Home செய்திகள் முன்னாள் முதல்வர்எம்ஜிஆர் 36வது நினைவு நாள் அதிமுக சார்பாக அனுசரிக்கப்பட்டது

முன்னாள் முதல்வர்எம்ஜிஆர் 36வது நினைவு நாள் அதிமுக சார்பாக அனுசரிக்கப்பட்டது

by mohan

சோழவந்தான் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமையில் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தண்டபாணி ஊத்துக்குளி சேது கண்ணன் பூக்கடை முருகன் ஆகியோர் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதே போல் பேட்டைகிராமத்தில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மருதுசேது கருப்பட்டி கிராமத்தில் மருத்துவர் அணி கருப்பையா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டி தேனூர் கிராமத்தில் சோனை முத்து பாஸ்கரன் கொடிமங்கலத்தில் கருப்பணன் சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன் நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் மன்னாடிமங்கலம் கிராமத்தில் ராஜபாண்டிஇரும்பாடி மாவட்ட மகளிர் அணி செயலாளார் வக்கீல் லட்சுமி குருவித்துறை மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மேலக்கால் கிராமத்தில் காசிலிங்கம் ராஜபாண்டி உள்பட இப்பகுதியில் அதிமுகவினர் எம் ஜி ஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!