Home செய்திகள் வேலூர் கோவிட்-கேர் சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு என் – 95 முக கவசம்

வேலூர் கோவிட்-கேர் சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு என் – 95 முக கவசம்

by mohan

வேலூர் மாநகர பகுதி வெளிநாடுவாழ் இந்தியர் இணைந்து வேலூர் கோவிட்-கேர் என்ற அமைப்பை உருவாக்கி தற்போது சமூக பணி ஆற்றிவருகின்றனர்.இந்த அமைப்பினர் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் அனுமதி பெற்றுமாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இன்று 29-ம் தேதி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் என் -95 முககவசம் வழங்கும் பணியை துவக்கிவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் கலந்துகொண்டார்.சுமார் 3000 முக கவசம் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளன

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com