ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் நிர்மலாதேவி ஆகியோர் இணைந்து குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினர்
Category:
மாவட்ட செய்திகள்
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..
written by Abubakker Sithik
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார் பாத்திமா மேரி. அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து அதிவேகமாக வரும் போது பாத்திமா மேரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர்.
சம்பவத்தை அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காரில் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்ள்ளது. அதிலும் முடிவு எட்டப்படவில்லையெனில் சென்னை வருவாய் நிர்வாகஆணையர் அலைவலகம் முன்பாக 14000 வருவாய்த்துறை அலுவலர்களும் இரவுபகலாக காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி குமார் செய்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -3
( கி.பி 1299-1922)
மங்கோலிய
படைவீரர்கள் கொடூரமான
வர்களாக இருந்தார்கள்.
மங்கோலிய படைகள் புகும் எல்லா நாடுகளும் நாசப்படுத்தபட்டன.
பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
முதியவர்கள், குழந்தைகள் என எந்த இரக்கமும் இல்லாமல் மக்களை கொன்று குவித்துவிடுவார்கள்.
சொத்துக்களை தீவைத்து கொளுத்திவிடுவர்.
இதுபோன்ற கொடுமைகளை செய்துவிட்டு அந்த பகுதியில் எந்த நிர்வாகமோ,
ஆட்சிகளோ அமைக்காமல் விட்டு விட்டு அடுத்த பிரதேசத்திற்கு நகர்ந்து விடுவர்.
மங்கோலிய படைகள்,
ஓடுகிற மக்களை துறத்தி துறத்தி கொல்வார்கள்.
மக்கள் தங்கம்,மற்றும் விலை உயர்ந்த பொருள்களை,
தங்கள் வாய்களிலும்
உடலின் பாகங்களிலும் மறைத்து எடுத்துக்கொண்டு அடுத்த பிரதேசத்திற்கு ஓடும்போது,
அவர்களை வழிமறித்து அவர்களின் குடலை உறுவி,உறுப்புகளை அறுத்து தங்கம் மற்றும் பொருட்களை கைப்பற்றுவார்கள்.
ஆகவே மங்கோலியர்கள் என்ற தாத்தாரியர்களை
கண்டு மத்திய ஆசியாவே நடுங்கியது.
ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் அச்சத்தால் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தன.
இதுபோன்ற மத்திய ஆசிய நாடுகளில் ஏற்பட்ட வெற்றிடங்களால்
ஐரோப்பிய நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன.
இந்த சூழலில் செல்ஜூக்கிய கவர்னராக இருந்த உஸ்மான் அவர்கள் அருகிலுள்ள எல்லா நாடுகளின் மன்னர்களுடனும் பேசி
தன்னோடு இணைத்துக் கொண்டார்.
கட்டுப்படாத முரண்டு பிடித்த சிற்றரசுகளை படைகளை அனுப்பி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
மக்கள் உஸ்மான் அவர்களை மிகவும் நேசித்தனர்.
உஸ்மான் தன்னை மன்னராக கி.பி 1300 ஆம் ஆண்டில் அறிவித்தார்.
அவரின் பெயராலேயே
“உஸ்மானிய பேரரசு” என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூழலில் மங்கோலிய
படைகளை சூழ்ந்துகொண்ட
உஸ்மானிய வீரர்கள்,
முரட்டுத்தனமான மங்கோலிய வீரர்களை தங்கள் புத்தசாலித்தனமாக
வியூகங்களால் திணறடித்தனர்.
உஸ்மானின் நண்பரும் கவிஞருமான அஹமது புதிய ஆயுதங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.
அவர் வடிவமைத்த
நெருப்பு பொறிகளை உமிழும் ஆயுதவண்டிகள் சிறப்பாக பயன்பட்டன.
மங்கோலிய படைகளை சூழ்ந்த உஸ்மானிய வீரர்கள், எதிர்த்து வந்த மங்கோலியப்
படையை எதிர்கொள்ள,
தங்கள் படையை இரண்டாக பிரித்து வலது பக்கமும்
இடதுபக்கமுமாக நகர்ந்தனர்.
உஸ்மானிய படையின் ஒரு பிரிவு பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.
இந்த இரண்டு படைப்பிரிவுக்கும் இடையில் நுழைந்த மங்கோலியப்படை,
பின்னால் நகர்ந்த உஸ்மானிய படையை
நேரடியாக துறத்தி முன்னேறியது.
பக்கவாட்டில் இருபுறமும் நகர்ந்த உஸ்மானிய படையில் இருந்து புதியதாக வடிவமைக்கப்பட்ட ஆயுதவண்டிகளில் இருந்து திடீரென வீசப்பட்ட நெருப்பு பொறிகளால் மங்கோலிய படை திணறியது.
இறுதியில் வெப்பத்தை தாங்க முடியாமல் கிடைத்த இடங்களில் புகுந்து மங்கோலிய படைகள் சிதறி ஓடியது.
மங்கோலியப்படை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
மன்னர் உஸ்மானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணப்படுக்கையில்
வீழ்ந்தபோது மக்கள் அழுது புரண்டனர்.
கட்டமைக்கப்பட்ட பேரரசின் நிலை என்ன ஆனது..?
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து; இருசக்கர வாகனங்கள் சேதம்..
written by Abubakker Sithik
மதுரையில் நள்ளிரவில் தீவிபத்து; சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன; போலீசார் விசாரணை
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ் (வயது 26) லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முத்து ராஜ் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டின் அருகே நின்று சிகிரெட் குடித்து அணைக்காமல் அப்படியே போட்டு சென்றுள்ளார்.
சிகரட்டில் அணைக்காமல் இருந்த தீப்பொறிகள் அங்கிருந்த காய்ந்த இலைகளில் பற்றி திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சைக்கிள்கள் தீயில் கருகி சேதம் ஆகின. இது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்..
written by Abubakker Sithik
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்..
மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம் வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ” தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் பகுதிகளில் தேசிய போலியோ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தலின் படி திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் தனசேகரன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் மணிகண்டன், அழகுமலை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ் குமார், ஆய்வக நுட்புனர் மரியதாஸ் மற்றும் கெவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட 450 களப்பணியாளர்கள் 107 போலியோ தடுப்பு மையங்கள் மூலம் “தீவிர போலியோ சிறப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது. வலையன்குளம், சின்ன உடைப்பு, சோளங்குருணி, நிலையூர், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 107 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு மையங்களில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. பகல் 12 மணி நேரப்படி திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சுமார் 8,637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..
written by Abubakker Sithik
நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..
நூலக துறையில் அளப்பரிய சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணி நிறைவு பெற்றார். அவரது பணி நிறைவு விழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் நூலகர் பிரமநாயகம், நூலகத்துறை அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் என மேற்கொண்ட முன்னெடுப்புகள் பணிகள் மிகவும் சிறப்பானவை. தென்காசி நூலகர் பிரமநாயகம் தமிழ்நாடு அரசின் நோக்கங்களை முழுமையாக செயல்படுத்தி தென்காசி பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.
பொது நூலகத் துறையில் 1991 முதல் 33 ஆண்டுகாலம் நூலகராக படுக்கப்பத்து, சாத்தான் குளம், சிவகாசி, சங்கரன் கோவில், ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி, ஆரப்பாளையம், தென்காசி என பல நூலகங்களில் நூலகப் பணி செய்துள்ளார். தனது நூலக பணியில் 1994 ஆம் ஆண்டு மாநில நூலகர் விருதும், 2002 ஆம் ஆண்டு தற்போதைய நல் நூலகர் விருதும் பெற்றுள்ளார். நூலகத்திற்கு புரவலர் உறுப்பினர் நன்கொடை, கட்டிடங்கள், தளவாடங்கள், கணிப் பொறிகள் என ரூபாய் 25 கோடி மதிப்பிற்கு வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். நூலகம் குறித்த கட்டுரைகள், கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கு நூலகம் மூலம் வாசிப்பு பயிற்சி அவர்களுக்கு நூலக வார விழாவின் போது கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட அனைத்து வித போட்டிகளும் நடத்தி பரிசுடன் புத்தகங்களும் அளித்து மாநில அளவில் அதிக பள்ளி மாணவர்களை உறுப்பினராக தென்காசி நூலகத்தில் சேர்த்த பெருமை இவரை சாரும். பொது நூலக துறையில் இரண்டு முறை நல்நூலகர் விருது பெற்று சிறப்பாக கல்விப்பணி செய்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணியினை நிறைவு செய்தார்.
தற்போது தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் பதிவு செய்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் நூலகம் வருகை தந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த காலங்களில் இலவச பயிற்சி, இலவச மாதிரி தேர்வு, இலவச பயிற்சி கையேடுகள் நன்கொடையாளர் மூலம் வழங்கப்பட்டு, போதிய பயிற்சியும் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட மைய நூலக ரூ.6 கோடி மதிப்பில் அமைவதில் இவரின் பங்கும் அதிகமாக இருந்தது. இவரது பணி நிறைவு பாராட்டு விழா தென்காசியில் பிப்.29 அன்று மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் திருமலை முத்துக் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், திருநெல்வேலி மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன், தென்காசி மாவட்ட முதல் நிலை நூலகர்கள் முனியப்பன், திருநெல்வேலி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் வைலட், தென்காசி மாவட்ட நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் வட்டார நூலகர் முருகன், பாளை மைய நூலக நூலகர் முத்துலட்சுமி, உதவியாளர் ஜேசுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவிஞர் குழந்தை இயேசு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும் பெருமாள், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் முத்துராமலிங்கம், அலுவலர் ஒன்றிய மண்டல தலைவர் வெற்றிவேலன், மாவட்ட தலைவர் பழனிஸ்வரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் குமார், செயலாளர் அகிலன், முத்துக்குமார், ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், பயிற்சியாளர் அப்துல் ரகுமான், முத்து மணிகண்டன், சிவராஜ்வேல், ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரவணன், ஆலங்குளம் ராஜ் அகாடமி நிறுவனர் ஹரிகிருஷ்ணன், அபாக்ஸ் நிறுவனர் ராமசுப்பிரமணியம், தென்காசி மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சிவகிரி சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி, தென்காசி எல்ஐசி கிளை மேலாளர் செந்தில்குமார், ஆலங்குளம் எல்ஐசி மேலாளர் முத்துகிருஷ்ணன், தென்காசி மாவட்ட பத்திரிகை நிருபர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கணபதி பால சுப்பிரமணியன், ஜீவா மணிகண்டன், பாலசுப்ரமணியன், குமார், பாலமுருகன், பணி நிறைவு நூலக ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோருடன்,
எல்ஐசி அலுவலர்கள் ஸ்டாலின், அசோக் மற்றும் குமார், இ.எஸ்.ஐ மேலாளர் பணி நிறைவு ராஜகோபால், தலைமை ஆசிரியர் பணி நிறைவு ஆறுமுகம், வாசகர் வட்ட தலைவர், பால சுப்பிரமணியன், பொருளாளர் யோகாடவர் சேகர், சலீம், முகம்மது மீரான், நூலகர்கள் சுந்தர், முத்துமாணிக்கம், ராமசாமி, நாகராஜன், சண்முகவேல், ஜெய்லானி, மீனாட்சி சுந்தரம், நடராஜன், மீனாட்சி, சீனிவாசன், சக்திவேல், அண்ணாமலை சாமி, ஜூலியா ராஜ செல்வி, நிஷா, இலஞ்சி முருகன், நூலக கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, அன்னாள், கலா, கிறிஸ்டிபாய், அமுதா, ராஜேஸ்வரி, வீரக்குமார், வீரபுத்திரன், சுடலை மணி, சரவணன், ராமலட்சுமி, முத்துக்குமார், கோலப்பன், பரமசிவன், அருண்குமார், ஆரல்வாய்மொழி, கந்தன் பிள்ளை, செல்லம்மாள் பார்வதி, முருகன், ராதா லட்சுமி, சூரிய ஷிவானி, ஸ்கந்தனா, தென்காசி மைய நூலகத்தில் போட்டித் தேர்விற்கு பயின்று வரும் பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; 10 குழந்தை செல்வங்களுக்கு தங்க மோதிரம்..
written by Abubakker Sithik
தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்..
தென்காசியில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தென்காசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா தென்காசி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர திமுக அலுவலகத்தில் வைத்து புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து புதிய நீதி மன்றம் அருகில் கனி ஹார்டு வேர்ஸ் மைதீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, நகர கழக நிர்வாகிகள், அவைத் தலைவர் கிட்டு, துணை செயலாளர்கள் பால்ராஜ், ராம்துரை, பொருளாளர் சேக்பரீத் மாவட்ட பிரதிநிதிகள் பால சுப்பிரமணியன், மைதீன் பிச்சை, நகர்மன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் குமார் பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி முகமது ரபி, சுப்பிரமணியன், இசக்கி சுந்தர், இளைஞர் அணி இசக்கி துரை, முரளி, அருண், மணிராஜ், தொண்டரணி கோபால் ராம், மாணவரணி மைதீன், அறங்காவலர் இசக்கி ரவி ஆகியோருடன் வட்ட கழக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
written by Abubakker Sithik
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 02.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இதில், அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற ஏதுவாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் 182 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடனுதவி வழங்கும் தீட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்காக 71 பயனாளிகளுக்கு ரூ.13.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் முகாமில் ரூ.2,50,000 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ். மாவட்ட மின் ஆளுமை அலுவலர் துர்கா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராம சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கராசித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..
தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த.ஆடு திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் பட்டமுத்து என்ற நபர் அவருக்கு சொந்தமான 03 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆடுகளை திருடிய சிவராம பேட்டை பகுதியை சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (24) மற்றும் கண்ணன் என்பவரின் மகன் முப்புடாதி குமார் (24) ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை செய்த போது அவர்கள் அச்சன்புதூர் பகுதியில் நான்கு ஆடுகளும், சுரண்டை பகுதியில் மூன்று ஆடுகளும் மற்றும் ஆய்க்குடி பகுதியில் ஒரு ஆடும் ஆக மொத்தம் 11 ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட 11 ஆடுகளும் மீட்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுய உதவி குழுக்களுக்கு சிறந்த சேவையாற்றிய வங்கிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கல்..
written by Abubakker Sithik
நெல்லையில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் வழங்கினார். 2022-23 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01.03.2024 அன்று நெல்லையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட அளவில் சிறந்த சேவையாற்றிய திருநெல்வேலி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கேடயமும், மாவட்ட அளவில் சிறந்த சேவையாற்றிய வங்கி கிளையான இந்தியன் வங்கி (மைக்ரோசெட்) முதல் பரிசாக ரூ.15000 மற்றும் கேடயமும், திருநெல்வேலி ஜங்சன் ஐசிஐசிஐ வங்கி இரண்டாம் பரிசாக ரூ.10,000 மற்றும் கேடயமும், மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
சோழவந்தான் அருகே ராயபுரத்தில் அமைந்துள்ள சர்வதேச பொதுப்பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும், பள்ளி நிறுவனத் தலைவர் .செந்தில் குமார், பள்ளியின் தாளாளர் குமரேசன், உதவி தலைமை ஆசிரியர் அபிராமி மற்றும் டயானா, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா மற்றும் ரெய்ஹானா பேகம் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.மயில் முருகன் (வணிகவியல் துறை இணைப் பேராசிரியர், மதுரா கல்லூரி. ) மற்றும் டாக்டர். தினகரன் (விலங்கியல் துறை ,ஆராய்ச்சி மேற்பார்வையாளர் மற்றும் துறை தலைவர், மதுரா கல்லூரி) டாக்டர்.கிருஷ்ண ஜோதி (சமயம்,சமூகம் தத்துவவியல் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை.) வித்யாலட்சுமி (உதவி பேராசிரியர், சமூகவியல் துறை, லேடி டோக் கல்லூரி மதுரை.) டாக்டர்.அமல்ராஜ் (உதவி பேராசிரியர், வேதியியல் துறை, அருளானந்தர் கல்லூரி, மதுரை,) இவர்களுடன் சிறப்பு விருந்தினராக செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை ஆராய்ந்து பரிசுகள் வழங்கினர்.
இவ்விழாவில் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, ரொபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல், இயற்பியல், வேதியியல், உயிரியல், பாடத்தின் வரலாற்று நிகழ்வுகள், பண்டைய நாகரிகம், புவியியல், அரசியல் மற்றும் சட்ட அமைப்புகள் ஆகிய தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தி இருந்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். இக்கண்காட்சியில் மாணவர்கள் வீரப் பெண்மணிகளான வேலு நாச்சியார், ஜான்சி ராணி, இலட்சுமி பாய், வேடமணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமத்தில் ஆதி சிவன் நகரில் ரூபாய் 55 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெயர்த் தெடுக்கப்பட்ட சாலையை இதுவரை சீரமைக்காததால், கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லக்கூடிய குழந்தைகள், முதியோர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் பழுது ஏற்பட்டு வருவதால், கூலி தொழிலாளர்கள் இருக்கும் அப்பகுதியில் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், பள்ளி குழந்தைகள் முதல் முதியோர் வரை வெளியில் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரியிடம் முறையிட்டு எந்த பலனும் கிடைக்காததால், நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி..
written by Abubakker Sithik
போதைப் பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
பத்தாண்டுகளில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமல், ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. மதுரை எம்பி.சு. வெங்கடேசன் பேட்டி.
மதுரை பசுமலை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியின் 29ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி.சு. வெங்கடேசன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அப்போதே நாங்கள் கூறி இருந்தோம் தேர்தல் ஏப்ரலில் வருவதால் இவர்கள் மார்ச் என்று சொல்கிறார்கள். இதுவே டிசம்பர் மாதம் வந்தால் அக்டோபர், நவம்பரில் துவங்கும் என்று அறிவிப்பார்கள் என்று கூறியிருந்தோம். அதேபோல் மார்ச் மாதம் வேலை துவங்கும் என்றால் அந்த வேலைகள் நடைபெறுவதற்கான பார் சாட் என்று அழைக்கப்படும் எந்தெந்த மாதங்களில் எந்த வேலைகள் நிறைவு பெறும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய பார் சாட் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தோம் இப்போது வரை அதை தரவில்லை. எந்தெந்த கட்டங்கள் வேலை நடைபெறும் என்கிற அந்த பார்சாட்டை வெளியிட்டால் தான் மக்கள் நம்புவார்கள் இல்லையென்றால் இது தேர்தல் நடக்குமாகத்தான் பார்க்கப்படும்.
ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பத்து நாட்களுக்கு பயன்படுவதற்காக மத்திய அரசு அனுமதியும், அங்கீகாரத்தையும் அளித்துள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக நானும் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளேன். மோடியின் தொகுதியான வாரணாசி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் ஆக்கியுள்ளனர். அங்கு வரக்கூடிய பயணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகம் பிடிபடுவது குறித்த கேள்விக்கு:
தமிழக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே போதைப் பொருள் புழக்கம் மற்றும் விநியோகிக்கின்ற வலை பின்னல் போன்றவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்ராகார்க் தென்மண்டல ஐஜியாக இருந்த போது, பிடிபட்ட போதைப் பொருட்களை பாராட்டி நான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் கோடிக்கணக்கான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது மூடி மறைக்கப்பட்டுள்ளது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளேன். மாநில அரசும் மத்திய அரசும் மிகக் கூடுதல் கடுமையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்காக தென் மாவட்டங்களுக்கு திட்டங்களும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு:
இது வெறும் அறிவிப்பு தான். இரண்டு வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புக்கு, மக்களின் கண்ணீருக்கு நியாயம் வழங்குங்கள். மூன்று அமைச்சரவை சார்பாக குழுக்கள் தனித்தனியாக வந்து ஆய்வு செய்தார்கள் ஒன்றிய அமைச்சர் வந்த ஆய்வு செய்தார் அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தார்கள் என்று மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் நீதி கொடுக்கவில்லை என்று தெரிவிக்க பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா.
தொடர்ந்து மோடி தமிழகம் வருவதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலா என்ற கேள்விக்கு:
மோடி ஐந்து முறை வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை முறை வந்தாலும் அவரை தமிழக மக்கள் திருப்பி அனுப்புவார்கள் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தனியாக செல்போன் பேசி செல்லும் பெண்களிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.
மதுரை மாநகர் அவனியாபுரம் அருகே உள்ள CSA ஆலை பெரியசாமி நகர் முன்பு கடந்த மாதம் 21-ஆம் தேதி மதியம் வைத்தீஸ்வரி என்ற பெண் செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர். தொடர்ந்து அன்று இரவு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியிலும் இதே போன்று தனியாக நடந்து சென்ற பெண்ணின் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். ஒரே நாளில் 2 வெவ்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற நிலையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதனை தொடர்ந்து 23-ஆம் தேதி தல்லாகுளத்திலும், 24-ஆம் தேதி கூடல்புதூர் என அடுத்தடுத்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட பெண்களிடம் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்கள் என்பது போலீசார் விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.
மேலும் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது விலையுயர்ந்த R15 பைக் என்பது அதே பைக்கை பயன்படுத்தி அடுத்தடுத்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது. அந்த வாகனத்தின் எண்னை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் வாகனத்தில் சென்ற போது அதே எண் கொண்ட R15 பைக்கை 2 இளைஞர்கள் ஓட்டி சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்ற பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்த அக்கொள்ளையர்கள் டூவீலரை வேகமாக ஓட்டிச் செல்ல அவர்களை பின் தொடர்ந்து மடக்கி பிடித்த தனிப்படை உதவி ஆய்வாளர் மஞ்சமலை பாண்டியன் மற்றும் ராம்பிரசாத் ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் கம்பம் அருகே கேகே பட்டியை சேர்ந்த வீரரகு என்பவரது மகன் ஹரிபிரசாத் (22) என்பதும், மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் வீரக்கார்த்தி (24) என்பதும் தெரிய வந்தது. ஹரிபிரசாத் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வரும் பொழுது வீரகார்த்திக்குடன் கஞ்சா அடிப்பதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 5க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா..
by Askar
written by Askar
குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா..
பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இதனையடுத்து, பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டுவெடிப்பு போலவே உள்ளது பெங்களூரு மக்களுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான். குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.இந்நிலையில், இன்று குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்ஸில் வந்து டைமரை செட் செய்து குண்டு வெடிக்கச் வைத்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு வைத்து பா.ஜ.க. அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார்..
written by Abubakker Sithik
கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர் குழு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை இடைநிற்றல் செய்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி அறிவுரை வழங்கியதில், 1. ரோகித் இந்திரா காலனி, T. மானசேரி மற்றும் 2. புஷ்பாண்டியவர், நிறைமதி, சிவகாசி ஆகிய இரு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். என்ற விபரத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலவக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாள் விழா; திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
written by Abubakker Sithik
சோழவந்தான் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா; திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சோழவந்தான் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த தின விழா திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் அன்னதானம் வழங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனபாலன், ரேகா வீரபாண்டி, கார்த்திகா ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே போல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 71ஆவது பிறந்த தின விழா முன்னிட்டு திமுக சார்பாக அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் வக்கீல் சத்ய பிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், துணைத் தலைவர் லதா கண்ணன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் குருசாமி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் அன்னதானம் வழங்கினார். இதில் அவைத் தலைவர் தீர்த்தம், மீனவரணி முனியாண்டி, பணி நியமன குழு ஈஸ்வரி, ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்துச் செல்வி, சதீஷ்குமார், சிவா, நிஷா, கௌதமராஜா, செல்வராணி, ஜெயராமச்சந்திரன் கொத்தாலம் செந்தில், வேல் குருசாமி, முட்டை கடை காளி, சுரேஷ், மாணவர் அணி எஸ் ஆர் சரவணன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி மில்லர், நூலகர் ஆர் எம் எஸ் காலனி ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்து செல்வி, சதீஷ் நிஷா, கௌதம ராஜா, மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..
written by Abubakker Sithik
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இளைஞர் அணி தலைவர் சிவா வரவேற்றார். மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் அந்தோணிராஜ், மாநில நிர்வாகிகள் மரிய சுவிட்ராஜன், பிரபாகரன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
இந்த கூட்டத்தில், கோவையில் நடைபெறும் 41-வது வணிகர் தின மாநாட்டிற்கு மதுரை மண்டலத்தின் சார்பில் 1000 பேர் செல்ல வேண்டும். போதையில்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மதுரை மண்டலத்தின் சார்பாக முதல்- அமைச்சருக்கு ‘மிஸ்டுகால்’ கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ரவுடிகளிடம் இருந்து வியாபாரிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு தனியாக பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிர்வாகிகள் கண்ணன், வாசுதேவன், கரண்சிங், ஆதி பிரகாஷ், கார்த்திக், விரகனூர் பகுதி நிர்வாகிகள் சுருளிராஜன், ஆனந்தன், கார்த்திக், மகளிர் அணி பாக்கியலட்சுமி, ராஜம்மாள், கோகிலா, கிழக்கு பகுதி நிர்வாகிகள் ஜெயராஜ், பிச்சைபழம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொது செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..
லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் திருடிய மூன்று நபர்கள் கைது..
ஆய்க்குடி குதியில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை திருடி சென்றதாக அதன் மேலாளர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (35), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் அந்தோணி நிக்ஸன் ஜெயபால் (34) மற்றும் லூர்து என்பவரின் மகன் லூர்து அந்தோணி ராஜ் (30) வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது..
புளியரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பழனிச்சாமையில், சார்பு ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மேலக்குத்த பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த நைனார் என்பவரின் மகன் அர்ஜுனன் (60) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 5,280 மதிப்பிலான 92 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காளத்தி மடத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் சிறையில் அடைப்பு..
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளத்திமடம் வேத கோவில் தெருவில் சட்ட விரோதமாக விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வைத்திருந்த குருவன் கோட்டை பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் மகன் ஆதிபரமேஷ் (35) என்ற நபரை ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் வேல் முருகன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6500 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரும்பு பைப்புகளை திருடிய நபர் கைது..
தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளத்தில் பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு இரும்பு பைப்புகளை தோட்டத்தில் வைத்திருந்த நிலையில் அதை அடையாளம் தெரியாத யாரோ திருடி சென்றதாக தோட்டத்தின் காவலாளியாக வேலை பார்த்து வரும் நாராயணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவி விசாரணை மேற்கொண்டு மேற்படி இரும்பு பைப்புகளை திருடிய செட்டிகுளம் ஏழாவது தெருவை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் மகன் அற்புதராஜ் (37) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் திருடப்பட்ட 5500 ரூபாய் மதிப்பிலான இரும்பு பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நபர் சிறையில் அடைப்பு..
தென்காசி, குத்துக்கல் வலசை பகுதியில் பெண் ஒருவர் அவருக்கு சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும், இந்நிலையில் வீடு கட்டுவதற்கு கொத்தனார் வேலை செய்ய வந்த கார்த்திக் குமார் என்ற நபர் தன்னை பின்பக்கத்தில் வந்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவிப்பிரியா விசாரணை மேற்கொண்டு மேற்படி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த சாம்பவர் வடகரையை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் கார்த்திக் குமார் (39) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.
முன்னதாக தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.