ராமநாதபுரம் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் இ.முகமது ஆதில் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் முகமது அஸ்ஃபக் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.இதில் மாணவர் இ.முகமது ஆதில் சிறப்பாக பேசி இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார். மாணவருக்கு பரிசாக வெற்றி கேடயமும், சான்றிதழும், மற்றும் பரிசுத் தொகை ரூபாய் 750 வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இப்பேச்சுப் போட்டியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 127 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் பல்வேறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல பரிசுகள் பெற்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரிய – ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோரும் வாழ்த்தினர்….
செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர் செங்கம் பகுதியில் அதிக அளவில் நெல் மணிலா கரும்பு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருவது வழக்கமாகும்ஆனால் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் நெல் மணிலா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்த நிலையில் மாற்று பயிராக பூக்களை தேர்வு செய்து தற்போது நல்ல மகசூல் பெற்று பயனடைந்து வந்தனர்இந்நிலையில் கடந்த சில நாட்களாக செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் செங்கம் அடுத்த கொட்டகுலம் சுண்டக்காப்பாளையம் கோனாங்குட்டை கேட் கண்ணகுருக்கை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லி மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்சுண்டக்காபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூக்கள் செடிகளை நடவு செய்து அதனை பராமரித்து வந்த நிலையில் தற்போது அதிக அளவில் பூக்கள் பூத்து நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில் சரியான விலை கிடைக்காததால் பூக்கள் பூந்தோட்டத்தில் பூத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்இந்நிலையில் விளைச்சல் பெற்றுள்ள பூக்களை கூலியாட்கள் வைத்து அதனை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories), நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர், மேக்ஸ் பிளாங்க் நினைவு தினம் இன்று (அக்டோபர் 4, 1947)
மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் ஏப்ரல் 23, 1858ல் ஜெர்மனியின் கீல் நகரில் பிறந்தார். மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.
1894ல் பிளாங்க் கருப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள். 1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா அல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?”. இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது. ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வியன் அவர்கள் வியன் விதிகளை முன்மொழிந்தார். வியன் விதி அதிக அதிர்வெண்களில் சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்பட்டது. பின்னர் “புறஊதா பேரழிவு” என்று இந்த விதி அறியப்பட்டது. ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது. மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.
1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார். இதை பிளாங்க், “அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு” என்று அழைத்தார். மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது. இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார். இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது. இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி அக்டோபர் 19, 1900ல் DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது. 1901ல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை.
நவம்பர் 1900ல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக, வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான, இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார். டிசம்பர் 14, 1900ல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும். மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும். E=hν, இதில் h என்பது பிளாங்க் மாறிலி எனப்படும். இது பிளான்கின் குவாண்டம் என்றும் அறியப்படுகிறது. ν என்பது கதிர்வீச்சின் அதிர்வெண்னை குறிக்கும். இங்கு விவாதிக்கப்படும் சக்தி E எப்பொழுதும் hν என்று தான் குறிக்கப்படுகிறது. ν மட்டும் தனியாக குறிக்கப்படுவதில்லை.
இயற்பியளாரர்கள் இப்போது இதனை குவாண்டா போட்டான்கள் என்று அழைக்கின்றனர். மேலும் அதிர்வெண் ν என்பது ஒரு போட்டோனின் சொந்தக் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஆற்றல் கொண்டதாக இருக்கும். அந்த அதிர்வெண்ணில் மொத்த ஆற்றல் hνக்கு சமமாகவும் மற்றும் அதன் ஆற்றல் அந்த அதிர்வெண்ணில் உள்ள போட்டான்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும். 1920ம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர். ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது. ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது. பிளாங்க் அலை இயக்கவியல் விரைவில் குவாண்டம் கோட்பாட்டின் காரணமாக இருக்கும் என்ற தேவையற்ற எண்ணத்தில் இருந்தார். எனினும், இது உண்மையாகவில்லை. மேலும் அவரது பணி மற்றும் ஐன்ஸ்டீனின் தத்துவார்த்த விவாதங்களுக்கு எதிராக தனியாக ஒரு புதிய குவாண்டம் கோட்பாட்டை மட்டுமே உறுதிப்படுத்தியது.
பிளாங்க் தனது இளைமைப் பருவங்களில் எண்ணிய பழைய கருத்துக்களை தனது அனுபவமிக்க பல ஆண்டுகளின் போராட்டத்தில் மூலம் தனது முந்தைய பழைய எண்ணங்கள் பற்றிய உண்மையை உண்ர்ந்தும், தவறுகளை திருத்தியும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் னொண்டவராக மாறியும் இருக்கிறார். ஒரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பது தனது எதிரிகளை வெற்றிகொள்வது மட்டுமல்லாமல் சமரசம் உண்டாக்கவும் மற்றும் எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கை ஒளியையும் உண்டாக்குகிறது. இதனால் எதிர் கருத்துக்கள் மறைந்தும் விடுகிறது. மேலும் புதிய தலைமுறையினர் இதை உண்ர்ந்து நன்கு வளர்ந்தும் இருக்கிறார்கள்.
1905ம் ஆண்டில், இதுவரை அறியப்படாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார். சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உடனடியாக அங்கீகரித்த சிலர் மத்தியில் பிளாங்க்கும் ஒருவராக இருந்தார். இந்த கோட்பாடு விரைவில் பரவலாக ஜெர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விரிவாக்க பிளான்க் கணிசமாக பங்களித்துள்ளார். எடுத்துக்காட்டாக, அவர் பாரம்பரிய இயற்பியலின் அடிப்படையில் கோட்பாட்டை மீண்டும் எழுதினார். 1918ல் பிளாங்க்கிற்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் இயக்கவியலுக்காக் வழங்கப்பட்டது.
பிளாங்க் ஜெர்மனியில் லூதரன் சர்ச்சில் உறுப்பினராக இருந்தார். இருப்பினும், பிளாங்க் மாற்று கருத்துக்களுக்கும் மற்றும் மதங்களுக்கும் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்தார். 1937ம் ஆண்டில் “மதம் மற்றும் இயற்கை அறிவியல்” எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவில், அவர் இந்த குறியீட்டின் முக்கியத்துவத்தையும், கடவுளை வணங்குவதற்கான சடங்குகள் நேரடியாக ஒரு விசுவாசியின் திறனோடு தொடர்புடையதாக வலியுறுத்தினார். ஆனால் அந்தக் குறியீடுகள் தெய்வீகத்தின் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அத்தகைய அடையாளங்கள், குறியீடுகள் பற்றிக் கற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதற்காக அவர் நாத்திகத்தை விமர்சித்தார், அதே சமயத்தில் விசுவாசிகள் இத்தகைய சின்னங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதை எச்சரித்தார்.
பிளாங்க் 1944ல் இவ்வாறு கூறினார், ஒரு மனிதனாக எனது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவான தலைசிறந்த விஞ்ஞானத்திற்காகவும், அணுக்களைப் பற்றிய ஆய்வுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். இந்த அணுக்கள் பற்றிய என் ஆராய்ச்சியின் விளைவாக இவ்வாறு என்னால் ஒன்றைச் சொல்ல முடியும்: அனைத்து அணுக்களின் ஆரம்பமும் மற்றும் முடிவும் ஏதோ ஒரு விசையின் அல்லது சக்தியின் விளைவாக ஒரு அணுவின் துகள்கள் அனைத்தும் அதிர்வதும் மற்றும் இதனால் இந்த நிமிடத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஒன்றாக இணைக்கிறது. நாம் இந்தச் சக்தியை ஒரு நனவு மற்றும் அறிவார்ந்த மனப்பான்மையின் இருப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மனம் தான் எல்லா விஷயங்களுக்கும் மேலாக இருக்கிறது.
ஒரு விஞ்ஞானி என்பவர் கற்பனை மற்றும் நம்பிக்கை இரண்டும் கொண்டவராக கருதப்படுகிறார். ஏனெனில் “மதம் மற்றும் அறிவியல் இரண்டிற்கும் கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கு, எப்போதும் கடவுள் தொடக்கத்தில் உள்ளார். இயற்பியல் அறிஞர்களுக்குக் கடவுள் அனைத்துக் கோட்பாடுகளின் முடிவில் உள்ளார். முன்னவருக்குக் கடவுள் அடித்தளம், பின்னவருக்குக் கடவுள் பொதுவான உலக பார்வைகளின் கீரிடம் போன்றவராவார். கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் மேக்ஸ் பிளாங்க் அக்டோபர் 4, 1947ல், தனது 89வது அகவையில் கொட்டிங்கன், ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்தும் உலக விலங்கு நாள் இன்று (World Animal Day) (அக்டோபர் 4).
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4ற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. உலக விலங்கு தினத்தின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்துவதற்காக, அவற்றிற்காக உலகெங்கிலும் இருக்கின்ற விலங்கு நலன்புரி அமைப்பின் தரங்களை உயர்த்துவதாகும். உலக விலங்கு தின கொண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலமாக விலங்கு நல இயக்கத்தை ஒன்றிணைத்து, உலகளாவிய சக்தியாக அணிதிரட்டி உலகத்தை அனைத்து விலங்குகளுக்கும் ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதே ஆகும். இது தேசியம், மதம், நம்பிக்கை அல்லது அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போது விலங்குகளின் மீது அதிகரித்துள்ள விழிப்புணர்வு மற்றும் கல்வியின் மூலம் விலங்குகளை எப்போதும் உணர்வுள்ள மனிதர்களாக அங்கீகரிக்கும் ஒரு உலகத்தை நாம் உருவாக்க முடியும், மேலும் அவைகளின் நலனுக்கு முழு மரியாதை எப்போதும் செலுத்தப்படுகிறது.
உலக விலங்கு தினத்தை சைனாலஜிஸ்ட் ஹென்ரிச் ஜிம்மர்மேன் உருவாக்கினார். அவர் முதல் உலக விலங்கு தினத்தை மார்ச் 24, 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இந்த முதல் நிகழ்வில் 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் நிகழ்வின் புரவலர் புனித அசிசியின், புனித பிரான்சிஸின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. இருப்பினும் அந்த இடம் அந்த நாளில் கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் முறையாக 1929ல் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அவர் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் மட்டுமே பின்பற்றுவதைக் கண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜிம்மர்மேன் உலக விலங்கு தினத்தை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார். இறுதியாக, மே 1931ல் புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த சர்வதேச விலங்கு பாதுகாப்பு காங்கிரஸின் மாநாட்டில், அக்டோபர் 4 உலக விலங்கு தினத்தை உலகளாவியதாக மாற்றுவதற்கான அவரது முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆபத்தான உயிரினங்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்த விரும்பிய இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சூழலியல் நிபுணர்களின் மாநாட்டில் 1931 ஆம் ஆண்டில் உலக விலங்கு தினம் தொடங்கியது என்று சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், உலக விலங்கு தின விழா கொண்டாட்டங்கள் முன்பு ஆர்.எஸ்.பி.சி.ஏ (RSPCA) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டு முதல் பின்லாந்தில், பின்னிஷ் விலங்கு பாதுகாப்பு சங்கங்கள் (SEY) விலங்கு தினமான அக்டோபர் நான்கு வருகின்ற அம்மாதத்தின் முதல் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, விலங்குகளின் நலன் குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்வதற்காக, பள்ளிகளுக்குப் பல்வேறு பொருட்களை விநியோகிக்கின்றன.
உலக விலங்கு தினம் 2003 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விலங்கு நல தொண்டு நிறுவனமான நேச்சர்வாட்ச் அறக்கட்டளையின் தலைமையில் மற்றும் நிதியுதவி அளிக்கும் விலங்கு பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது. அக்டோபர் 27, 2006 அன்று போலந்து பாராளுமன்றம் அக்டோபர் 4 விலங்கு தினமாக நிறுவுவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அர்ஜென்டினாவில், விலங்கியல் தினம் 1908 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது விலங்குப் பண்ணையின் இயக்குநரும் புவெனஸ் அயர்ஸின் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான இக்னாசியோ லூகாஸ் அல்பராசின் தலைமையில் இருந்தது. ஆரம்பத்தில் இந்த நாள் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பின்னர், 1926 ஏப்ரல் 29 ஆம் தேதி அல்பாரிகான் இறந்த பிறகு, அவரின் நினைவாக அன்றைய தினமே விலங்கியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்கும் காரணத்தினால் மேலத்தெரு உஸ்வதுன்
ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் இரவு நேரத்தில் மேலத்தெரு, சின்னக்கடை தெரு, சாலை தெரு, சங்குவெட்டி தெரு 500 பிளேட் பகுதிகள் முழுவதையும் பாதுகாக்க தனியார் செக்யூரிட்டிகள் சுமார் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அப்பகுதி முழுவதையும் சுற்றி கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தகவலை பரிமாறி கொள்ள வாக்கிடாக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது இன்னும் சிறிது நாட்களில் அதிகமான செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு கீழக்கரை நகர் பகுதி முழுவதையும் பாதுகாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே ஆங்கிலத்தில் சார், மேடம், வேண்டாம் தமிழில் அய்யா. அம்மா ஒரு மனதாக நிறைவேற்றிய கிராம சபை கூட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி பொதுமக்களின் குறைகள் தீர்க்கும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்இதில் பொதுமக்கள் கூறுகையில் ராஜக்காபட்டி ஊராட்சியில் அரசு அதிகாரிகள் தலைமை பணியாளர்கள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆகியோர் ஆங்கிலத்தில் சார், மேடம், என்று அழைக்கப்படும் ஆங்கிலச் சொல்லே உபயோகிக்காமல் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மொழியான தமிழ்மொழியின் அய்ய. அம்மா என்ற தமிழ்சொல் உபயோகப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் பொதுமக்கள் ராஜக்காபட்டி மேற்கு காலனி பகுதியில் முதல் மேற்கு வளர்ச்சி பெற்று வரும் பஸ் ஸ்டாப் வரை உள்ள பகுதிகளுக்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட வேண்டும் 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் பாசனம் பெறும் பகுதியாக அல்லிகுண்டம் மற்றும் ஜோதி நாயக்கனூர் ஆகிய கண்மாய்கள் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் மேலும் ராஜக்காபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அதிகாரிகளிடம் இனிமேல் சார் மேடம் என்று ஆங்கிலச்சொல் உபயோகிக்காமல் ஐயா அம்மா என்ற தமிழ்சொல் உபயோகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரியாபட்டி அருகே இலுப்பகுளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறையின் தூயமை பாரதம் திட்டம் – மற்றும் விருதுநகர் மாவட்ட பசுமை பாரத அறக்கட்டளை சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இலுப்பகுளத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இலுப்பகுளம் சோணையா கோவில் வளாகம், சமுதாயக்கூடம் கண்மாய்கரை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவைக்கப் பட்டது. நிகழ்ச்சியில் கிராம பிரமுகர் பெரியசாமி. விவேகா கானந்தா சேவாலய செயலாளர் ஞானசுந்தரம், ஆன்மீக பிரிவு நிர்வாகி தர்மராஜ் ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார் சமுக ஆர்வலர்கள் ஜெயக்குமார், ஜெய்சங்கர். ராஜேந்திரன பணித்தள பொறுப்பாளர் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கருப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் மற்றும் கருப்பட்டி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திட்ட செலவுகளுக்கு கணக்கு கேட்டும் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரியும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.கருப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலக்கால் ஊராட்சியை சேர்ந்த கீழமட்டையான் கச்சிராயிருப்பு கிராமத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடந்திருப்பதாக திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மதுரை மாநாகரில் சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர்.அவர்களுக்கு, உணவு அளிக்கும் வகையில் மதுரையின்அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.நேற்றுடன் 149 நாள் நிறைவடைந்து,150 வது நாளில் அடியெடுத்து வைத்தது. இதனைத் தொடர்ந்து,மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிரபல திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, தானத்தில் சிறந்தது அன்னதானம். அதுபோல் தற்போது கொரானா மூன்றாம் அலை பரவி வருவதால் பொது மக்கள் எல்லோரும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு புகைப்பழக்கம் மதுப்பழக்கம் உள்ளிட்டவர்களை தவிர்த்துவிட வேண்டும்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட 3000 முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.உதவி ஆளுநர் கார்மேகம் வாழ்த்துரை வழங்கினார்.கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின்ஏற்பாடுகளை, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு.
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கரடிக்கல் கிராமத்தில் சுந்தர் ராஜ் என்பவர் சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக காலை ஓட்டிச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ஆண்டிச்சாமி என்பவர் கிணற்றில் தவறுதலாக பசு மாடு கீழே விழுந்து விட்டது இதை மீட்க அப்பகுதி மக்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கும் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் போலீஸ் சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) அமைக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் ஆய்வு!
நிலக்கோட்டை காவல்நிலையம் சார்பாக சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) நிலக்கோட்டை காவலர் குடியிருப்பின் ஒரு பகுதியில் நடைப்பெற்று வந்தது இந்த பாய்ஸ் கிளப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் வேறு சில செயல்களும் நடைபெற்று வந்தன.ஆனால் தற்போது இந்த காவலர் குடியிருப்பு முழுவதும் பராமரிப்பு இல்லாமலும் பாழடைந்த நிலையிலும் கட்டிடங்கள் இடிந்து போய் மரம் செடி கொடிகள் முளைத்து கிடப்பதாலும் பாய்ஸ் கிளப் செயலற்று பூட்டியே கிடக்கின்றன
.இதனை அறிந்த நிலக்கோட்டைக்கு பதியதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் அவர்கள் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பாய்ஸ் கிளப்பை ஆய்வு செய்து இந்த பகுதி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்படி பாய்ஸ் கிளப்பை ஆனந்த் நகர் பூங்காவில் அமைக்கலாம் என முன்னாள் கவுன்சிலர் ஜோசப் இடத்தில் ஆலோசனை நடத்திய பிறகு நிலக்கோட்டை செயல் அலுவலர் செல்வதாஸ் அவர்களை சந்தித்து இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ஆனந்த் நகர் பூங்காவில் பாய்ஸ் கிளப் அமைக்க ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்றும் உறுதி கூறினார்.இந்நிகழ்வில் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார்,தலைமையில் பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் லஷ்மிப பிரியா, காவல் ஆய்வாளர் குரு வெங்கட் ராஜ், சார்பு ஆய்வாளர் மயில்ராஜ், இந்தப் பகுயின் முன்னாள் கவுன்சிலர் ஜோசப், மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப்பின் பயிற்சியாளர்கள் முத்துராஜ், ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது இங்குள்ள கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தாளாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்தார் எம் வி எம் குழுமம் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதேபோல் கருப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு வேடமணிந்துநூதன முறையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடினார்கள் செயற்குழு உறுப்பினர் முருகன் காந்தி வேடம் முகமது இலியாஸ் நேரு வேடம் புரிந்து வந்தனர் இதில் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வரிசை முகமது கிராம கமிட்டி தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் லெக்சர்கான் கணேசன் புரோஸ்கான் சோலை உட்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் அனைவரும் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை காங்கிரஸ் சார்பில் காந்திபிறந்த தினவிழா; காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு..
சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் தேசத்தந்தை காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் காந்தி,காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுரண்டை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த இந் நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார். நகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், இளைஞர் காங்கிரஸ் சந்திரன், தபேந்திரன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு சிங்கராஜ் வரவேற்றார். தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் அலங்கரிப்பட்ட காந்தி மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பால் எ சண்முகவேல், சோனியா பேரவை பிரபாகரன், தெய்வேந்திரன், ரத்தினசாமி, சதீஷ் குமார், ராஜேந்திரன், வேல்முருகன், ஆனந்த், ஆட்டோ செல்வராஜ், சுக்கிரன் மாடசாமி, காந்தி, சமுத்திரம், கந்தையா, செல்வம், சுரேஷ், சங்கர், சமுத்திராண்டி, டுவின்ஸ் முருகேசன், டேவிட் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த (17/07/2021) அன்று கோவில்பட்டியை சேர்ந்த சொர்ணவடிவு என்பவர் தனக்கு சொந்தமான இடம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் உள்ளதாகவும் தனது இடத்தை தனது பெரியப்பா மகன் கணேசன் என்பவர் போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும் தனது இடத்தை மீட்டு கொடுக்குமாறும் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பெயரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் (DCB) தலைமையில் காவல் ஆய்வாளர் சந்தி செல்வி (ALGSC) விசாரணை மேற்கொண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு சொர்ணவடிவின் உடன்பிறந்த சகோதரன் கணேசன் என்பவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் மீட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட எலியாசு ஓவே நினைவு தினம் இன்று (அக்டோபர் 3, 1867).
எலியாசு ஓவே (Elias Howe) ஜூலை 9, 1819ல் அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயரே இவருக்கும் இட்டதால் இவர் எலியாசு ஓவே இளையவர் என அழைக்கப்பட்டார். எலியாசுவின் தந்தை ஓர் உழவர், உள்ளூரில் மருத்துவராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய தாயார் போல்லி பீமிசு. ஓவே குடும்பத்தின் முன்னோர்கள் வார்விக்சைரிலுள்ள பிரிங்க்லோவிலிருந்து அமெரிக்காவில் 1630ல் குடியேறினார்கள். இவருடைய குடும்பத்தினர் பலர் கண்டுபிடிப்பாளர்கள். ஓவேயின் முன்னோர்களில் வில்லியம் ஓவே என்பவர் மரத்தாலான தாங்கணைவுப் பாலத்தை (Woodern Truss Bridge) உருவாக்கியவர். இன்றைக்கும் அவருடைய பெயராலேயே இப்பாலம் விளங்குகிறது. டைலர் ஓவே என்பவர் புனைதிறம் வாய்ந்த சுருள்படுக்கையை (Ingeneius Bed Springs) வைக்கோல் படுக்கைக்குப் பதிலாக உருவாக்கியவர். எலியாஸ் ஓவேயின் கண்டுபிடிப்பே உலக வாழ்வமைப்பைச் சற்று மாற்றியதெனலாம்.
எலியாசு ஓவே தந்தை கடும் உழைப்பாளி அவருடைய எட்டு குழந்தைகளின் உதவியோடு பண்ணையையும் மாவு ஆலையையும் நிர்வகித்து வந்தார். மாவரைக்கும் எந்திரம் அவருக்கு ஓரளவு வருமானத்தை வழங்கி வந்தது. ஆனால் பண்ணையை நிர்வகிப்பது என்பது பெரும் போராட்டமாக இருந்தது. எனவே எலியாசு ஆறு வயதிலிருந்தே தந்தைக்கு உதவியாகப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். பருத்தி ஆலைகளுக்குத் தேவையான துளையிட்ட அட்டைகளைத் தயாரித்து அளிப்பது இவர் மேற்கொண்ட ஒரு பணியாகும். அதே நேரம் அமைதியான குளிர்காலங்களில் பள்ளிக்கும் சென்று கல்வி பயின்று வந்தார். 11 ஆம் வயதில் இவருடைய ஊருக்கு அருகில் உள்ள வேறொரு பண்ணையில் பணிக்குச் சேர்ந்தார். பதினாறு வயது நிரம்பிய போது உடல் நலம் குன்றியதாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் தன் பண்ணைக்கே திரும்பினார்.
1834ல் லோவெல் என்ற ஊரில் அமைந்திருந்த நெசவாலை ஒன்றில் எலியாசு பணியில் சேர்ந்தார். நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு சிறந்த முறையில் கற்றுக் கொண்டார். பருத்தி இழையை உருவாக்கும் எந்திரங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் பணியாற்றியதால் எந்திரங்கள் இயங்கும் முறைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பேற்பட்டது. அப்போது மாநில அளவில் ஏற்பட்ட சில தொய்வுகளின் காரணமாக அந்த ஆலை பாதிக்கப்பட்டது. எனவே இவர் கேம்பிரிட்ஜ் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இவருடைய உறவினர் நாதனியல் பேங்க்சு என்பவருடன் இணைந்து பணிபுரிந்தார். அங்கு எந்திரப் பொறியாளரின் உதவியாளராகப் பணியாற்றினார். நாதனியல் பேங்க்சு போர்ப்படைத் தளபதியாகவும், பின்னர் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
1838ல் போசுடனில் கார்ன்ஹில் எனுமிடத்தில் அரி டேவிசு என்ற தலைமைக் கைவினைஞரின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். துல்லியமான கருவிகள், தைக்கும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார். இவரிடம் வந்த தைக்கும் கருவிகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்ததால், அவை உண்மையிலேயே தைக்கும் கருவிகளாக இல்லை என்பதை உணர்ந்தார். நல்ல தைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அரி சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர அவர் அதற்கான முயற்சியில் இறங்கவிலை. அவர்களிடம் வருகின்ற தைக்கும் கருவிகளில் உள்ள குறைபாடுகளைப்பற்றி இருவரும் பலவாறாக விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த எந்திரங்களைப் பழுது பார்த்து அவற்றைப் பற்றிய குறைப்பாடுகளை விளக்கிச் செயற்படுத்தும் முறைகளைச் சொல்வதற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு எலியாசு சென்று வந்தார்.
1941 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் நாள் இவருடைய 22 ஆவது வயதில் எலிசபெத் ஏம்சு என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரத்திற்கு 9 டாலர்கள் என்று வருமானம் ஈட்டி வந்தவர் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்ததும் அதிக வருமானம் கருதி அதிகம் உழைக்க வேண்டியதாயிற்று. உழைத்துக் களைத்து வீடு திரும்பியதும் இவருடைய மனைவி கையால் துணி தைப்பதைப் பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர் மனதில் பலவித எந்திர அமைப்புகள் துணியைத் தைப்பதற்கேற்ற வகையில் கற்பனையில் உதிக்கும் உடனே எழுந்து அதைப் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொள்வார். அதற்குத் தேவையான பாகங்களைப் பட்டியலிடுவார். சில சமயங்களில் அவை சரியாக அமையும் ஆனால் பல சமயங்களில் அவை சரியாக அமையாமல் போய்விடும்.
1844ல் எலியாசின் சித்தப்பா பெரிய பனை இலைகளைச் சிறியதாக்கி தொப்பிகள் முதல் கூடைகள் வரை செய்வதற்குரிய வெட்டு இயந்திரம் ஒன்றைக் கண்டறிந்தார். அதனால் கவரப்பட்ட எலியாசின் தந்தை தன்னுடைய சகோதரர் குடியிருப்புக்குத் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் சென்று கேம்பிரிட்ஜில் தங்கி அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அங்கும் சில பாதிப்புகள் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய குடும்பம் தங்களுடைய பண்ணைக்கே திரும்பியது. 1844ல் இவருடைய வசதி மிக்க நண்பர் ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் எலியாசுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய எந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து எலியாசு ஈடுபட்டு வந்தார். கைகளால் துணி தைப்பதில் இவருடைய மனைவியை விட விரைந்து செயல்பட்டார். பாசுடன் இரயில்வே துறையில் எந்திர ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். ஓய்வுக்காலத்தில் துணிதைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
1844 அக்டோபரில் ஓர் அடிப்படை தையல் எந்திரத்தை உருவாக்கினார். இது மரம், எஃகிரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்திருக்கும் ஆணிகள் மற்றும் ஊசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி அமைக்கப்பட்ட பூட்டுத் தையல் முறை எந்திரமாக இது செயல்பட்டது. இது உலக எந்திர வரலாற்றில் தையல் முறையில், ஆடை வடிவமைப்பில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதென்றாலும் இதைவிட வலிமையான எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் எலியாசு தீவிரமாக ஈடுபட்டார். 1845 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடர்ந்து இயங்கும் தையல் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். 1846ல் இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. எலியாசு இரண்டு தையல் எந்திரங்களைத் தயாரித்தார். ஒன்று காப்புரிமை பெற அளிக்கப்பட்டது. மற்றொன்று விற்பனைக்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் இதனைத் தாங்கள்தான் கண்டுபிடித்ததாக 80 பேர்கள் போராடினார்கள். இத்தையல் எந்திரத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிக்கு இரயில் வண்டி மூலம் அனுப்பி வைக்க ஜார்ஜ் பிசர் ஏற்பாடு செய்தார். பெண்களை இவ்வியந்திரம் மிகவும் கவர்ந்தது. ஆனால் இதன் அதிக விலை காரணமாக இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனாலும் எலியாசு மனம் தளராமல் ஒருபக்கம் காப்புரிமைக்காகவும் போராடிவந்தார்.
எந்திரத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜார்ஜ் பிசர் செலவு செய்தாலும், ஒரு காலகட்டத்தில் அவருடைய வருமானமும் குறைந்து போனதால் அவரும் ஒதுங்கிக்கொண்டார். மேலும் இவ்வியந்திரத்தை எலியாசைத் தவிர மற்றவர்கள் இயக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். குவின்சி அரங்கில் இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பொதுமக்களிடையே இயக்கிக் காட்டினார். 6,7 பெண்களைக் கொண்டும் இதை இயக்க வைத்தார். ஆனாலும் இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இவருடைய சகோதரர் அமாசா என்பவர் இங்கிலாந்தில் இவ்வியந்திரத்தை விற்க முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கினார். இங்கிலாந்த்தில் வில்லியம் பிரெடரிக் தாமசு என்பவர் இதற்கான பணத்தை முதலீடு செய்ய முன்வந்தார். 250 பவுண்டுகளைக் கொடுத்து அந்த இயந்திரத்தை வாங்கிய அவர் அதைப்போல எந்திரங்களை உருவாக்க்கிப் பெரும்பணம் சம்பாதித்தார். டபிள்யூ தாமஸ் நிறுவனம் என்ற பெயரில் அது விரிவடைந்தது. அவர் பெரும் பணக்காரர் ஆனார், ஆனால் வெறும் 250 பவுண்டுகளே பெற்ற எலியாசும் அவர் சகோதரர் அமாசாவும் அதைச் செலவு செய்து அமெரிக்கா திரும்பினர்.
மிகுந்த மனச் சோர்வுடனும், வறுமையுடனும் வாழ்ந்து வந்த எலியாசு சார்லசு இங்க்லிசு என்ற நண்பரால் மீண்டும் புத்துயிர் பெற்றவரானார். அவருடைய உதவியால் மூன்றாவது எந்திரத்தை உருவாக்கினார். மீண்டும் இங்கிலாந்து சென்றார். அங்கு தன்னிடமிருந்த பணம் முழுவதும் செலவு செய்ததால் தனது எந்திரத்தை 5 பவுண்டுக்கு அடகு வைக வேண்டியதாயிற்று. சார்லஸ் இங்கிலிசின் உதவியுடன் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். 1849ல் உடல் நலிவுற்ற இவரது மனைவி மறைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு செய்யவும் பணமின்றிக் கடன் வாங்கிச் செலவு செய்தார். மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடிய எலியாசு குழந்தைகளுக்காக மீண்டும் ரோசு அல்லாடே என்பவரை மறுமணம் புரிந்தார். தந்தையின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்த எலியாசு எந்திரத்தின் காப்புரிமைக்காகப் போராடத் தொடங்கினார். ஐந்து வருடங்கள் மிகக் கடுமையாகப் போராடி தந்தை மற்றும் நண்பர்களின் உதவியுடன் வழக்குகளை வென்று காப்புரிமையைப் பெற்றார். இவ்வழக்கில் எலியாசுடன் மிகக் கடுமையாகப் போராடியவர் ஐசாக் சிங்கர். 1854ல் இவருக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு எலியாஸ் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இவருடைய கனவு மெய்ப்பட்டது. தையல் எந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளராக இவருடைய பெயர் பதிவாயிற்று. அமெரிக்காவில் இவருடைய தையல் எந்திரங்கள் விற்கப்பட்டன. ஒவ்வொரு எந்திரத்திற்கும் 5 டாலர் காப்புரிமைப் பணமாக இவருக்கு வழங்கப்பட்டது. எலியாசின் சகோதரர் அமாசா ஓவே 1854ல் தையல் எந்திரத் தொழிற்சாலையைத் தொடங்கினார். கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டுவந்தவர் தாமசு செயிண்ட் என்ற அறிஞர் ஆவார்.
1854 முதல் 1867 வரை இவருடைய வருமானம் பன்மடங்காகப் பெருகியது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியைப் போர்ப்படையினருக்குக் கொடையாக வழங்கினார். மேலும் எலியாசு அப்பிரிவில் இணைந்தும் பணியாற்றினார். 1867ல் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது. இவரைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. பிரான்சு நாடு அங்கு அழைத்து எலியாசைப் பெருமைப் படுத்தியது. தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட எலியாசு ஓவே அக்டோபர் 3, 1867ல் தனது 48வது அகவையில் புரூக்ளின். நியூயார்க்யில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1965 ஆம் ஆண்டு தி பீட்டில்சின் வெளியிட்ட ஹெல்ப் திரைப்படம் எலியாசின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு பகுதியில் பழனி ஓட்டல் செயல்பட்டு வருகின்றது இதில் தரமற்ற உணவுகள் மற்றும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுத்துள்ளதுதிருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமைப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள உணவகத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உணவகம் கழிவு நீர் செல்லும் ஓடை அருகே இருந்து வருவதால் உணவகம் முழுவதும் துர்நாற்றம் வீசி உணவு உண்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்உணவு பொருட்களை தரமாகவும் சமைக்க வேண்டும் என்ற விதிகளை மதிக்காமல் தரமற்ற முறையில் உணவு தயார் செய்யும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 5 ஸ்டார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் செங்கம் முறையாறு பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் மேலும்உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும் இந்த நிலையில் உரிமம் இல்லாமல் தரமற்ற உணவு தயாரிக்கும் ஹோட்டல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்.
மதுரை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா விடுத்துள்ள வேண்டுகோள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது. மதுரையில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 19 செயின் பறிப்பு குற்றங்களில் 15 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள முப்பத்தி ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கரிமேடு மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நாகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திரு நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி ரமேஷ் எந்த சிங்கத்தேவன் இருவரும் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் அபினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன .செம்பூரணியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஹரிஹரன்மற்றும் சபரி ஆகியோர் மதிச்சிய மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய காவலர்களால் வாகன தணிக்கையின் போது கைதுசெய்யப்பட்டனர் மேலும் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் .அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜசேகரன், ஆனந்தகுமார், வீரபாண்டி ஆகியோரும் விரைந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . மதிச்சியம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் நகை வழிப்பறி செய்த பூங்கொடி, நந்தினி ஆகிய பெண் குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட எதிரிகளை அடையாளம் விரைந்து நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமராக்களில் பதிவு களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் , பாதுகாப்பு கருதியும் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும். இவ்வாறு அந்த வேண்டுகோள் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,சோழவந்தான் அருகே நடுமுதலைக் குளம் கிராமத்தில், புரட்டாசி பொங்கல் திருவிழா ஒரு வாரம் நடந்தது.வருடந்தோறும், புரட்டாசி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். தினசரி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.இதனால், இப்பகுதியில் திருவிழா களைகட்டி நடக்கும்.அரசு கட்டுப்பாடு உள்ளதால் ,இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடினார்கள்.இவ்விழாவை முன்னிட்டு, விநாயகர் திருவிழா, பெருமாள் திருவிழா, வடக்கு செல்லியம்மன் திருவிழா மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.அன்று மாலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இரவு கிராமிய பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. மறு நாள்காலை கரகம் எடுத்து …
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,சோழவந்தானில் அடிப்படை வசதி இல்லாமல், தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது.இதனால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சோழவந்தானில், ஏற்கெனவே, இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது, சோழவந்தானில் இயக்கப்பட கூடிய அனைத்து பேருந்துகளும் பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதற்கான இடவசதி ஒதுக்கப்படவில்லை. இதனால், ரயில்வே பீடர் ரோட்டில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. பஸ்சுக்காக காத்து இருக்க கூடியவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை.இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க கூட இடமில்லாமல் நின்றுகொண்டு சிரமப்படுகின்றனர். பயணிகளுக்கு தற்காலிய நிழற்குடை குடிநீர் வசதி சிறுநீர் கழிப்பதற்கு வசதி இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை தற்காலிக பஸ் நிலையம் அமைக்காததால், வரக்கூடிய பஸ் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்தை திறந்து விட வேண்டும் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் அலஙகாநல்லூர் ஒன்றியம், கல்லணை ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் ,ஊராட்சி தலைவர் சேது சீனிவாசன் தலமையில் லும், ஒன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு, – துணை த் தலைவர் அய்யம்மாள் ஆகியோர் முன்னலயில் நடைபெற்ற கூட்டத்தில்,ஊராட்சி செயலாளர் சந்திரன் தீர்மானங்கள் வ சித்தார்.இதில், யூனியன் உதவி ப் பொறியாளர் நெடுஞ் செழியன், மண்டல துணை வட்டாச்சியர் திருமுருகன்,ஆர்.ஜ- சீனிவாசன் | வி.ஏ.ஓ.கணேசன், மற்றும் நியாயவிலை கடை விற்பனையாளர். கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி-வார்டு உறுப்பின்ர்கள் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.