில் நூறுக்கும் மேற்ப்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
வரும் ஐந்து ஆண்டுகளுக்காக திட்டமிடும் இந்த கூட்டத்தில் பல துறை அரசு அதிகாரிகள் பங்கேற்கதாலும் பொதுமக்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை வந்திருந்த அரசு அதிகாரிகளால் வழங்க முடியாததாலும் அந்த கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்ப்பட்டது. சலசலப்பு காரணமாக சேக்கிபட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. சேக்கிபட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இது இரண்டாவது முறை.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் , மறியல் ..
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்தீபன் பொருளாளர், மோகன் அமைப்பு செயலாளர், ஜெயவேல், மாநில தலைமை நிலைய செயலாளர், சுப்பிரமணி மாவட்ட நிர்வாகிகள் மணி, மோகன், கோபிநாத் சுரேஷ், ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்னர்.
மேலும் போராட்டத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் செய்தியாளர்:- கேஎம், வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெட்ரோலுக்கு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நாட்டில்.. விவசாயிகள் விளைவித்த பொருளை இலவசமாக கொடுக்கும் அவல நிலை.. விவசாயி வருத்தக் குரல்..வீடியோ..
டிஜிட்டல் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோல் பொருட்களுக்கு நிறுவனம் நினைக்கும் விலைக்கு விலையை நிர்ணயம் செய்யலாம், ஆனால் உடலை வறுத்து வெயிலிலும், மழையிலும் நேரம் காலம் பார்க்காமல் விவசாயம்செய்யும் விவசாயி, தன் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க முடியாமல் ஏல ஏஜென்சிகளிடம் பொருட்களை இழக்கும் பரிதாப சூழலிலேயே உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தில் நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற விவசாயத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளார்கள். ஆனால் தன் விளைச்சலை ஏல மண்டிகளில் விற்பனைக்கு கொடுக்கும் பொழுது பல சமயங்களில் விற்ற காசுக்கு செலவு கணக்குதான் வருகிறதே தவிர பணம் கிடைப்பதில்லை. சமீபத்தில் 40கிலோ நார்த்ங்காயை ஏல மண்டியில் கொடுத்த விவசாயிக்கு வரவு 120/- அதற்கான செலவு 120/- என கணக்கு வந்துள்ளது.
நிலைமை இப்படி என்பதால் விவசாயத்திற்காக செய்த செலவு கூட எடுக்க முடியாமல் கடன் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என பறைசாற்றும் அரசாங்கம் விவசாயிகள் நலனை பேணவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலைகள் ஒரு தொடர்கதைதான்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அதிகமான மழை பொழிந்து வரும் வேளையில் மழைநீர் வெளியேறுவதற்கு போதுமான வசதி இல்லாததால் பள்ளியினுள் பெருகி குளம் போன்று காட்சியளிக்கிறது.
இந்த நிலையே நீடிப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்பள்ளியில் இருக்கும் இந்த நிலையை கவனித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாலூகா மற்றும் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (17/10/2018) நடைபெற்றது.
இப்பேரணி கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை சென்றது, இதில் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், கீழக்கரை தாலூகா வருவாய் ஆய்வாளர், கீழக்கரை, காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை கீழக்கரை வட்டாட்சியர் திருமதி இராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். இறுதியாக இப்பேரணி கடற்கரை வரை சென்று முடிவுற்றது.
தகவல்: மக்கள் டீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் வந்த காரும் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதி நகர் அருண் 20, உமய பாலா 18, விஜயராஜ் 18 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கீழக்கரை மாயாகுளம் நவீன் 19, உமயகணேஷ் 20, புவனேஸ்வரன் 16, கிருஷ்ணகுமார் 23, கமல்ராஜ் 28, வேல் முனியாண்டி 36, மோகன் 30 மற்றும் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணன் 55 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் துரிதமாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். படுகாயமடைந்த கிருஷ்ணன் உள்பட 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த 3 பேர் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினார் பலியானவர்களின் உடல்கள் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் வாங்கி திரும்பியபோது விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து கீழச் செல்வனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.10.18 அன்று காலை 9.30 மணியளவில் வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியியல் துறை சார்பாக தனிநபர் ஆளுமை வளர்ச்சிகான கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் மாணவி பாத்திமா சிஃபானாவின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர். A.R. நாதிராபானு கமால் வரவேற்புரையாற்றி ஆளுமை வளர்ச்சி திறமைகளை பற்றியும், சிறப்பு விருந்தினர் தனி திறமைகளை பற்றியும் எடுத்துக்கூறி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கல்லூரி சார்பாக நினைவு பரிசு இரமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறைத்தலைவர் டாக்டர். ஜெனட் ஒய் செல்வியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து சிறப்புவிருந்தினர் டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் கூற்றுப்படி “தூங்கும் போது காண்பது அல்ல கனவு, நீங்கள் விழித்து இருக்கும் போது தூங்க விடாமல் செய்வது தான் கனவு” என்பதைப்பற்றியும், தாமஸ் ஆல்பா எடிசன் கூற்றுப்படி கடின உழைப்பு 99 சதவீதம் அவர் தோல்வியை சந்தித்தார். ஆனால் மீண்டும் முயற்சி செய்ததால் 100வது சதவீதம் வெற்றியை காண முடிந்தது எடுத்துக்காட்டாக கூறி, தனி மனிதனின் ஆளுமைகளை எடுத்துரைத்தார்.
இறுதியாக வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் மாணவி பாரிகா பர்வின் நன்றியுரை கூற இந்நிகழ்ச்சி இனிதே முடிவடைந்து.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (16/10/2018) காலை 11.30 மணியளவில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.R.நாதிராபானு கமால் மற்றும் டாக்டர். வி. ஜெனட் ஒய் செல்வியா, வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியியல் துறைத்தலைவர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம் ஆகியோர் உணவு திருவிழாவை தொடங்கிவைத்தார்கள்.
அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில், “தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினையும் அழித்திடுவோம்” என்பது பாரதியின் வார்த்தைகள். ஆனால் அவ்வார்த்தையை பொய்ப்பிக்கும் வகையில் இன்றும் பல தரப்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில்தான் உள்ளனர். அந்த நிலையை மாற்றி அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வழியுறுத்தி அக் 16 தேதி உலக உணவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. “இடம் பெயர்வோரின் எதிர்காலத்தை மாற்றுங்கள்” என்பது இந்தாண்டு மையக்கருத்து, அதை மெய்படுத்தும் விதம் தேவையுடையோர் அனைவருக்கும் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்நிகழ்வில் பல்வேறு துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஓரு பகுதியாக மாணவிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குறைந்த விலையில் விற்பனைச்செய்து உணவு திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலக மேலாளர் போஜன் ரூபாய் 5000 வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்
( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அக்.30இல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தி, 56-வது குரு பூஜை கொண்டாடப்படுகிறது.அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில். தென் மண்டல காவல் துறை தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இன்று (அக்.16) ஆய்வு செய்தனர்.
இவ்விழாவில் அஞ்சலி செலுத்த மிக முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் , தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து களஆய்வு நடத்தினர்.
மேலும் அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ள மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…
இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக மின்சார வாரியம் சம்பந்தமாக நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கீழக்கரை சார்பாக மக்கள் டீம் காதர் மற்றும் செய்யது இபுறாகீம் ஆகியோர் கலந்து கொண்டு கீழக்கரையின் மின்சார வாரியம் சம்பந்தமான பிரதான குறைகளை எடுத்து வைத்தனர்.
இக்கூட்டத்தில் கீழக்கரை பிரதான பிரச்சிறைகளான புகார் குறித்த தகவல் தர நிரந்தர தொலை பேசி எண், அவசர கால உதவி, துணைமின் நிலையத்தில் குடிநீர் தேவை, புதிய பேரூந்து நிலையத்தில் உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின்சார கட்டணம் செலுத்தும் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தருதல்.
நகருக்குள் செம்பு கம்பி மாற்ற வேண்டிய பணிகளை துரிதபடுத்துதல். ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொறியாளர் ஆறுமுக ராஜ் தலைமையிலும், மின்சார அலுவலக அதிகாரி கங்காதரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
தகவல்:- மக்கள் டீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..
இராமநாதபுரம் சமூக நலத்துறை, ஹெல்ப்பேஜ் இந்தியா, முதியோருக்கான முதியோர் அமைப்பு ஆகிய இ சார்பில் உலக முதியோர் தின விழா உச்சிப்புளியில் நடந்தது.
முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். அவர் பேசுகையில்: ஒவ்வொரு வாழ்க்கையிலும் இளமை பருவம் போல் முதுமை பருவமும் ஒரு அங்கம் தான். வயதாகி விட்டது என்ற தாழ்வு மனப்பான்மையை போக்கி எண்ணங்களை இளமை வைத்துக் கொண்டு, சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். பிரச்னைகள் எதுவானாலும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பற்றிய சிந்தனையை விட்டொழிக்க வேண்டும். யாரையும் சார்ந்து வாழாமல் என்னால் இயலும் என்ற தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். வாழ்வின் இறுதி கால கட்டத்தை மன அமைதி, இருக்க கற்று கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா, ஹெல்ப் பேஜ் இந்தியா மாநில தலைவர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலைச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்கிணற்றுவலசை டாக்டர் எம்ஜிஆர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில். இடியுடன் மழை. மின்னல் தாக்கி வாலிபர் பலி …
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளீயூர் பகுதியை சார்ந்த சந்திரன் மகன் சரவணன் வயது 23 என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தென்கரை கோட்டைக்கு சென்ற போது இடியுடன் மழை பெய்ததால் கொட்டாயூர் என்ற இடத்தில் சாலை ஓர புளிய மரத்து அடியில் ஒதுங்கிதுள்ளார்.
அப்போழுது மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் சுருண்டு விழந்து பலி ஆகியுள்ளார். மேலும் இவ்விபத்தில் இறந்து போன வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர் கூலி தொழிலாளியும் ஆவார்.
இது சம்பந்தமாக கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் நேற்று இரவு தான் கேரளாவில் இருந்து கிள்ளியூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- கே.எம்.வாரியார், வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு “BRAIN RAIN 2018” என்ற அறிவியல் கண்காட்சி Dr.APJ.Abdul Kalam Science Forum அமைப்புடன் இணைந்து 15/10/2018 மற்றும் 16/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இக்கண்காட்சியை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் தாசில்தார் தமீம்ராசா கலந்து கொண்டார்.
இக்கண்காட்சியில் 600கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வருகையாளர்களுக்கு அழகிய முறையில் தங்களுடைய படைப்புகளைப் பற்றி அழகுற விவரித்தனர்.
இக்கண்காட்சியில் கலாம் ஏவிய விண்கலம், பாம்பன் பாலம், விவசாயம், விண்கோள்கள் மற்றும் இன்னும் பல அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இன்று (16/10/2018) மாலை முதல் பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.
மேலும் இந்த கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் மௌலா முகைதீன் தலைமையில் துணை தலைவர் MMS முகைதீன் இபுராஹிம், அறிவியல் குழு தலைவர் சாதிக் ரபீக், துணை செயலாளர் முகம்மது ரஃபீக், டாக்டர் ராசீக்தீன், பொருளாளர் பஷீர் அகமது மற்றும் பல கல்விக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர் மற்றும் பல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளின் படைப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் டிஜஜி முகாம் அலுவலகம் செல்லும் வழியில் வெடி குண்டு வீசி இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை சூரப்புலி சுப்ரமணியன் மகன் கார்த்தி 36. இவரது நண்பர் குண்டு விக்கி 32. இவர்கள் இருவரும் நீதிமன்றம் சென்று விட்டு, மாலை 5:30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழி மல்லம்மாள் கோயில் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் காத்திருந்த கும்பல் இருவர் மீது வெடிகுண்டு வீசியது.
இதில் நிலை குலைந்து இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடிய இருவரையும் டிஜஜி முகாம் அலுவலகம் பகுதியில் வைத்து அக்கும்பல் நீண்ட அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் கேணிக்கரை போலீசார் கைப்பற்றிய கார்த்தி, விக்கி உடல்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். கடந்த மே 20 இல் வாலாந்தரவை அருகே காதணி விழா நடந்த வீட்டில் திறந்த வெளியில் இரவில் தூங்கிய பூமிநாதன், விஜய் ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வாலாந்தரவை கார்த்தி உள்பட 20 பேர் மீது கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பான முன் விரோதத்தில் பழிக்குப் பழியாக இந்த இரட்டை கொலை 5 மாதம் கழித்து நடந்துள்ளது. இதனால் ராமநாதபுரம், வாலாந்தரவையில் பதற்றம் நிலவுகிறது. கொலை நடந்த இடத்தை டி ஐ ஜி காமினி, எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கிடையில் போலீசில் வாலாந்தரவை பாஸ்கரன் 40, முரளி 21, அர்ஜீன் 25, ரூபன் 25, முருகேசன் 37 ஆகியோர் தப்பிச் சென்ற காருடன் நயினார்கோவில் போலீசில் சரணடைந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு இம்ப் காப்ஸ் இயக்குநர் சித்த மருத்துவர் பி அர்சினன் தலைமை தாங்கினார்.
மேலும் இந்த அறக்கட்டளை துவக்க விழாவில் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணைசெயலாளர் RPஏழுமலை ஒன்றிய திமுக செயலாளர் வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை தலைவர் காட்பாடி சரவணன் செயலாளர் சுரேஷ் பொருளாளர் சத்தியமூர்த்தி இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி அந்தஸ்து அடைந்த பின்பு கூட மின்சார வாரிய ஊழியர்களின் எண்ணிக்ழைக தகுதியான அளவுக்கு உயர்த்தப்படாமல் இன்றளவும் பற்றாக்குறையான சூழலே இருந்து வருகிறது. சாதாரண மின் தடை முதல் ஆபத்து காலத்திற்கு அழைத்தாலும் கூட மின்சார ஊழியர்களின் சவுகரியத்திற்கு தகுந்தாற் போல்தான் காரியங்கள் நடக்கும்.
நேற்று (15/10/2018) 20வது வார்டு வடக்குத் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென உயர் மின் அழுத்தத்தால் வீட்டில் உள்ள டி.வி உட்பட அனைத்து மின்சார பொருட்களும் தீப்பிடித்து உபயோகமற்றதாகி கருகி போய் உள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் பொிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மின்சார வாரியத்தை பல வகையில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தெருவின் மத்தியில் உள்ள வீட்டில் நடந்ததால் அருகில் உள்ள மக்கள் காப்பாற்றியுள்ளார்கள். இதே சம்பவம் தனியான பகுதியில் நடந்து இருந்தால், உயிர் பலி ஆகியிருந்தால் கூட யாரும் உதவிக்கு வந்திருக்கமாட்டார்கள். அனைத்திலும் மிகை மாநிலம் என்று மார்தட்டி கொள்ளும் நிர்வாகம், அவசர காலத்தில் உதவ மின்சார வாரியத்தில் ஏன் ஒரு தனிப்பிரிவை உருவாக்க கூடாது என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.
You must be logged in to post a comment.