8
கீழக்கரையில் இருந்து இன்று (04-06-2018) ஏர்வாடி செல்லும் முக்கிய சாலையில் புல்லந்தை அருகே இருசக்கர வாகனம் ஒன்று மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மேலவலசையை சேர்ந்த உதயராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார், மேலும் அவருடன் பயணம் செய்த அவருடைய தந்தை நாகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த உதயராஜ் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தகவல் & புகைப்படம் உதவி : மக்கள் டீம்
You must be logged in to post a comment.