9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.அதிமுக சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நகர செயலாளர்கள் துரை முருகேசன் பரமசிவம் ஆகியோர், மற்றும் அதிமுகவினர் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். .
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.