இராமநாதபுரம் மாவட்டம் மங்களம் ஊரில் ஸ்ரீசாய்கணேஷ் பாரத் கேஸ் திறப்பு விழா நடைபெற்றது. இத்துவக்க விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் இராமசாமி தலைமை வகித்தார், பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடேட் மேலாளர் ரமேஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருமதிசாந்த தெய்வேந்திரன் மருத்துவர் மனிஷா மெளனிகா குத்து விளக்கேற்றினர்.
இந்த புதிய நிலையத்தின் முதல் விற்பனையை இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் மற்றும் முதல் இணைப்பு பதிவை துவக்கி வைத்தனர்.
இவர்களுடன் தொழில் அதிபர் சொர்ணா சேதுராமன் உடன் பாரத் கேஸ் உரிமையாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், செளந்தர்யாபாரத் கேஸ் உரிமையாளர் மதியழகன், பாலாஜி பாரத் கேஸ் உரிமையாளர் சசிக்குமார், திருவாடனை காவல்துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், வாலி யாகேஸ் உரிமையாளர் முத்துராமாலிங்கம், விற்பனை மேலாளர் அகர்வால் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் ஹீசாய்கணேஷ் பாரத் கேஸ் உரிமையாளர், இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தெய்வேந்திரன் நன்றியை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.