மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 02.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இதில், அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற ஏதுவாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் 182 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடனுதவி வழங்கும் தீட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்காக 71 பயனாளிகளுக்கு ரூ.13.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் முகாமில் ரூ.2,50,000 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ். மாவட்ட மின் ஆளுமை அலுவலர் துர்கா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராம சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கராசித்திக்
You must be logged in to post a comment.