தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மறைவு:விஏஓ அனைவரும் புகழஞ்சலி..
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் நத்தம் தாலுகாவில் பணியாற்றி வந்தவருமான வெ.முருகன் என்பர் இயற்கை எய்தினார்.
இவரது மறைவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முருகன் அவர்கள் மாவட்ட செயலாளராக மிகவும் சிறப்பாக பணியாற்றியதாகவும்,கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி சுமூகமாக முடித்து வைப்பார்,அனைத்து அதிகாரிகளையும் அரவணைத்து செல்லக்கூடிய நல்ல ஒரு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்று திண்டுக்கல் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.