திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சார்பாக கீழக்கரை திமுக நகர செயலாளர் பஷீர் அகமது மற்றும் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் இன்று (29/05/2021) நடமாடும் வாகனம் மூலம் கீழக்கரை அனைத்துப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதைப்பற்றி கீழக்கரை நிர்வாகிகளும் கேட்டபோது “இந்த கொரோனா பேரிடர் காலம் முடியும் வரை தினமும் ஆதரவற்றவர்களுக்கு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பில் தேவையுடையோருக்கு உணவு வழங்கப்படும்” என்று தெரிவித்தனர் .
You must be logged in to post a comment.