வேலூர் அடுத்த காட்பாடியில் திடீரென்று மழை பெய்தது. காலை முதல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மழை பெய்தது.
கே.எம்.வாரியார்
வேலூர் அடுத்த காட்பாடியில் திடீரென்று மழை பெய்தது. காலை முதல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மழை பெய்தது.
கே.எம்.வாரியார்
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை சுங்கச்சாவடி அருகே சந்திரசேகர் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.3,80,000 பணம் பறிமுதல் – வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.
கே.எம்.வாரியார்
கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகுமுத்து ரோந்து பணியில் இருந்தபோது பாலமேடு மிளகரணை சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கூடல்நகர் காலனியை சேர்ந்த அபிஷேக் சிங் மற்றும் கூடல்நகர், அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்டி ரூட்ஸ் ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கி.கி கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியில் உள்ள கிணற்றில் காட்ராம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுப்பிரமணி (23)என்பவர் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு கொண்டபாளயம் போலீசார் விசாரணை
Dr.A.P.J.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.08.2019 அன்று மாலை 3.00 மணியளவில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் மாணவி S.நிவேதிதா Dr.A.P.J.அப்துல்கலாமின் உருவப்படத்தை வரைந்து காட்டினார். அந்த மாணவியையும், கட்டுரைப் போட்டியில் பங்குப் பெற்ற மாணவிகள், ஆசிரியர்களை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.
இந்நிகழ்வை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கூடுதல் கல்விசார் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் S.துர்கா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எக்ககுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
எக்ககுடி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் கண்மாய் கரையை பலப்படுத்துதல், 4-வது மடையை மீளக்கட்டுதல் மற்றும் கலுங்குகளை பராமரித்தல்,
சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்மாய் மூலம் 104.41 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர்.ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது தமிழ்த முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ்,ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின்
கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல்,
நீர் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல்,புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், வருவாய்த்துறை
அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையை குறியீடு செய்திடவும்.ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் பி.ராஜேந்திரன், பி.ஆனந்த்பாபுஜி உட்பட அரசு அலுவலர்கள்S எக்ககுடி கண்மாய் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.
.
ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் 34 ஆம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் பூக்குழி உற்சவம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதனையொட்டி ஜூலை 23, 24, 25 தேதி இரவு அக்னி சட்டி கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு ஊர்வலம் செல்கிறது.
ஜூலை 26 இரவு மாவிளக்கு பூஜை, ஜூலை 27 சிறப்பு அபிஷேகம், ஜூலை 28 இரவு பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஜூலை 31 இரவு பூக்குளி உற்சவம் நடைபெறுகிறது. ஆக.1 இரவு வாண வேடிக்கைகளுடன் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆக 29, 30 தேதிகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அறங்காவலர் வி.கருணாகரன் மற்றும் கே.பாலசுப்ரமணியன், கே.கவுதம் ஆகியோர் உள்ளட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், விவசாயம் மட்டுமில்லாமல் பைனான்ஸ் தொழிலுடன் தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தப்பணி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பல தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். தி.மு.கவின் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் கூட.தூத்துக்குடி மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்களை பதிக்கும் பணியை துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கருணாகரன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும் கருணாகரனுக்கும் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தைப் பூட்டி, கருணாகரன் சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை குலையன்கரிசல் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்து காரில் வீடு திரும்பினார் கருணாகரன். தோட்டத்தின் வாசல் பகுதியில் சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த கும்பல்,காரை வழி மறித்தனர். காரில் இருந்து இறங்கிய கருணாகரனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடினர்.இதில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த கருணாகரன்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான பெரியசாமியின் தீவிர ஆதரவாராக இருந்த போது, தூத்துக்குடி யூனியன் சேர்மனாக பதவி வகித்தார் கருணாகரன். பெரியசாமியின் மறைவிற்குப் பிறகு, தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பாட்டுவாடா தொடர்பானவற்றை கருணாகரன் கவனித்து வந்ததாகவும் இதில், சில பிரச்னைகள் எழுந்ததால் இவரை அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, கருணாகரனும் அனிதா ராதாகிருஷ்ணனை விட்டுவிலகி, தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏவான சண்முகையாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்தையாபுரத்தில், கருணாகரனுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தை காலி செய்துவிட்டு, தனது சொந்த ஊரான தண்டுபத்துவிற்கு மாற்றிவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களில் ஒருவரான பில்லா ஜெகன், ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள நிலையில், தற்போது அனிதாவின் மற்றொரு ஆதரவாளரான கருணாகரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 0 முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் பகுதி, முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வழங்கும் பகுதி, மனநல மருத்துவ பகுதி, உடல் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது. இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், ஆதார் அட்டை வழங்குதல், காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூளை முடக்கவாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, பராமரிப்பு உதவித் தொகை, பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை அட்டை,அடையாள அட்டை பெறுதல், புதிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் எளிதில் பங்கேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய பகுதிகளிலும் முகாம் நடத்தப்படுகிறது. 23.07.2019 அன்று சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு கொம்மடிக் கோட்டை,சந்தோஸ்நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,24.07.2019 அன்று புதூர் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,25.07.2019 அன்று கோவில்பட்டி ஒன்றியத்திற்கு V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,26.07.2019 அன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்கு மாவடிபண்ணை வட்டார வளமையம், அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,29.07.2019 அன்று கருங்குளம் ஒன்றியத்திற்கு செய்துங்கநல்லூர் RC நடுநிலைப் பள்ளியிலும்,31.07.2019 அன்று உடன்குடி ஒன்றியத்திற்கு கிறிஸ்தியா நகரம் தூ.நா.அ.தி.க. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,01.08.2019 அன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,02.08.2019 அன்று விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,06.08.2019 அன்று திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு அருள்மிகு திருச்செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,07.08.2019 அன்று கயத்தார் ஒன்றியத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,08.08.2019 அன்று திருவைகுண்டம் ஒன்றியத்திற்கு KGS தொடக்கப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனுடையோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 6,குடும்ப அட்டை நகல், வருமான சான்றிதழ் நகல் (இருப்பின்), தேசிய அடையாள அட்டை நகல் (இருப்பின்), ஆதார் அடையாள அட்டை நகல் (இருப்பின்) மற்றும் பிற மருத்துவ சான்றுகள் (இருப்பின்) கொண்டு வரவேண்டும்.எனவே 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த ஒன்றியங்களில் நடை பெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகர்சாமி (74) மற்றும் அவரது மனைவி சகுந்தலா (70) ஆகியோர், தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தனர்.அதில், ‘பாண்டியன் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடு, 90 பவுன் நகைகள் மற்றும் காரை தனது மகள்கள் கிருத்திகா, சியாமளா ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் இணைந்து அபகரித்துக் கொண்டனர். அத்துடன், எங்கள் இருவரையும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு சென்றுவிட்டனர். தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், முதியவர்கள் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தினார். அதேபோல், சொத்துக்களை கைப்பற்றி வைத்திருக்கும் மகள் கிருத்திகா, சியாமளா மற்றும் அவருக்கு உதவிய கணேசனையும் அழைத்து விசாரணை நடத்தினார்.அப்போது, சொத்துக்களைப் பறித்துக் கொண்டு பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டு இருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மகள்கள் அனுபவித்து வந்த திருநகர் பாண்டியன் நகரில் உள்ள 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பதிவுகளை ரத்து செய்த கோட்டாட்சியர் முருகேசன், அந்த வீட்டை மீண்டும் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.மேலும், அவர்களுக்கு சொந்தமான 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டுக் கொடுக்க திருநகர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
A.p.j.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி ரங்கோலி போட்டி வினாடி வினா போன்றபல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் சந்திராயன் 2 வெற்றியை பறைசாற்றும் விதமாக 5ஆம் வகுப்பு மாணவி ரக்சிகா சந்திராயன் 2 கோல மாவு மூலமாக சந்திராயன் வின்கலத்தை வரைந்து காட்டினார்
அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதுஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர் மற்றும் முகைதீனீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் .ஆங்கிலத்துறை தலைவர் செய்திருந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்..
அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் நடக்கும் கிராம சபைகள் குறித்து கிராம மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என கூறியும், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிராமசபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுவை கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உடனடியாக இந்த தண்டோரா மூலமாக இருக்கின்ற கிராம சபை கூட்டத்தை வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் குமார், ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம. ராஜா
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் சேம நல நிதி, கிராஜூட்டி தொதை 2018 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவில்லை.கடந்த3 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் இன்று (23/7/19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மண்டல பேரவை தலைவர் சிவபிரகாசம் தலைமை வகித்தார்.
மண்டல நிர்வாகிகள் திருநாவுக்கரசு, கோபால் முன்னிலை வகித்தனர். தலைவர் ராமநாதபுரம் கிளை தலைவர் பி.ராஜாராம் பாண்டியன், செயலாளர் ஜி.விஜயபாண்டியன், பொருளாளர் எம்.அன்சாரி, துணை தலைவர் பி.சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிள்ளையார் நத்தம் கண்மாய.குல்லல்க்குண்டுதெப்பக்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களின் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான குடி மராமத்து பணி சீரமைப்பு திட்டப்பணிகளை செய்யக்கூடிய சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. இக் கண்மாய்களின் சங்க அமைப்புகளில் சங்க நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு குளறுபடி இருப்பதாக கூறி அப்பகுதி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் சாலை மறியல் போராட்டம் இக் கண்மாய்களின் விவசாயிகளுக்கு இடையே சமாதானக் கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி, நிலக்கோட்டை தாசில்தார் நவநீத கிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நடத்தி வந்தனர்.
இந்த சமாதான கூட்டத்தில் பிள்ளையார் நத்தம் கண்மாய் நிர்வாகிகள் ஒருமனதாக சங்கத் தலைவராக ராஜாமணி, செயலாளராக நடராஜன், பொருளாளராக சதீஷ்குமார், மற்றும் துணைத் தலைவராக முனியாண்டி, துணைச் செயலாளராக கருத்த தேவர், ஆகியோர்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெப்பக்குளம் கண்மாய்க்கு சங்க நிர்வாகிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..அப்போது விவசாயிகளுக்கு இடையே எந்தவிதமான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உடனடியாக நேரடித் தேர்வு தேர்தல் நடத்தப்பட்டது. குலுக்குசீட்டு மூலமாக தெப்பக்குள சங்கத் தலைவராக ஜான் இன்னாசி , சங்க செயலாளராக மகாராஜன், சங்க பொருளாளராக தவமணி, சங்கத் துணைத் தலைவராக ஆசைத்தம்பி, துணைச் செயலாளராக ராயப்பன் தேர்வு செய்யப்பட்டனர்.இக்கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், லாவண்யா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணமுத்து, திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் ராகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்
சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் (13.08.2019) செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு அன்று மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வகையில்) உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு பதிலாக 31.08.2019 சனிக்கிழமை அன்று அலுவலக வேலை நாளாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.மேற்படி உள்ளுர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளுர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும் எனவும், திருநெல்வேலி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக்கருவூலங்களும் குறைந்த பட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சத்திரம் கடுகு சந்தையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீமான்ராஜ் மனைவி மேக வள்ளி, 19. முதல் பிரசவத்திற்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்து வந்தார். பிரசவ வலி அதிகரிப்பால் நிறை மாத கர்ப்பிணியான மேகவள்ளி , சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வயிற்றில் பனிக்குடம் உடைந்தது. ஆனால் குழந்தை பிரசவிக்கவில்லை. இதை தொடர்ந்து மேகவள்ளியை, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை பகுதியில் வந்தபோது மேக வள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு, டெக்னீசியன் நாகஜோதி மருத்துவ உதவி செய்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் . இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி, கடந்த 06.3 2015 ல் கழிப்பறை சென்றார். அப்போது, எதிர் வீட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராஜ்குமாரின் தந்தை கருப்பையா (60) தகராறை விலக்கினார். இதில் ஆவேசமடைந்த ரவிச்சந்திரன், கருப்பையாவை 7.3. 2015 ஆம் தேதி கீழே தள்ளி கழுத்து பின்புறத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்றார். இது தொடர்பாக கருப்பையாவின் மருமகள் ரேவதி புகாரின் அடிப்படையிச் ரவிச்சந்திரனை, எஸ்.பி.பட்டினம் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இறுதி விசாரணைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபி, ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வேலூர் தனியார் ஓட்டலில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.13 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது.இதில் எம்.பி. விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்எல்ஏ முனிரத்தினம், வேலூர் மாநகர தலைவர் டீக்காராமன் அடங்குவர்.
கே.எம். வாரியார்
திண்டுக்கல் மாவட்டம் (சித்தையன் கோட்டை) சேடபட்டி, கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த சரளா, லட்சுமி ஆகிய இருவரின் மகன்களுக்கு மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் சேடபட்டியை சேர்ந்த பழனிக்குமார், வடிவேல், தனசேகர் மற்றும் சென்னையை சேர்ந்த பார்த்தசாரதி, ஸ்ரீதர், சாந்தி ஆகிய 6 நபர்கள் போலி நியமன ஆணையை காண்பித்து ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அரியலூர் துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மடிக்கணிணி வழங்கப்படாததை கண்டித்து 22-07-2019 காலை 10 மணி முதல் திட்டக்குடி அரியலூர் பிரதான சாலையில் துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த போராட்டத்தில் இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டதாகவும் இதற்கு முன்பு படித்த மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.மேலும் உடனடியாக மடிக்கணிணி வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தினர்.இந்த சாலை மறியலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.சாலை மறியல் போராட்டம் 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.
இந்த போராட்டத்தை முடித்து வைப்பதற்காக சமரச பேச்சுவார்த்தை நடத்த துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி அவர்களும், குன்னம் துணை ஆய்வாளர் கோகிலா அவர்களும் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடனடியாக உங்களுக்கு மடிக்கணிணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு தேவையான லேப்டாப் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததன் பேரில் உறுதிமொழியை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் விடுபட்டுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உடனடியாக மடிக்கணிணி வழங்கப்பட வேண்டும். அதே நேரம் மாணவர்கள் போராடி பெற வேண்டிய அவலநிலை தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.