திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் அவர்களின் ஆலோசனை படியும் நாட்டு நலப்பணி திட்டம் முகம் தொடங்கப்பட்டது இதில் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் சமூகத்திலும் வாழும் ஊர் பகுதியிலும் பள்ளிக்கும் எந்த வகையில் எல்லாம் நன்மை பயக்கும் என்று விளக்கமாக கூறினார் மற்றும் இதில் பங்கு பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் மதிப்பையும் விளக்கினார் இதில் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி கோவில் உழவாரப் பணியில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணுதல் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் முகாம் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இறுதியாக முதுகலை தமிழ் ஆசிரியர் பார்த்திபன் நன்றியுரை கூறினார்.
Category:
செய்திகள்
58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 23ஆம் தேதி வைகை அணையிலிருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டது.,வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட இந்த நீர் சுமார் 27 கிலோ மீட்டர் பயணித்து உசிலம்பட்டி எல்லையான ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிப்பாலம் என அழைக்கப்படும் 58 கால்வாய் தொட்டிப்பாலத்திற்கு வந்தடைந்தது.,தொட்டிப்பாலத்தை கடந்த இந்த வைகை நீரை விவசாயிகள் பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்., பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வரும் வழியில் உள்ள செடிகள், முட்களை அகற்றியவாறு பணியாட்களும் பணியாற்றி வருகின்றனர்.,இந்த நீர் இன்று மாலைக்குள் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் மதகு பகுதிக்கு வருகை தரும் எனவும், அங்கிருந்து மொண்டிக்குண்டு, திம்மநத்தம் வழியாக உள்ள பல்வேறு கண்மாய்களுக்கும், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி வழியாக உசிலம்பட்டி கண்மாய்க்கும் பிரித்து வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் முதல்வர்எம்ஜிஆர் 36வது நினைவு நாள் அதிமுக சார்பாக அனுசரிக்கப்பட்டது
by mohan
written by mohan
சோழவந்தான் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமையில் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தண்டபாணி ஊத்துக்குளி சேது கண்ணன் பூக்கடை முருகன் ஆகியோர் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதே போல் பேட்டைகிராமத்தில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மருதுசேது கருப்பட்டி கிராமத்தில் மருத்துவர் அணி கருப்பையா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டி தேனூர் கிராமத்தில் சோனை முத்து பாஸ்கரன் கொடிமங்கலத்தில் கருப்பணன் சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன் நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் மன்னாடிமங்கலம் கிராமத்தில் ராஜபாண்டிஇரும்பாடி மாவட்ட மகளிர் அணி செயலாளார் வக்கீல் லட்சுமி குருவித்துறை மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மேலக்கால் கிராமத்தில் காசிலிங்கம் ராஜபாண்டி உள்பட இப்பகுதியில் அதிமுகவினர் எம் ஜி ஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடிநீர் இன்றி அவதிப்படும் பொது மக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிக்கவும் தண்ணீர் இல்லை குளிக்கவும் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் உள்ளது தேனூர் ஊராட்சி இங்கே 12 வார்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்தவீ டி பாலு என்பவரும் துணைத் தலைவராக பாக்கியலட்சுமி என்பவரும் ஊராட்சி செயலாளராக ஸ்ரீதர் என்பவரும் உள்ளனர்.வைகை ஆற்றங்கரையில் இருந்து கொண்டு தேனூர் ஊராட்சி மக்கள் தண்ணீருக்காக மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் தோண்டியபோது உடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை மேலும் வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் குளிக்கவும் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தேனூர் ஊராட்சி 3வது வார்டில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி இயங்கவில்லை. மேலும் 1960 ஆண்டில் கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பின்புறம் உள்ள பெண்கள் குளிக்கும் அறையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படவில்லை. தேனூர் ஊராட்சி மேலக்கால் ரோட்டில் உள்ள ஆண்கள் குளியலறையும் வேலை செய்யவில்லை இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வைகை ஆற்றங்கரையில் இருந்து கொண்டு தண்ணீருக்காக தேனூர் கிராம மக்கள் படும் அவஸ்தைகள் மிக அதிகமாக உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட ஊராட்சி நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தேனூர் ஊராட்சியில் குடிநீர் வழங்கிடவும் ஆண்கள், பெண்கள் குளியலறையை சரி செய்து பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளை முழுமையாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை முத்துபட்டி பகுதியில் உள்ள கம்மாய்க்கரையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 28) என்பவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட துப்பாக்கி (9MM Pistol), 35 டம்மி தோட்டாக்கள் மற்றும் 1,00,000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை சுப்ரமணியபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து வீரபாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்;மதுரை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவரிடம் துப்பாக்கியை வீரமணி பெற்றதாக தெரிவித்ததன் அடிப்படையில் திவாகரனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் திவாகரன் அளித்த தகவலின் படி திண்டுக்கல் பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடமிருந்து திவாகரன் துப்பாக்கியை பெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து வீரபாண்டி மற்றும் திவாகர் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து துப்பாக்கி 9MM Pistol,35 டம்மி தோட்டாக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.போலீசார் பதிவுகள் செய்த துப்பாக்கி 2016 ல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – ஆடல், பாடலுடன் , தந்தை பாசம் குறித்த விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தன.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள விசுவாச வார்த்தை சபை ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடிவரும் கிறிஸ்தவர்களின் பண்டிகைக்கு முன்னதாக, திருமங்கலத்தில் உள்ள விசுவாச வார்த்தை சபை பேராலயத்தில் , இன்று காலை முதல் கிறிஸ்துவ மக்கள் குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து , ஆலயத்தில் நடைபெற்ற விழாக்களில் பங்கு பெற்று, தங்களது பிள்ளைகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், தந்தை பாசம் குறித்த விழிப்புணர்வு நாடகத்தையும் நடத்தினர்.இதனை கண்ட பெற்றோர்களும், பார்வையாளர்களும் கைதட்டி அவர்களை வெகுவாக பாராட்டியது அனைவரையும் நெகிழச் செய்தது..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யிது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம் தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ் அபுதாஹீர் ஜாஹீர் உசேன் ஜிலான் பாஷா ஆகியோர் முன்னிலையில் சந்தனகூடு உருஸ்விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி கந்தூரி விழா கொடியேற்ற விழா நடந்தது. அன்று முதல் விழா நடந்து வந்தது. நேற்று விழா நிறைவு பெற்றது. சந்தன கூடு உருஸ் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு காட்டுப்பள்ளி வாசல் சென்று பின்னர் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இங்கு கிராம பொதுமக்கள் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். திருவாலவாயநல்லூர் ஊராட்சி சுகாதாரப் பணியை செய்திருந்தனர். மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா, 3 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் போட்டி துவங்கியது.
by mohan
written by mohan
ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறும் முத்துராமலிங்கம் சதுரங்க கோப்பைக்கான போட்டிகள் . கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தின் சார்பில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை சதுரங்க திருவிழா வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.மூன்றாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் கடந்த 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை ஏ,பி,சி, என மூன்று தரவு பிரிவுகளில் நடை பெறுகிறது.10 பிரிவுகளில் 8 நாட்கள் நடைபெறும் 3வது சர்வதேச போட்டிகளில் உலக அளவில் 20 நாடுகளில் 33 கிராண்ட் மாஸ்டர் வீரர்களும் இந்திய அளவில் 1700 புள்ளிகள் பெற்ற தரவரிசையில் 1600 பேர் சதுரங்க (செஸ்) போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்.”ஏ” பிரிவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறுகின்றனர்..ஏ பிரிவில் முதல் பரிசாக சாம்பியன் விருது பெறுபவருக்கு இருபது லட்சம் ரூபாய், பரிசு கோப்பை உள்பட ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது.இதேபோல் “பி” பிரிவில் 1700 புள்ளிகள் பெற்று உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளும்.இதில் வெற்றி பெறும் “பி” பிரிவு வீரருக்கு 2 லட்சம் ரூபாய் முதல் பரிசும் ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது.இதே போல் “சி” பிரிவில் 1500 புள்ளிகள் பெற்ற வீரர்கள் பங்கு பெறும் சதுரங்க வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பணமாகவும்,பைக் ஒன்றும் வழங்கப்படுகிறது.தனித்துவமாக விளையாடும் வீரர்களுக்கு என ஐந்து பைக்குகளும் மொத்தம் எட்டு பைக்குகள் மற்றும் 100 சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.முதல் பரிசுகள் தவிர பங்கேற்கும் சதுரங்க வீரர்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது.முத்துராமலிங்கம் சதுரங்க கோப்பைக்கான போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.காலை 9 மணிக்கு துவங்கும் 3வது சர்வ தேச சதுரங்க போட்டிக்கு கணினி மூலம் முன்பதிவு. செய்யப்படுகிறது.தற்போது இதுவரை 1600 இளைஞர்கள் கணினி வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்ற வீரர்கள் பங்குபெறும் “A” பிரிவு சர்வதேச போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 33 பேர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.அதிமுக சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நகர செயலாளர்கள் துரை முருகேசன் பரமசிவம் ஆகியோர், மற்றும் அதிமுகவினர் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். .
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அருகே,பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமின் 569 மனுக்கள் பெறப்பட்டது.மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா தலைமை தாங்கினார்.மாவட்ட துணைச் செயலாளர் மூவேந்திரன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வரவேற்றார்.இந்த முகாமை, மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தொடக்கி வைத்தார். இந்த முகாமில், கவுன்சிலர்க ள் செளந்தரபாண்டியன், கீதா செந்தில், ராமேஷ்பாண்டி, வின்சி, செவத்தியம்மாள்,பகவதி ஆறுமுகம், நாகேஸ்வரி கிருஷ்ண திலகர், திருநாவுகரசி திருப்பதி, லதா பால சுப்பிரமணி, மீனாட்சி ஜெயராமன், அன்புசெல்வன், சரவணன் உள்படஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கை தொடர்பான 569மனுக்களை கொடுத்தனர். முகாமினை, பேரூராட்சி உதவி இயக்குனர் சு. சேதுராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முடிவில் பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் நன்றி கூறினார்.
வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் எம் ஜிஆர் மற்றும் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆர் அவர் அவர்களின் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பறவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் வடக்கு நகர செயலாளர் முருகேசன் முன்னிலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் எம்ஜிஆர் திருவருளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதைபோல் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைத்துள்ள பெரியார் சிலைக்கு பெரியாரின் 50 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கும் அதிமுகாவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“coca cola” டின்னில் தலை சிக்கி தவித்த சாரைப்பாம்பு; லாவகமாக உயிருடன் மீட்ட பாம்புப்பிடி வீரர்
by mohan
written by mohan
மதுரை பசுமலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு கொக்கோ கோலா(coca cola) காலி டின்னில் தலை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, அப்போது பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் சிவன் பாண்டிக்கு தகவல் தந்தனர்.உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சிவன் பாண்டி கொக்கோகோலா காலி டிண்ணில் சாரைப்பாம்பு தலை மாட்டிக்கொண்டதை வெகு நேரம் போராடி மீட்டு பாம்பை காப்பாற்றி பாதுகாப்பாக வனப்பகுதியில் விடபட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று தொழிலுக்கு சென்று திரும்பிய படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன..இதில் பாம்பன் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த காலிங்ஸ் என்பவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் தெரியாத நிலையில், அப்போது அங்கு நின்ற மீனவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் படகு முற்றிலும் நாசமானது.இச்சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை, வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் இணைந்து டிச.23 சனிக்கிழமை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா ஆலோசனையின் படி, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முருகன் சீரிய முயற்சியில் மாபெரும் இரத்ததான முகாம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் வைத்து நடைபெற்றது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமில் வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த நிலைய மருத்துவர் மரு. பாபு மற்றும் மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். உறைவிட மருத்துவர் செல்வபாலா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி கலந்து சிறப்பித்தனர். முகாமில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்படும் மற்றும் ஒத்துழைப்பு நல்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தையும், ரத்த வங்கி குழுவினரையும், குருதிக் கொடையாளர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்ய வந்த குருதிக் கொடையாளர்களையும், இந்த முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்கள் தென்காசி மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாணாக்கரின் கற்பனை, அறிவு தேடல்களுக்கு வடிகாலாக அனைத்து துறை சார்ந்த பொது கண்காட்சி 2023 அமிர்தா வித்யாலயம் சார்பில் ஆர் எஸ் மடையில் உள்ள அமிர்தா வித்யாலயம் சீனியர் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளியில் இன்று நடந்தது. பிரம்மச்சாரினி லட்சுமி ஒருங்கிணைப்பில் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் வழிகாட்டல் படி, துணை முதல்வர் பாலவேல் முருகன் மேற்பார்வையில் நடந்தது. கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி துறைத் தலைவர் செல்வபெருமாள், கணினித் துறை பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மாணாக்கரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புத்தாக்க திறனை அமிர்தா வித்யாலயம் குழும கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம் பார்வையிட்டு மாணாக்கரை பாராட்டினார். இக்கண்காட்சியை ஏராளமான பெற்றோர் பார்வையிட்டு மாணாக்கரின் திறமையை பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பகுதிகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் ஆய்வு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தை திரு நாள் பொங்கல் முதல் நாள் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.இதனை ஒட்டி பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தற்காலிக கால்நடை மருத்துவமனைகள் ஜல்லிக்கட்டு மாடுகள் பரிசோதனை பகுதி மற்றும் வாகனங்கள் செல்லும் திருப்பரங்குன்றம் சாலை ,முத்துப்பட்டி சாலை, வெள்ளக்கல் பகுதி ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு செய்தார் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் ஆய்வுப் பணிகளில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் அரையாண்டு விடுமுறையை கண்மாயில் நண்பர்களோடு குளித்து உற்சாகமாக கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம்
by mohan
written by mohan
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்து வரும் அசோக் என்பவரின் 13 வயது மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சிறுவன் பள்ளி அரையாண்டு விடுமுறையை யொட்டி அப்பகுதியைச் சேர்ந்த தனது 3 நண்பர்களோடு மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார்.இந்த நிலையில் நான்கு பேரும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீச்சல் தெரியாத சிறுவன்(வர்சன்) திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மற்ற சிறுவர்கள் அக்கப் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி அரையாண்டு விடுமுறையை நண்பர்களுடன் கன்மாயில் குளித்து விளையாட நினைத்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கலைஞரின் வருமுன் காப்போம் அரசு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைசெல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கபீர் கிஷாமகேஷ் ஆர்த்தி மோனிஷா யோக பிரியா சந்திரமதி சந்திர பிரபா சந்திரஜோதி ஆகியோர் இப்பகுதியில் உள்ள கிராமம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துமாத்திரை இலவசமாக வழங்கினார்கள். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜா சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் இனிய குமார் சதீஷ் விமல் உதவியாளர்கள் கண்ணன் பிரகதீஸ்வரன் ஆகியோர் திட்டத்தில் மக்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சையும் அதன் பயன் குறித்தும் கிராம மக்களிடம் எடுத்துக் கூறி பேசினார்கள். ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார். முகாமில் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் குடல் மருத்துவம் இயன்முறை மருத்துவம் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் சிறுநீரகவியல் மருத்துவம் எலும்பு மூட்டு மருத்துவம் இருதய நோய் மருத்துவம் கண் மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் மனநல மருத்துவம் சித்த மருத்துவம் நரம்பியல் மருத்துவம் முதியோர் நல மருத்துவம் ஆகிய மருத்துவ சேவை நடைபெற்றது இதில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம் சமுதாய நல செவிலியர் நித்திய கல்யாணி பகுதி சுகாதார செவிலியர் உஷா கிராம சுகாதார செவிலியர் இந்திரா உள்பட நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் இதில் பங்கேற்று ரத்த முழு பரிசோதனை ரத்த சக்கரை அளவு கண்டறிதல் ரத்த கொழுப்பு அளவு சளி மாதிரி பரிசோதனை மற்றும் இசிஜி ஆகிய பரிசோதனைகள் இப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு பரிசோதித்தனர். இப்பகுதியில் உள்ள இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு ஆஸ்பத்திரி இல்லாததால் இப்பகுதி கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை எடுப்பதற்காக வாடிப்பட்டி சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சென்று சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் பல ஆண்டுகளாக இங்கு அரசு ஆஸ்பத்திரி ஏற்படுத்தித் தர கேட்டுக் கொண்டு வருகிறார்கள் இந்த முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் கலந்து கொண்டதிலிருந்து இப்பதிக்கு அரசு ஆஸ்பத்திரி தேவை என்பது தெரிய வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென சுமார் பகல் 12 மணியளவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் கேட்டிற்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் உள்ளே இருந்த கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களை அழைத்து கேட்டபோது எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று அலட்சியமாக பதில் சொல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர் சொர்க்கவாசல் திறப்பு நாளான இன்று பெருமாளை தரிசிக்க வந்த தங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் திருவிழா காலங்களில் இதுபோல் குளறுபடிகள் அதிக அளவில் நடப்பதாகவும் இது குறித்து மாவட்ட இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் கோவில் நடை யை சாத்தி அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் இனிவரும் காலங்களில் வைகுண்ட ஏகாதசி காலங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடை சாற்றும் முறையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டிச.23 நகரில் கடந்த வாரம் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தேங்கியது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி நகராட்சி பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்மீன்கார தெருவில் இடிந்து விழுந்த சகுபர் என்பவரது வீட்டை, நகர்மன்ற தலைவர் கார்மேகம் பார்வையிட்டார். அந்த வீட்டை சீரமைக்க நடவடிக்கை கேட்டுக்கொண்டார்
You must be logged in to post a comment.