முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அவரது பிறாந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் பல்வேறு வகைகளில் மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இதனை தொடர்ந்து
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் சென்னன் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவில் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ஊராட்சி செயலாளர் முருகையன் கழக நிர்வாகிகள் வெங்கடேசன் துரைப்பாண்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இந்நிகழ்வில் கலைஞர் வாழ்க, கலைஞர் புகழ் வாழ்க, என்ற வீர முழக்கம் இட்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றிய திமுக சார்பில் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தில் கொரானா வைரஸ் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி தலைமையில் நடைபெற்றது.கலசப்பாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மருத்துவ குழுவினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின் பேரில் மருத்துவர் தேன்மொழி தலைமையில் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரத்துறையினர் முகாம் பணிகளை மேற்கொண்டனர் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நிகழ்வில், கலசப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆலோசனையின்படி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி விக்ரம், ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் நித்தியா விடுதலை ெ சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழரசன் , விலியர் கிரிஜா மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை பிரிவு மையம் மற்றும் கொரோனா தகவல் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் 02.06.21 புதன்கிழமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவிக்கையில்,
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தகவல் மையம் (HELP TESK) மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஆலோசனை பிரிவினை (POST COVID OP) தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற் கொள்பவர்களிடம் அவர்களது உறவினர்கள் உடல்நிலை பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக கொரோனா தகவல் மையம் 6374711850, 6374711851 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயாளிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லீன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் இன்று (ஜூன் 3, 1990).
ராபர்ட் நாய்சு (Robert Noyce) டிசம்பர் 12, 1927ல் பர்லிங்டன், அயோவாவில் பிறந்தார். அயோவா, கிரினெல்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வமாக பயின்றார். 1945ல் கிரின்னல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1949ல் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.ஏ. உடன் பி.ஏ. பீட்டா கப்பா பட்டம் பெற்றார். பிறகு 1953ல் எம்ஐடியிலிருந்து இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். 1947 ஆம் ஆண்டு பெல் ஆய்வகங்கள் உருவாக்கபட்டது. மேலும் டிரான்சிஸ்டர் உருவாக்க கல்லூரி இயற்பியல் வகுப்பில் ஆரம்ப காலத்தில் இருந்து உருவாக்க நினைத்தார். 1956ல், ஃபில்வோ கார்ப்பரேஷனுக்காக வேலை செய்யும் போது, நாய்ஸ் வில்லியம் ஷாக்லியை சந்தித்தார். வில்லியம் ஷாக்லி டிரான்சிஸ்டரின் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர். ஷாக்லியை செமிகண்டக்டர் ஆய்வக ஆராய்ச்சியாளர்களை நியமித்தார். அவர் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில், அதிவேக டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.
1968 ஆம் ஆண்டில், நாய்ஸ் மற்றும் மூர் ஆகியோர் தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்க ஃபேரைசில்ட் செமிகண்டக்டர் சென்றனர். சீக்கிரத்திலேயே அவர்கள் மற்றொரு ஃபேர்சில்ட் சக ஊழியரான ஆண்ட்ரூ க்ரோவ் உடன் இணைந்து, இன்டெல் கார்ப்பரேஷனை அமைத்தனர். 1971ல், இன்டெல் முதல் நுண்செயலியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு சிலிக்கான சிப் இணைப்பில் தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் செயலாக்கத்திற்கான சுற்றமைப்புடன் இணைந்தது. இன்டெல் விரைவில் நுண்செயலி சில்லுகளின் முன்னணி தயாரிப்பாளராக ஆனது. ஜாக் கில்பியுடைய புத்தாக்கம், புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் 6 மாதம் முந்தியது ஆனால், நாய்சு அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்தது, உற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட.
இன்டெல் மதர்போர்டு சில்லுத்தொகுப்புகள், நெட்வொர்க் இடைமுக கட்டுப்படுத்திகள் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், ப்ளாஷ் நினைவகம், கிராபிக் சில்லுகள், உட்பொதிக்கப்பட்ட செயலிகள் மற்றும், தகவல்தொடர்பு மற்றும் கணினி தொடர்பான பிற சாதனங்களையும் உற்பத்தி செய்கின்றது. குறைக்கடத்தி முன்னோடிகளான ராபர்ட் நோய்ஸ் மற்றும் கோர்டன் மூரே ஆகியோரால் நிறுவப்பட்டது. ஆண்ட்ரூ க்ரூவ் அவர்களின் செயல்பாட்டுத் தலைமை மற்றும் மேற்பார்வையுடன் பரவலாக இணைந்துள்ளது. இன்டெல் ஆனது முன்முனை உற்பத்தித் திறனுடன் மேம்பட்ட சில்லு வடிவமைப்புத் திறனை இணைக்கின்றது. இது அடிப்படையில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முதன்மையாகப் பெயர்பெற்றது. 1990 ஆம் ஆண்டுகளின் இன்டெல்லின் “இன்டெல் இன்சைடு” விளம்பரப் பிரச்சாரம் அதையும் அதன் பென்டியம் செயலியையும் மிகவும் பிரபலமாக்கியது.
1980களில், இன்டெல் உலகில் சிறந்த பத்து குறைக்கடத்திகள் விற்பனையாளர்களில் ஒன்றாக இருந்தது. 1991ல், இன்டெல் அதன் வருமானத்தின் மூலமாக மிகப்பெரிய சில்லு உற்பத்தியாளரானது. அது எப்போதும் பெற்றிடாத இடத்தைத் தக்கவைத்தது. AMD, சேம்சங், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், தோஷிபா மற்றும் STமைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை பிற தலைசிறந்த குறைக்கடத்தி நிறுவனங்கள் ஆகும். PC சில்லுத் தொகுப்புகளில் வியா டெக்னாலஜிஸ், சிஸ் மற்றும் என்விடியா உள்ளிட்டவை போட்டி நிறுவனங்கள் ஆகும். ப்ரீஸ்கேல், இன்பினோன், பிராட்காம், மார்வெல் டெக்னாலஜி குரூப் மற்றும் AMCC உள்ளிட்டவை நெட்வொர்க் துறையிலும், மற்றும் ஸ்பேன்சியன், சேம்சங், க்யூமோண்டா, தோஷிபா, STமைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹைனிக்ஸ் உள்ளிட்டவை ப்ளாஷ் நினைவகத் துறையிலும் போட்டி நிறுவனங்களாக உள்ளன.
ராபர்ட் நாய்சு, ஃபாரடே பதக்கம்(1979), ஹரோல்ட் pender விருது(1980), ஜான் ஃபிரிட்ஸ் பதக்கம்-(1989) போன்ற விருதுகளை பெற்றார். இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு ஜூன் 03, 1990ல் தனது 62வது அகவையில் ஆஸ்டின், டெக்சசில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம் இன்று (ஜூன் 3, 1924).
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 ஆம் நாள் உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார்.
சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953ல் மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.
கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது ஆகும். இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார். 1957ல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, “மொழிப்போராட்டம், எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.
மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். 1960 ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். 1969 ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கைத்தமிழருக்காக கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத்தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப்பிடித்த பின்னர் கா.ந.அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். அண்ணாதுரை மறைவுக்குப் பின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
கருணாநிதி 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7, 2018ல் தனது 94வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).
உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி” என்பதை அங்கீகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். உலக மிதிவண்டி நாள் இனம், மதம், பாலினம், வயது, பாலியல் சார்பு, அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் நாள் ஆகும். உலக மிதிவண்டி நாள் தற்போது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது.
மோட்டார் வாகனங்களின் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களும் வங்கிகள் அளிக்கும் சுலப தவணை திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். டெல்லியில் பெருகிவிட்ட வாகன பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அரசு. ஒற்றை இலக்க வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க வாகனங்கள் ஒரு நாளும் செயல்படுத்த விதி முறைகள் கொண்டு வந்தும் பலன் கிடைக்கவில்லை. வாகனப் புகை அதிகரிப்பை கட்டுப்படுத்த 2000 சிசி வாகனங்கள் விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதுவும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. வாகனப் பயன்பாட்டையும், மாசுபெருக்கத்தையும் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எதுவுமே வெற்றியடைவதாகத் தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மிக எளிமையான, மலிவான தீர்வு ஒன்று உள்ளது. ஆனால், அதைப் பின்பற்ற நம்மில் யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுதான் சைக்கிள். சமீபத்தில் சக்தி மற்றும் வளம் சார்ந்த மையமான தெரி (TERI) அமைப்பு அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்போடு ஒரு ஆய்வை இந்தியாவில் நடத்தியது.
அதில் இந்தியர்கள் குறைந்த தூரத்துக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்தாலே ஆண்டுக்கு ரூ. 1.80 லட்சம் கோடி மிச்சமாகும் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். உடல் நலனும் நன்றாக இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் சைக்கிளைப் பயன்படுத்தினால், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். பயன்பாடு குறைந்தால், கச்சா எண்ணெய்யின் தேவை குறையும். தானாகவே அதன் இறக்குமதி அளவும் குறையும். இப்படி ஒருபக்கம் நேரடியான பொருளாதார பலன்கள் கிடைப்பதோடு, உடல்நலன் பாதுகாக்கப்படுவதன் மூலம், தனிநபர்களின் மருத்துவ செலவும் குறையும். இவ்விதம் மிச்சமாகும் தொகை 2015-16-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 1.6 சதவீதம் ஆகும். குறைந்தது 8 கி.மீ. பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறைந்தாலே மிச்சமாகும் எரிபொருள் தொகை ரூ.2,700 கோடியாகும். இதேபோல கார் உபயோகத்துக்குப் பதிலாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதால் உடல் நலன் காக்கப்படும். இதனால் மிச்சமாகும் மருத்துவ செலவு தொகை ரூ.1,43,500 கோடியாகும்.
வாகன புகையால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க செலவாகும் ரூ.24,100 கோடியும் மிச்சமாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்போதுதான் முதல் முறையாக ஆதார பூர்வமாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின்படி, சராசரியாக ஒருவர் 3.5 கி.மீ. தூரம் நடந்தால் ரூ.11,200 கோடி மிச்சமாகுமாம். மேலும் 10 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படும். மிச்சமாகும் தொகை ரூ.1.80 லட்சம் கோடியானது சுகாதாரத் துறைக்கு அரசு ஓர் ஆண்டுக்கு செலவிடும் தொகையை விட அதிகமாகும். 2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியாவில் சைக்கிள் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை ஒரு சதவீத அளவுக்கே வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் கிராமப்பகுதிகளில் இந்த வளர்ச்சியானது 3.4 சதவீதமாக இருந்தது. நகர்ப்பகுதிகளில் சைக்கிள் உபயோகம் 4.1 சதவீதம் சரிந்துள்ளது. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்றான கருத்து மேலோங்கியதும் சைக்கிள் உபயோகம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாயிற்று. மேலும் மாநில அரசுகள் இலவசமாக சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கத் தொடங்கின.
பெரும்பாலும் இவை தரமற்றவையாக இருந்ததால் சைக்கிள் மீதான அபிப்ராயம் சரிந்தே போனது. முன்பெல்லாம் தாத்தா உபயோகித்த சைக்கிளை பேரன் வரை பயன்படுத்தினர். ஆனால் இப்போது ஒரு குழந்தையே மூன்று நான்கு சைக்கிளை பயன்படுத்தும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு உள்ளது சைக்கிள்களின் தரம். சைக்கிள் நமக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் பயனளிக்கும் வாகனம் என்ற எண்ணம் அதிகரிக்கும்போதுதான் சைக்கிள் உபயோகம் அதிகரிக்கும். அதுவரை வாகன நெரிசலும், சூழல் மாசையும் அதற்கு விலையாகத்தான் தர வேண்டியிருக்கும். மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால், மோட்டார் வாகன உற்பத்தி குறையும். அல்லது, குறைந்த அளவே கரியமில வாயு வெளியாகும்படியான வாகனங்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கும். அப்படிச் செய்தால் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் சுமார் நூறு டன் கரியமில வாயு வெளியீட்டிலிருந்து பூமி தப்பிக்கும். காற்று மாசு, சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்குவதோடு பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். அதனால் மனிதர்களின் உற்பத்தித் திறனும், வாழ்க்கைத் தரமும் குறையும்.
பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று. தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும். இதன் பிறகு மிதிவண்டியை இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர் மக்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது. இந்த சைக்கிள் 1818 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் மெருகேறுவது வழக்கமான விசயம்தானே. சைக்கிளும் அதற்கு விதிவிலக்கல்ல.
அதுவரை மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818 ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் எனப்படும் மிதி இயக்கி இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சைக்கிளில் பின்புறச் சக்கரம், முன்புறச் சக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரிதாக இருந்தது. அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிசாக்ஸ் அவரது தீவிர உழைப்பின் பலனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முந்தைய சைக்கிள்களை விட மிசாக்ஸ் கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.
சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சக்கரம் என்னவோ மரத்தால் ஆனதாகவே இருந்தது. இதற்கும் ஒரு தீர்வு கண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி. பென்னி பார்த்திங் என்ற கொல்லருடன் இணைந்து, சைக்கிளின் சக்கரங்களையும் அவர் உலோகத்தில் உருவாக்கினார். இவர்களது முயற்சியின் விளைவாக 1872ம் ஆண்டு பெண்களும் பயன்படுத்தும் வகையிலான புதிய நேர்த்தியான சைக்கிள்கள் உருவானது. பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்கள் இந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வந்தது. 1876ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டு தான், ஹென்றி லாசன் என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) போன்றவற்றை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இப்படியாக ஒவ்வொரு மாற்றங்களாய் பெற்று, 1885ம் ஆண்டு சான் கெம்பு இசுட்டார்லி என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை உருவாக்கினார். இவர் தான் இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் வடிவமைத்த மாடலைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.
ஆனால் நம் நாட்டில் போக்குவரத்திற்குப் பயன்படுத்த சைக்கிளை உடற்பயிற்சிக்கான ஒரு கருவியாக மாற்றி வைத்திருக்கிறோம். இது நிச்சயம் சைக்கிளின் 2.0 வெர்சன் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் ஒரே இடத்தில் சைக்கிள் போன்ற இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்வதைவிட இயற்கையான சூழலில் நிஜ சைக்கிளை ஓட்டுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். சென்னை போன்ற மாநகரங்களில் காலை அல்லது இரவு நேரத்தில், போக்குவரத்து குறைந்த சாலைகளில் பலர் சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் தான் என்றாலும், இப்படியாவது அதனை பயன்படுத்துகிறார்களே என நிம்மதி அடைய முடிகிறது.
மிதிவண்டியை ஓட்டுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி தசைகள் வலுப்பெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையவும் உதவுகிறது. மிதிவண்டி ஓட்டுவதால் ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கலோரிகள் வரை எரிக்க முடியும். நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். எரிபொருள் தேவை குறையும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக்கொண்டே போவதால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற, இத்தகைய மாற்று வழிகளைக் கொள்கை அளவில் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பாதித்தோருக்கு உற்சாகமூட்டி உதவிகள் வழங்கும் ‘ வார் ரூம் ‘ …… பொதுமக்கள் வரவேற்பு..
கொரோனா தொற்றினை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . பேரிடரான இக்கால கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி களுக்கு,தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் , மருத்துவ வசதிகள் , வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிக்கு தேவையான மருத்துவம் , உணவு வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி , பலசரக்கு , பொது சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க கலெக்டர் அலுவலகத்தில் ‘ வார் ரூம் ‘ திறக்கப்பட்டுள்ளது . மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமிற்கு கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை யில் , டி.ஆர்.ஓ ராஜசேகர் , தாசில்தார் பாண்டி கீர்த்தி, மற்றும் டாக்டர்கள் , வருவாய்த்துறை ஊழியர்கள் , செவிலியர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இரவு , பகல் என 3 ஷிப்டாக பணியாற்றி வருகின்றனர் . கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்த ஒரு அணியும் , மருத்துவ மனையில் சிகிச்சை யில் இருப்போருக்கு தேவையான உதவி கள் , ஆக்சிஜன் தேவைப் படுவோருக்கு உடனடியாக கிடைக்கவும் , அதனை நிவர்த்தி செய்ய ஒரு அணியும், சிகிச்சை யில் இருக்கும் நோயாளின் நிலை குறித்து உறவினர் கள் கேட்கும்போது , அதற்கான தகவலை உடனே பெற்று , அவர்களுக்கு தெரிவிக்க ஒரு அணியும் , சமூக வலைதளத்தில் கொரோனா தொடர்பான வரும் தகவலுக்கு உடனுக்குடன் பதில் கூறுதலுக்கு என ஒரு அணியும், பொது மக்களுக்கு காய் கறி , பலசரக்கு வேண்டும் என வார்ரூமுக்கு தகவல் வந்தால் , உடனே அதற்கான ஏற்பாடு செய்தல் , வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிக ளுக்கு தேவையான உணவு , அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய ஒரு அணி யும் , செவிலியர்கள் , ஆசி ரியர்கள் சேர்ந்து மாவட் டத்தில் 14 நாளுக்கு தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிகளை தினசரி அவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன சாப்பிட் டீர்கள் , மருந்து மாத்திரை எடுத்து கொண்டீர்களா , உங்களுக்கு என்ன தேவை , வீட்டில் தனியாக இ ல் லாமல் , டிவி பாருங்கள் , நல்ல புத்தகம் படியுங்கள் , வீடியோ கேம் விளையா டுங்கள் , தேவையானால்எங்களிடம் பேசுங்கள் . காலை , மாலையில் உடற்ப யிற்சி மேற்கொள்ளுங்கள் என தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஊக்கப்படுத்தி இவர்களுடன் நெருக்கமாக உறையாடி , நோய் குறித்த பதட்டமே இல்லாமல் , சாதாரண நபராக இருப்ப தாக கருதும் வகையில் , கவுன்சிலிங் கொடுக்க ஒரு அணி என இப்படி 9 அணி கள் பிரிக்கப்பட்டு பணிகள் வேகமடைந்துள்ளன . கொரோனா நோயா ளிகளுக்கு நல்ல ஊக்கத் தையும் , நோய்க்கு அப்பால் உற்சகத்தையும் கொடுத்து வரும் இந்த அணி பணியா ளர்களுக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது….. போனில் அழைத்தால் உதவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘ வார் ரூம் ‘ உதவிகளை பெற , டோல் ப்ரீ எண் அறிவிக்கப்பட்டுள் ளது . இதன்படி ‘ 1077 ‘ என்ற எண்ணை அழைக்கலாம் . அல்லது வாட்ஸ்அப் எண் , ‘ 95971 76061 ‘ என்ற எண்ணி லும் தொடர்பு கொள்ளலாம் . பொது போனில் , ‘ 0452 -2530104 , 2530106 , 2530107 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . முன்பு கட்டுப்பாட்டு அறை என இருக்கும் . அதில் ஒன் றிரண்டு பேர் அமர்ந்து வரும் தகவலை பதிவு செய்யம் பணியையே செய்வர் . இப்படி அணி அணியாக அமர்ந்து , தேவையான உதவிகள் செய்ததில்லை . ஆனால் , புதிய அரசு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு துறை ஊழியர்களை கொண்ட இந்த 9 அணிகள் , தேவையான அனைத்து உத விகளையும் உடனுக்குடன் இரவு பகல் பாராது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது . இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் உடனுக்குடன் தமிழக அரசின் தலைமை ‘ வார் ரூம் ‘ அனுப்பி வைக்கப்படுவதால் , தொய்வின்றி மக்களுக்கு சேவை கிடைக்கிறது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் பகுதியில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் சுத்தம் செய்வதில் பொதுப்பணித்துறையினர் மெத்தனம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற 4ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி பாசன வசதி பெறும் அலங்காநல்லூர் பகுதியில் பிரதான கால்வாய்கள் மற்றும் துணை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வசதி பெறும் விவசாயிகள் ஒருபுறம் துணை கால்வாய்களை சுத்தம் செய்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் பாசன வசதி பெரும் துணை கால்வாய் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கிடப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் மன வேதனை தெரிவித்தனர். எனவே பொதுப்பணித்துறையினர் முறையாக சுத்தம் செய்து கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது :நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் மற்றும் நிதி நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வார காலம் சென்னையில் இருந்தேன்.அப்போது மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடர் கண்காணிப்பில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார்.நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று மூன்று வாரங்கள் ஆகிறது.எங்கள் தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் தெளிவான ஒரு கட்டளையையிட்டு கொரோனா கட்டுப்பாட்டில் அனைவரும் கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தினார் .அதன் அடிப்படையில் பதவி ஏற்பு முடிந்து மதுரைக்கு வந்த முதல் நாளில் இருந்து நானும் அமைச்சர் மூர்த்தியும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.அன்றே சித்த மருத்துவ வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தோம்.இன்றைக்கு மதுரையில் மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்த சூழல் மிகவும் சிறப்பாக மாறி முன்னேற்றம் அடைந்துள்ளது.ஒரு காலத்தில் படுக்கை வசதிகள் இல்லை,ஐ சி யு படுக்கை பற்றாக்குறை ,ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவகையிலும் பிரச்னை இருந்தது.கண்காணிப்பு அலுவலர் சந்திர மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகிய இரு ஐ ஏ எஸ் அதிகாரிகளும் மருத்துவர்கள்.மதுரையை நன்கு அறிந்தவர்கள் .அதே போல் மாநகராட்சி ஆணையர் விசாகன் அமைச்சர் மூர்த்தி மற்றும் என்னுடைய அறிவுரைகளை ஏற்று விஞ்ஞான முறையில் நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .இன்றைக்கு இருக்க கூடிய சூழ்நிலையில் படுக்கை வசதி ,ஆக்சிஜன் வசதி ,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைகள் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறோம்.மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையே இதற்கு காரணம் .தகவல்களை திரட்டி செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆக்ஜிசன் கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. திட்டமிட்டு படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.இது மட்டுமல்லாமல் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அவர்களின் அறிவுரைகள் கேட்டு படிப்படியாக பணிகள் மேற்கொண்டோம்.மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை தாண்டி கிராமங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆங்காங்கு நடைபெற்ற செயல்பாடுகளால் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டது.கூடுதல் மருத்துவர்கள் 3500 ற்கும் மேற்பட்ட கூடுதல் முன் கள பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடி சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் நாங்கள் அளித்த வாக்குறுதியை முதல்வரின் வழிகாட்டுதலில் காப்பாற்ற முடிந்துள்ளது.13 ஆம் தேதி இருந்த நிலையை மாற்றி புது புது இடங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தோப்பூரில் மட்டும் 400 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கினோம்.அரசு,அமைச்சர்கள் ,ஆட்சியர் உள்ளிட அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிலையை எட்டி உள்ளோம்.தற்போதும் இந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டி உள்ளாரே?
மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கான தகவல் இருந்தால் அளிக்கட்டும்.கொரோனா இறப்பை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள அடிப்படை வித்யாசத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்.இது குறித்து நான் வழக்கே தொடர்ந்துள்ளேன்.கடந்த ஜூலை ஆகஸ்டில் அவர்கள் கொரோனா இறப்பை 200 என கணக்கு காண்பித்தார்கள் .அன்றைக்கு இரண்டே இரண்டு மயானத்தில் 1400 பேருக்கு இறுதி சடங்கு நடந்தது .நான் அப்போதே தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மறுப்பு தெரிவித்தேன்.வழக்கும் தொடர்ந்து அரசாங்கத்தை நீதிமன்றம் தட்டி கேட்டது.அத்திவாசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே ?
பொதுவாகவே இயல்பான ஊரடங்கு காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அதில் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும் .அமைச்சர் மூர்த்தி இதில் தனிக்கவனம் செலுத்தி அதிகாரிகளிடம் நாங்கள் ஆலோசனை நடத்தி பொருட்கள் வழங்குவதில் பற்றாக்குறையும் விலை ஏற்றமும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்தோம்.சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும்.அந்த வகையில் தான் சமீபத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு 64000 ரூபாய் பணம் திரும்ப பெற்று தரப்பட்டுள்ள்ளது.இந்த தவறுகள் மறுபடியும் நடைபெறாத வகையில் அமைச்சர் தலைமையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளோம்.கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம் .இத்தனையும் தாண்டி தனிப்பட்ட முறையில் தவறுகள் நடந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து ?
தமிழ் நாட்டிலேயே தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைத்தது மதுரை மாவட்டத்தில் தான்.இங்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது .அரசியல் பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.மாநில அளவில் நமக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணம் மத்திய அரசு சொல்கிறது மருந்துகளை மாநில அரசு வாங்கிட கூடாது என்கிறது .ஆனால் தடுப்பு ஊசிகளை வாங்கி கொள்ளுங்கள் என்பது எப்படி நியாயமாக இருக்கும்.உலக அளவில் தடுப்பூசி குறைபாடு இருக்கிறது .எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 8 கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்து உள்ளார்கள் .அதனை தமிழ்நாட்டின் அனைவரும் சேர்ந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.நாட்டின் அளவில் உலகத்தியிலேயே அதிக உற்பத்தி மருத்துவ துறையில் வைத்துள்ள இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது .திட்டமிடாமல் சில மாதங்களுக்கு ஏற்றுமதி ஏன் செய்தார்கள் ஒன்றிய அரசு என்பது மேலாண்மை குறையை தான் காட்டுகிறது.ஆனாலும் தமிழகத்திற்கும் மதுரைக்கும் கருப்பு பூஞ்சை மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது .தடுப்பூசியை பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது .தொலை நோக்கு பார்வையோடு இதனை அணுகி தொழிலதிபர்கள் சி எஸ் ஆர் மூலம் 5000 முதல் 8000 லிட்டர் ஆக்ஜிசன் உற்பத்தியை இங்கு இருந்தே செய்திடும் திட்டமும் உள்ளது.அதே போல் தடுப்பூசி உற்பத்தியில் கவனம் செலுத்துவோம் இதனை பாடமாக எடுத்துக்கொண்டு தடுப்பூசி உற்பத்தியை கொண்டு வருவதற்கான அம்சங்கள் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டில் இடம்பெறும்.மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் மாநில அரசு திட்டங்களை பெற முடியவில்லையா ?
ஜனநாயக நாட்டில் மத்திய மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் அல்ல .இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும் .மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை .அதனை விடுத்து அரசியல் செய்யவா ஒன்றிய அரசு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் உடன் இருந்து கவனித்து கொள்பவர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது இதில் ஏதேனும் குறை இருந்தாலும் எங்கு குறை உள்ளது என தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சோதனை செய்த போலீசார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.எனவே கார்த்திகை கைது செய்த பெருங்குடி போலீஸார் சாராயம் காய்ச்சுவதற்கான தேவையான பொருட்களை பறிமுதல் செய்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி:
மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும், மதுரை மாவட்டத்தில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.கிராமபுறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது, கிராம புறங்களில் வீடு வாரியாக பரிசோதனை மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் -கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை வழங்குதல்.
டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நாளை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் ஆடைகள் வழங்கினர்
.இதில் கலைஞர் சேவை மைய தலைவர் வெங்கடேஷ், மற்றும் மாநில தொழிற்சங்க துணை தலைவர் லெக்ஷ்மணன் ஆகிபோர் பார்வையற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 40 பேருக்கு ஆடைகள் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் தொற்றுபாதிக்கப்பட்டவரா போன் செய்தால் போதும் வீட்டிற்கே இலவசமாக உணவு கொடுத்து வரும் தன்னார்வலர்: குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாவட்டத்தில குரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கடந்த நான்கு தினங்களாக குறைந்து வந்தாலும் வந்தாலும் வீட்டில் 7047 பேர் தனிமைப்படுத்தி கொண்டனர். அவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது உணவுதான். அதுவும் சத்தான சுகாதாரமான உணவு தேவை என்பதை கருத்தில் கொண்டு
மதுரை அண்ணாநகர் பகுதியில் சக்கரா ரெஸ்டாரண்ட் நடத்திவரும் அறிவழகன் தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் உடன் இருப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று இலவசமாக மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகிறார்.உணவே நோய்க்கு அருமருந்து என்பதால் அறிவழகன் – லட்சுமி தம்பதியினர் தங்களது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.அதன்படி மதுரை வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, கேகே நகர், விரகனூர், முனிச்சாலை, ஐயர் பங்களா பிபி குளம் என பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உடன் இருப்பவர்கள் இலவசமாக உணவுகளை பெற்று வருகின்றனர்.இதற்காக பிரத்தியோக சமையலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து அறிவழகன் கூறும்போது தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள் போன் செய்தாலே போதும் அடுத்த நொடியே உணவை எடுத்துக்கொண்டு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உணவை இலவசமாக வழங்கி வருகிறோம் என்றும், மூன்று வேளையும் உணவு வழங்கி வருவதாகவும், தற்போது ஒரு நாளைக்கு 300 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 10 நாட்களாக இந்த பணியை செய்து வருவதாகவும் மதுரை மாவட்டத்தில் ஒருவரும் கூட குரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வரை இந்த பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.இவரது இந்த சேவையை மதுரை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல்துறை
மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக கொரானா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும், கலெக்டர் அனுமதியுடனும் 4 இடங்களில் (s s காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது.
இதில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி . மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.அதை பெற்றுக்கொண்டு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை என்பது இருக்காது.அமைச்சர் செந்தில் பாலாஜி…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை மின்தடை என்பது இருக்காது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை என்பது இருக்காது. பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. ஊராடங்கினால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதாலும் அவர்களது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் நிறைவுற்ற பிறகு பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
EMI கட்டணம் கட்ட பொது மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் ,ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை !
EMI கட்டணம் கட்ட பொது மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் ,ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை !
வீட்டு வாடகை, EMI, கால அவகாசம் வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது .
கோரோனா காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கி வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி இருக்கும் இந்த நேரத்தில் வீட்டு வாடகை பணம் தர வேண்டி வீட்டின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வரும் சூழல் உள்ளது .ஆகவே ஊரடங்கு தளர்வு வரும் வரையில் வீட்டு வாடகைக்கு கால அவகாசம் வழங்க நடவக்கை எடுக்க வேண்டும் .
தனியார் நிதி நிறுவனத்தில் பொது மக்கள் மாத தவனை முறையில் வீட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் வாங்கி உள்ளார்கள். இந்த கோரோனா காலத்தில் அன்றாட குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு உள்ளனர். ஆக்வே வட்டி இல்லாமல் கடனை மட்டும் செலுத்த கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அவ்மனுவில் கூறியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை அவர் சார்ந்த கிருஸ்துவ மதத்தின் முறைப்படி நல்லடக்கம் தமுமுகவின் நிர்வாகிகள்…
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து வரும் நபர்களின் உடல்களை ஜாதி மதம் பார்க்காமல் அவரவர் மதத்தை சார்ந்து அடக்கம் செய்து வருகின்றனர்.கிட்டதட்ட இதுவரை சுமார் 79 பேரின் உடல்களை தமுமுகவின் நிர்வாகிகள் அடக்கம் செய்துள்ளனர் இந்நிலையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்து தருமாறு அவரது உறவினர்கள் திண்டுக்கல் நகர தமுமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனர் உடனடியாக தமுமுக வினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று முறைப்படி இறந்தவரின் உடலை பெற்று அவர் சார்ந்த கிருஸ்துவ மதத்தின் முறைப்படி நல்லடக்கம் செய்தனர். வக்கம்பட்டி கல்லரை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்த திண்டுக்கல் தமுமுக நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இது போன்ற சேவைகளை புரிந்து வரும் தமுமுகவின் செயல்பாடுகள் பெரும் அளவில் உதவியாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் தொல்.திருமாவளன் வேண்டுகோள்…
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் என்பது தற்போது மிகச் சிலருக்கே கிடைத்திருக்கிறது. நூற்றுக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களிலும்கூட 11 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட , வட்டார அளவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அதுவும் இல்லை . பேருந்து பயண அட்டை அரசின் சார்பில் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட அவர்களும் இந்த உதவியைப் பெறத் தகுதியானவர்கள் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் அவ்வாறு பேருந்து பயண அட்டைகள் பெற்றவர்கள் மிகவும் குறைவே.
அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் இருக்கிற காரணத்தால் இந்த 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு தேவையில்லாதது. ஏற்கனவே பல ஊடகவியலாளர்கள் இந்தத் தொகையை அரசுக்கே நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியுள்ளனர். உண்மையில் இந்த நிவாரணத் தொகை தேவைப்படும் ஊடகவியலாளர்களுக்கு இது கிடைக்கவில்லை என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே, தற்போது உள்ள விதிகளை ஒருமுறை மட்டும் தளர்த்தி அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த
5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைப்பதற்கும், உயிரிழந்தால் நிவாரணம் கிடைப்பதற்கும் தமிழக அரசு கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர- தலைவர், விசிக.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவல் துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர்…திவான் பங்களிப்பு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள சேதுக்கரை மற்றும் உத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் (கீழக்கரை பொறுப்பு) ராகவேந்திரா ரவி தலைமையிலும் கீழக்கரை ஆய்வாளர் செந்தில் குமார் முன்னிலையில் சேதுக்கரை மற்றும் உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று (02/06/2021) உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது திருப்புலானி சார்பு ஆய்வாளர் சந்தான போஸ்ட், திருப்புல்லாணி சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கச்சாமி, தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், கீழக்கரை தனிப்பிரிவு காவலர் சேகர், திருப்புலானி தனிப்பிரிவு காவலர் கலை மன்னன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் இந்த உணவை ராமநாதபுர சமஸ்தான திவான் பழனிவேல் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி- காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன், நகர தலைவர் மகேந்திரன், தெற்கு வட்டார தலைவர் வெஸ்டன் முருகன், வடக்கு வட்டார தலைவர் ரெங்கமலை மற்றும் தவமணி மாவட்ட துணைத் தலைவர் விஜயகாந்தன் , சரவணபவன், மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.