8
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.பாலாற்றின் ஓரத்தில் இந்த பேரூராட்சி ஊர் உள்ளது. இந்த பகுதி அனைத்துக்கும் இங்கிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.ஆனால் மணல் கொள்ளையாலும் ஆங்காங்கு பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் நீர் ஆதாரம் குறைந்துவருகிறது.மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீரும். பாலாற்றில் கலக்கிறது.இதனால் நீர் மாசுபடுவதோடு பல்வேறு நோய்கள் இப்பகுதி மக்களை நெருங்க உள்ளது.ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்ணை கட்டிகொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
You must be logged in to post a comment.