மாவட்ட செய்திகள்
கடலாடியில் தாசில்தாருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சஹர் உணவு மூலம் மனிதநேயத்தை வெளிப்படுத்திய கீழக்கரை அஹமது தெரு சகோதரர்கள்..
புனித ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை கொள்ளையடிப்பதில் ஒவ்வொருவரும் நற்காரியங்களும் உதவிகளும் போட்டி போட்டு செய்த வண்ணம் இருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் அன்றாட உணவு விருந்து என்ற பெயரில் ஆடம்பர விடுதிகளில் தங்கள் பெயரும், தான் சார்ந்து இருக்கும் இடத்திற்கும் விளம்பரம் செய்யும் நோக்கில் வீண் விரயம் ஆகிறது. அதே போல் இன்னும் பல இடங்களிலோ நல்ல மனம் இருந்தும் உண்ண உணவில்லாமல் வாடும் கொடும் நிலையும் நிலவுகிறது.
இந்த புனித ரமலான் மாதத்தில் தான் மட்டும் நல்ல உணவு உண்டால் போதாது, தேவையுடையவரையும் கண்டறிந்து அவர்களுக்கும் நல்ல உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கீழக்கரை அஹமது தெருவைச் சார்ந்த இளைஞர்கள் கீழக்கரை அருகே உள்ள இஸ்லாமிய குடும்பங்களை உள்ளடக்கிய ராசகுளம் கிராமத்திற்கு சென்று ரமலான் மாதத்தின் வலியுறுத்தப்பட்ட உணவான சஹர் உணவை அங்குள்ள மக்களுக்கு தயார் செய்து பறிமாறினர்.
இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை அஹமது தெரு சகோதரர்களே நேரடியாக சென்ற அவ்வூர் மக்களுக்கு உணவுகளை பறிமாறினர். ஆடம்பர உணவகங்களில் சுய விளம்பரத்திற்காக இஃப்தார் விருந்தும், சஹர் உணவும் எளியவர்களை தவிர்த்து பரிமாறும் வேலையில் அஹமது தெரு சகோதரர்களின் செயல் பாராட்டுக்குரியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் விழா..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக மாவட்ட துணை செயலாளர் கணேஸ் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தங்களின் கோரிக்கைகளான ஒரு பள்ளியில் ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு போதிய பாடவேலைகளை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால், அவர் தான் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமே தவிர, அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் அல்ல, இந்த பழி வாங்கும் போக்கை கண்டித்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக மாற்றி அதன் அடிப்படையில் ஆசிரியர்களை கணக்கிடு செய்ய வேண்டும் எனவும், 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தபட்டவர்களுக்கு பணி வரன்முறை செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு, ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கடலாடி வட்டாட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதம் கடலாடி வட்ட தலைவர் பழனி தலைமையில் மாவட்ட கொள்கை பரப்பு செலாளர் கார்த்திகை குமார், மற்றும் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100 பேர் கடலாடி தாசில்தார் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரவு நேர விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை…
இராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய விபத்துகளை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி ஓய்வு அளித்து ஓட்டுநர்களின் களைப்பு நீங்கிய பின்னர் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்படி, திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலை, தொண்டி, திருப்பாலைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நிறுத்தி, அந்த வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக சுடச் சுட தேநீர் வழங்கி ஓட்டுநர்களின் களைப்பினை போக்கி அனுப்பும் பணியில் திருவாடானை, திருப்பாலைக்குடி, திருவாடானை காவல் ஆய்வாளர்கள் போலீசாருடன் இணைந்து இந்த சேவை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட போலீசார் இரவு நேர தேநீர் உபசரிப்பு, ஓட்டுநர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பொதுமக்கள் மத்தியிலும் போலீசாருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் கணவன் மனைவி தனியார் தங்கும் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை …
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்க்கு நேற்று (06-06-2018) மாலை ஈரோடு மாவட்டம் பெரியபாலையம் எஸ்.எஸ்.டி.நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் வயது 36, இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி காளீஸ்வரி வயது 30 இருவரும் இராமேஸ்வரம் வந்திருந்தனர் .
இராமேஸ்வரத்தில் வீரபத்திரசாமி கோவில் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று (06-06-2018) மாலை முதல் இன்று (07-06-2018)காலை 11மணி வரை அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் கதவை திறக்குமாறு அறையில் தங்கியிருந்த சரவணனை அழைத்துள்ளார். ஆனால் அறையின் கதவு திறக்கப்படாததால் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த ராமேஸ்வரம் காவல்துறை துனைக் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர் அங்கு மதுவுடன் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சரவணன் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது விஷ பாட்டில் மற்றும் மதுபாட்டில் இருந்தது. மேலும் அவரின் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்த காவல்துறையினர் சரவணனின் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதியர் பற்றி தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடலைக்கைப்பற்றி போலீசார் உடல் கூறு சோதணைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லிங்கதுரை, மாவட்ட அமைப்பு செயலாளர் கனகராஜ், மகளிரணி செயலாளர் மகாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்ந ஆர்ப்பாட்டத்தில் நிர்வாக மாற்றங்களை கைவிட்டு மீண்டும் பழைய நடைமுறைகளை தொடர வேண்டும், கலந்தாய்வு நெரிமுறைகளிலுள்ள குளறுபடிகளை களைய வேண்டும், ஆசிரியர்களின் பணி நிரவலை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியாக சுடலைமுத்து நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சி தலைவர் தலைமையில் சுற்றுப்புற சூழல் பேரணி…
இராமநாதபுரம் மாவடட்டம் ராஜா தினகர் உயர்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினதத்தின் தொடரச்சியாக இன்று (07.06.2018) தமிழ்நாடு சுற்றுச்ச சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சார்பாக மாவடட் ஆட்சித் தலைவர் நடராஜன், ‘பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம்” என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் அறிஞர் அண்ணா நடுநிலைபப்ள்ளி, குமரன் நடுநிலப்பள்ளி, லூயிஸ் நடுநிலை பள்ளி, லெவல் மெட்ரிக்பள்ளி, ஆல்வின் மெட்ரிக்பள்ளி, கொழும்பாலம் உயர்நிலைப்பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, ராஜாதினகர் R.C உயர்நிலைபப்ள்ளி, புனித ஜோசப்உயர்நிலைப் பள்ளி, புனிதஜோசப் உயர்நிலைபள்ளி, நேஷனல் அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜா மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, முகமம்து தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஹவுசிங் போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் சுமார் 900கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில்கலந்து கொணடு “பிளாஸ்டிக் தவிர்ப்போம், மண் வளம் காப்போம், மரம் வளர்ப்போம், காற்றில் மாசை தவிர்ப்போம், நீர், நிலம், காற்றின் தூய்மை நமது சுகாதாரத்தின் மேன்மை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், விழிப்புணர்வை வாசகங்களை கோசமிட்டவாறும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்திடும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கபப் ட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்திடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இப்பேரணியானது ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி சிகில் ராஜவீதி, செய்யதம்மாள் மருத்துவமனை, வண்டிக்காரத் தெரு, அரண்மனைச் சாலை வழியாக இராஜா தினகர் உயர்நிலை பள்ளியில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவடட் வன உயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்.பரணிக்குமார், பி.வித்யா பரணிக்குமார், தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் உட்பட தலைமையாசிரியாக்ள், அரசு அலுவலர்கள், ஆசிரியார்கள், தேசியபசுமைப்படையின் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நில ஆவணங்களை கணினியில் திருத்தம் செய்யும் முகாம்..ஆட்சி தலைவர் இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவல்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் தலைமையில் நில ஆவணங்களை கணினியில் திருத்தம் செய்வது தொடர்பான முகாம் இன்று (07/06/2018) நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சுகிபிரமிளா, கீழக்கரை வாட்டாட்சியர் ராஜேஸ்வரி, நலிந்தோர் உதவிதிட்ட வட்டாட்சியர் கார்த்திகேயன், துணை வட்டாட்சியர்கள் ஜலாலுதீன், இராமமூர்த்தி, வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் உரையாற்றிய ஆட்சி தலைவர் நடராஜன், போலி பட்டா தயாரிக்க துணை போகும் நபர்கள் மற்றும் அரசாங்க வேலைகளுக்கு பணம் வாங்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் குற்றவாளிகள் தாக்கியதில் படு காயமடைந்த எஸ்.ஐ ஆறுமுக நயினார், முன்னர் ஏர்வாடியில் பணிபுரிந்தவர்..காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல்….
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் இருந்து இன்று (04-06-2018) ஏர்வாடி செல்லும் முக்கிய சாலையில் புல்லந்தை அருகே இருசக்கர வாகனம் ஒன்று மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மேலவலசையை சேர்ந்த உதயராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார், மேலும் அவருடன் பயணம் செய்த அவருடைய தந்தை நாகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த உதயராஜ் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தகவல் & புகைப்படம் உதவி : மக்கள் டீம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரஜினிகாந்த் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும்..தூத்துக்குடியில் தமிமுன் அன்சாரி பேட்டி..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையா?? பொதுமக்களை அலைக்கழிக்கும் மருத்துவமனையா??..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல நபர்களிடம் முயற்சி செய்தும் அவருக்இகு தேவையான ரத்த வகை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராஜேசின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதை கண்டு அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட ரத்த தான அமைப்பைச் சார்ந்த ஹுசைன் என்பவரிடம் தெரிவித்துள்ளார், உடனே அந்நபரும் அதே வகை ரத்தம் உடைய தன் நணபர் ஜாவத் என்பவரிடம் விபரத்தை கூறி மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார்.
ஆனால் மருத்துவர்களோ ஜாவித் நோன்பு நோற்பதால் இரத்தம் எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர், ஜாவித் மருத்துவரகளிடம் எவ்வளவோ விளக்கம் கூறியும் கேட்கவில்லை, உடனே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக நோன்பை துறந்து விட்டு, இரத்த தானம் அளித்து உயிருக்கு போராடிய அந்நபரை காப்பாற்றியுள்ளார்.
இது பற்றி ஜாவத் கூறுகையில், “எங்களுடைய மார்க்கம் மனித நேயத்தை போதிக்க கூடிய மார்க்கம், என் கண் முன்னால் உயிருக்கு ஆபத்து உண்டாவதை சகித்து கொள்ள முடியாது, ஆகையால் இவ்வாறு செய்தேன்” என கூறி அனைவரையும, நெகிழ வைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூங்கா அமைக்க எதிர்ப்பு வட்டச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனுஸ்கோடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்..
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகேயுள்ள புதுரோடு பகுதியில் உள்ள சுனாமி காலணியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அவரின் தம்பி பாலமுருகனும் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இன்று அதிகாலை வீட்டின் மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது அக்காள் செல்வி அக்கம் பக்கத்தில் உள்ள வர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இளைஞர் பால முருகனின் இறப்பில் சந்தோகம் உள்ளதாகவும்,இறப்பிற்க்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும், அவரின் உறவினர்கள் பாலமுருகனின் உடலை வாங்க மறுத்து தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் இதனை யடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த அரை மணிநேர திடீர் சாலை மறியலால் தனுஸ்கோடிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி செல்ல முடியாமல் நடுவழியில் அவதியுற்றனர். இச்சம்பவம் குறித்து தனுஸ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.