வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி நேற்று 19-ம் தேதிவேலூர் 2-வது மண்டலம் லாங்கு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட 500 கிலோபிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பின்பு சம்மந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.
செய்திகள்
காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா வெகு விமர்சையாக அனுசரிப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் கோவில் அருகே அதிமுக ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வேலூட் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.பி.ரமேஷ் தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் மூத்த நிர்வாகிகளுக்கு வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு பொன்னாடை போற்றி அவர்களை கவுரவித்தார் பின்னர் அங்கிருந்த நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கபட்டது இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகர தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் M.சேக் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. 19.10.21 செவ்வாய் கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் K.S.ரசூல்மைதீன், மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன், ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ரியாசூர் ரஹ்மான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் புரோஸ்கான், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் தெற்கு பகுதி செயலாளர் சேக்மதார், முகம்மது தாசின் ஆகியோரும் உடன் பங்கேற்றனர். சேரன்மகாதேவி நகர தலைவர் S.ஷஹீத் பாதுஷா, தமுமுக நகர செயலாளர் S.சேக் செய்யது அலி, மமக நகர செயலாளர் A.அமீர் சுல்தான், தமுமுக &மமக நகர பொருளாளர் M.அப்துல்காதர், தமுமுக&மமக நகர துணை தலைவர் P.ஜாகீர் உசேன், தமுமுக நகர துணை செயலாளர்கள் பாசித் ராஜா, S.தாவூத் இப்ராஹீம், A.முகம்மது அஸ்கர், மமக நகர துணை செயலாளர்கள் P.அப்துல்ஹமீது, அக்பர், சேக் செய்யது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைப்பு தேர்தல் வருவதை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, மேலும் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் ஷஹீத் பாதுஷா நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு 13-வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் என்பவர் மிச்சர் உள்ளிட்ட பலகாரங்கள் செய்யும். உற்பத்தி செய்து கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் மிக்சர் மற்றும் பலகாரம் பொருட்கள் தயாரிக்கும் குடோனில் புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அப்பொழுது ,அருகே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்து கொண்டு இருந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே,சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சென்ற நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்து குறித்து, அறிந்த மதுரை மாவட்ட உதவி அலுவலர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும்,தீ விபத்து சம்பவம் குறித்து, மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இட்லிகடைக்கான பாத்திரங்கள் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்.
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:மதுரை திருநகரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி உமாராணி. இவர் தான் இட்லிகடை வைத்து தனது குடும்பத்தின் நிலையை உயர்ந்த விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்று அவர் சுயதொழில் செய்து குடும்ப சூழலை உயர்த்த ஊக்குவிக்கும் வகையில் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் இட்லிகடைக்கான பாத்திரங்கள் வாங்கப்பட்டது.இவற்றை உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கினோம்.இதேபோல் உலக மனிதர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை உயர தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே உலகில் வறுமையே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கண்ணன், பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை.
சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் கண்காணிப்பு கேமரா பெறுத்தும் பணி நடைபெறுகிறது.போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர் சந்திப்புதனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து முறையான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.முதல்வர் உத்தரவுப்படிகட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம்.அதிக கட்டணம வசூலிக்கும் பஸ்ஸின் பெயரை குறிப்பிட்டு சொன்னால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பேருந்துகளில் CCTV பொருத்தம் பணி தற்போது சென்னை MTC யில் நடைபெறுகிறது. 2900 கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது. பேருந்துகளில் தவறுகள் நடக்கா வண்ணம் முதலமைச்சர் உத்தரவு படி கண்காணிக்கப்படும் இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.என போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20, 1891).
சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அக்டோபர் 20, 1891ல் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில், ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கு கல்வி கற்கச் சென்றார். மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார். 1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரூதர்போர்டின் கீழ் கல்வி கற்றார். முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் சாட்விக் ஜெர்மனியில் இருந்தார். அங்கு அவர், ரூல்பென் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மேலும், ஓர் ஆய்வுகூடத்தை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாள்ஸ் D.எல்லிசின் துணையுடன், பொசுபரசின் அயனாக்கம் பற்றியும், காபனோரொட்சைட்டினதும் குளோரினினதும் ஒளியிரசாயனத் தாக்கம் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.கெய்கரின் ஆய்வுகூடம் அவரது விடுதலைக்காக முயற்சி செய்யும்வரை அவர் ரூல்பென்னிலேயே தமது வாழ்நாட்களைக் கழித்தார். 1932ல் சாட்விக், அணுக்கருவில் அதுவரை அறியப்பட்டிராத துணிக்கையொன்றைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவான விளக்கங்களை வெளியிட்டார். இத் துணிக்கை முதன்முதலில் எட்டோர் மஜோரனாவால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. இதன் மின் நடுநிலை காரணமாக இது நியூட்ரான் எனப் பெயர் பெற்றது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம்-235ன் கருப்பிளவைப் புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆல்பாத் துணிக்கைகள் நேரேற்றம் கொண்டவையாதலால் அவை அணுக்கருவிலுள்ள நேரேற்றத்தால் தள்ளப்பட்டன. ஆனால் நியூட்ரான்கள் ஏற்றமற்றவையாதலால் அவற்றுக்கு கூலோமின் தடையைத் தாண்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் அவற்றால் பாரமான அணுக்கருக்களான யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம் கருக்களினுள்ளும் ஊடுருவக்கூடியதாயிருந்தது.1932ல் நியூட்ரான் பற்றுய சாட்விக்கின் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1932ல் ரோயல் சங்கத்தின் ஹக்ஸ் பதக்கமும், 1935ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாயிருந்தது. பீட்டா சிதைவினால் உருவாகும் நியூட்ரான்களை மோதச்செய்வதன் மூலம் இது சாத்தியமானது. இவரது கண்டுபிடிப்பு இத்தாலிய பௌதிகவியலாளரும் நோபல் பரிசாளருமான என்ரிகோ ஃபெர்மியைக் கவர்ந்தது. இதனால் அவர் நியூட்ரான்களை அணுக்கருக்களுடன் மோதச் செய்வதன்மூலம் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களை ஆராயத் தொடங்கினார். ஃபெர்மியால் வெளியிடப்பட்ட ஆய்வுகளும், ஒட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் ஆகிய ஜெர்மன் கதிரியக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் காரணமாக முதல் வகை அணுக்கருப் பிளவு கண்டுபிடிக்கப்பட்டது.1935ல், சாட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார். 1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் குறிப்பாணை காரணமாக, MAUD குழுவில் நியமிக்கப்பட்டார். அக் குழு சடப்பொருளைப் பற்றி மேலும் ஆராய்ந்தது. 1940ல் டிசார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு அமெரிக்கர்களைனதும் கனேடியர்களினதும் அணுக்கரு ஆராய்ச்சியை ஒன்றிணைப்பதில் ஈடுபட்டார். நவம்பர் 1940ல் இங்கிலாந்து திரும்பிய வேளை, போர் முடியும் வரையில் இந்த ஆய்வில் எதுவும் வெளிவராது என்றே அவர் கருதினார். டிசம்பர் 1940ல் MAUD நிறைவேற்றதிகாரியான ஃபிரான்ஸ் சைமன், யுரேனியம்-235 சமதானியைப் பிரித்தெடுக்க முடியும் என அறிவித்தார். சைமனின் அறிக்கை, பாரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமொன்றுக்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளையும் உள்ளடக்கியிருந்தது. “அணுகுண்டு என்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல. அது மிகவும் இன்றியமையாததும் ஆகும்.பின் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரு அணுகுண்டுகள் ஜப்பானியப் பேரரசின் மீது போடப்பட்டன. இதனால் ஆகஸ்ட் 1945ன் நடுப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்தது. 1940ல், சட்விக் காம்பிரிட்சில் ஆய்வுகளில் ஏடுபட்ட ஹான்ஸ் வொன் ஹால்பன் மற்றும் லியூ கொவர்ஸ்கி ஆகிய இரு ஃபிரெஞ்சு விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிக்கைகளை ரோயல் சங்கத்துக்கு அனுப்பினார். போரின்போது அவற்றை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் அவ்வாய்வறிக்கைகளை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2007ல், ரோயல் சங்கத்தின் ஊழியர்கள், கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இவ்வறிக்கைகளைக் கண்டுபிடித்தனர்.இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய அமெரிக்காவில் நடாத்தப்பட்ட மான்காட்டன் திட்டத்தில் பங்குபற்றிய ஒரு முன்னணி பிரித்தானிய விஞ்ஞானியுமாவார். இயற்பியலில் இவரது அடைவுகளுக்காக 1945ல் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் ஜுலை 24, 1974ல் தனது 82வது அகவையில் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்த, நோபல் பரிசை வென்ற பால் அட்ரியென் மாரிசு டிராக் நினைவு தினம் இன்று (அக்டோபர் 20, 1984).
பால் அட்ரியென் மாரிசு டிராக் (Paul Adrien Maurice Dirac) ஆகஸ்டு 8,1902ல் பிரிஸ்டல், இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை, சார்லஸ் அட்ரியன் லேடிஸ்லாஸ் டிராக், சுவிட்சர்லாந்தின் செயிண்ட்-மாரிஸில் இருந்து குடியேறியவர், அவர் பிரிஸ்டலில் பிரெஞ்சு ஆசிரியராக பணிபுரிந்தார். பிஷப் சாலை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். பின்னர் தந்தை வேலை பார்த்த மெர்சன்ட் வென்சர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி உள்ளிட்ட பல மொழிகளை அறிந்திருந்தார். கல்வி உதவித்தொகை பெற்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். பொது சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் களங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகக் கிடைத்த கல்வி உதவித்தொகை குறைவாக இருந்ததால் அங்கு சேர முடியவில்லை. எனவே பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலேயே இலவசமாகப் படிக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கணிதத்தில் இளங் கலைப் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். அதிலும் முதல் வகுப்பில் தேறினார். இதனால் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறையின் உதவித்தொகையைப் பெற்றார். கேம்பிரிட்ஜ் சென்று, தான் ஆர்வம் கொண்டிருந்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 1926-ல் குவாண்டம் விசையியல் குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் தனது ஆராய்ச்சிகளைக் கோபன்ஹேகனில் உள்ள கோடிங்கன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.எர்வின் ஷ்ரோடிங்கர் அலைவிசையியல் வெர்னர் ஐசன்பர்கில் அணி விசையியலை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை உருவாக்கினார். கதிர்வீச்சின் குவாண்டம் கோட்பாட்டை மேம்படுத்தினார். 1928ல் சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலுக்கான தொடர்பை விளக்கும் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும் பருப்பொருளுக்கு (matter) எதிரான பருப்பொருளின் (antimatter) இருப்பை முன்கணித்துக் கூற இவரது இந்தச் சமன்பாடு வழிகோலியது. ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் குவாண்டம் மெக்கானிக்ஸ்’, ‘டைரக் ஷன்ஸ் இன் ஃபிசிக்ஸ்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் ‘லெக்சர்ஸ் ஆன் குவாண்டம் மெக்கானிக்ஸ்’ மற்றும் ‘குவான்டிசேஷன் ஆஃப் தி கிராவிடேஷனல் ஃபீல்ட்ஸ்’ உள்ளிட்ட கட்டுரைகளை வெளியிட்டார்.பகுப்பாய்வு இயக்கவியல் துகள்கள் மற்றும் உறுதியான உடல்கள் வெளிச்சம் தருவதைக் கண்டார். தனது புதிய புரிதலில் இருந்து, அவர் பயணிக்காத இயக்கவியல் மாறிகள் அடிப்படையில் ஒரு குவாண்டம் கோட்பாட்டை உருவாக்கினார். இது இன்றுவரை குவாண்டம் இயக்கவியலின் மிக ஆழமான மற்றும் குறிப்பிடத்தக்க பொது உருவாக்கத்திற்கு அவரை இட்டுச் சென்றது. இவர், குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். பருப்பொருளுக்கு எதிரான எதிர்ப் பருப்பொருளின் இருப்பை முன்கணித்துக் கூற டிராக் சமன்பாடு இவருக்கு வழிகொடுத்தது.குவாண்டம் இயக்கவியலுடனான பொது சார்பியல் ஒப்புரவாக்கல் (reconciliation of general relativity) களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். குவாண்டம் விசையியல், சுழற்சி சார்புத் தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். அணுவியல் கோட்பாட்டின் புதிய உற்பத்தி வடிவங்களைக் (new productive forms) கண்டறிந்தமைக்காக ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கருடன் இணைந்து 1933-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், மாக்ஸ் பிளாங்க் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.1932 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் 1972 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராகவும் பணியாற்றினார். அமெரிக்கன் இயற்பியல் கழகம் மற்றும் லண்டன் இயற்பியல் கழகங்களில் கவுரவ ஃபெலோஷிப்பும் பெற்றார். அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இவரது பெயரில் அறிவியல் விருதுகள் வழங்கப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட பால் அட்ரியன் டிராக் அக்டோபர் 20, 1984ல் தனது 82வது அகவையில் புளோரிடா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia and Hindutamil.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை தாலுகாவில் தி. மு. க. அமைச்சரின் முன்னாள் உதவியாளர் தொழிற்சாலைக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில், குன்னு வாராயன்கோட்டை ஊராட்சி பகுதியில் ஒரு தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை திண்டுக்கல்லில் உள்ள கனரா வங்கியில் 11 கோடி கடன் வாங்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையை பலமுறை வங்கி நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் வசூலிக்க முயன்றும் இயலாததால் திண்டுக்கல் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை 11 மணி அளவில் நீதிமன்ற கமிஷனர் கணபதி தலைமையில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த தனியார் தொழிற் சாலையைசீல் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது அங்கு வந்த தொழிற்சாலைகளின் உரிமையாளரான அருண் மற்றும் அவரது தந்தை தி. மு. க. அமைச்சர் ஒருவரின் முன்னாள் நேர்முக உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் மற்றும் அவரது வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உட்பட பலர் திரண்டு நீதிமன்றம் நியமித்த கமிஷனர் கணபதி மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எங்களது தொழிற்சாலையை மூட அனுமதிக்க முடியாது என்று கூறி கடுமையாக அவ்வளவு அசிங்கமாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து நீதிமன்ற கமிஷனர் கணபதி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாவிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 281 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில் 18.10.2021 திங்கள் கிழமை நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, தனி நபர் கடன், விதவை உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 281 மனுக்கள் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்களை தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணைமேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சவுந்தர்யா,அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேர்ந்தமரம் அருகே இரவில் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் திருடிய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் இரவில் தன் கடையை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் செல்போன் திருடு போனதாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.இந்த புகாரின் பெயரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் விசாரணை மேற்கொண்டு மேற்படி கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தன்னுத்து கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் குருசாமி (17) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடியில் விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ12.57 லட்சம் நிதி உதவி.
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மாலதி, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பறக்கும் படையில் பணிபுரிந்தபோது கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் இறந்த மாலதியின் 1997-ல் பயிற்சி பெற்ற 2153 காவலர்கள் ஒற்றிணைந்து காக்கும் காவலர் குழு அமைத்து அவரது குடும்பத்திற்கு௹12.57 நிதிதிரட்டினர்.அதனை காட்பாடியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துகாட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் , மாலதி குடும்பத்தாரிடம் வழங்கினர்.இந்த குழுவின் மூலம் இதுவரை 19 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ 1.73 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அல்ல படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றன கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் சாலையில் சிதறிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது மேலும் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் இருப்பதால் அதில் மழை நீர் சேர்ந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பல்வேறு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்ன செய்கிறது மாநகராட்சி தூங்குகிறதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் பல நாட்களாக குப்பைகள் அல்ல படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதும் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மதுரை மாநகராட்சி ஆணையாளர் இதில் தனி கவனம் செலுத்தி குப்பைகள் முறைப்படி அல்ல படுகிறதா என கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுக்கருவை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்தத, அணுக்கரு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்றஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல்ஜேம்ஸ்ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரூதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது.ரூதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.பின்னர் 1887ல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது.நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். 1892ல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பாடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார்.நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ.தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார். கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை.1894ல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ.ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார்.1897ல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் ‘இயற்பியலின் மெக்டொனால்டு’ என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது. 1898ல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900ல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். 1907ல் இங்கிலாந்த்து திரும்பிய ரூதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து ‘மேக்னடிக் விஸ்கோசிட்டி’ என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார்.வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார்.அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரூதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார்.மாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை ‘ரேடான்’ என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான ‘தோரான்’ என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த ‘ஆட்டோ ஹான்’ என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்.இந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார்.இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது.வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை ‘அணுக்கரு இயற்பியலின் தந்தை’ எனப் போற்றுவர்.1914ம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.1925ல் இவருக்கு மதிப்பாணை (Order of Merit) வழங்கப்பட்டது.ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதன் தலைவராக 1925 முதல் 1930 வரை பணிபுரிந்தார்.ரம்போர்டு பதக்கம், காப்ளி பதக்கம், ஆல்பர்டு பதக்கம், பாரடே பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் பட்டம் அளித்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற உண்மையை ஆல்பா சிதறல்களினால் கண்டுபிடித்ததஎர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டுஅக்டோபர் 19, 1937ல் தனது 66வது அகவையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1910).
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர்.சி.வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயேமேலும் இரு கட்டுரைகளும்பதிப்பாயின. 1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.சந்திரசேகர்க்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான் இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு ‘அணுகுண்டு’ போல வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார்.நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர்ஆகஸ்ட் 21, 1995ல்தனது 84வது அகவையில், அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண்வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று (அக்டோபர் 19, 1888).
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888ல்நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துரையில் பணிபுரிந்து வந்தார். இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909ல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார். இவர் அரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.’கத்தி யின்றி ரத்த மின்றியுத்த மொன்று வருகுதுசத்தி யத்தின் நித்தி யத்தைநம்பும் யாரும் சேருவீர்’என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.புகழ்பெற்ற மேற்கோள்கள்:’கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’தமிழன் என்றோர் இனமுன்றுதனியே அதற்கோர் குணமுண்டு”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.நாமக்கல் கவிஞர் பத்ம பூஷண் வெ. இராமலிங்கம் பிள்ளைஆகஸ்ட் 24, 1972ல்தனது 83வது அகவையில், இவ்வுலகை விட்டு பிரிந்தார். கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முஸ்லீம் மோர் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சின்ன ஏர்வாடி பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம் என்பவரை தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் காதர் ஆகியோர் விரட்டி பிடித்தனர் அவனிடமிருந்து 5 பவுன் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாறி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பொதுமக்களுக்கு இன்னும் புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் பற்றி இன்னும் பிடிபடவில்லை என்றேத் தெரிகிறது.இதனை மெய்பிக்கும் சம்பவம் உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் வந்தார்.முன்னதாக கீழப்புதூரில் கட்சிக்கொடி ஏற்றுவதாக இருந்தது.இதற்காக அங்கு அதிமுகவினர் கூடி நம்ம அமைச்சா (ஆர்பி.உதயக்குமார்) இன்னும்; சிறிது நேரத்தில் வருகிறார் என பேசிக் கொண்டிருந்தனர்.இதனை அறிந்த கீழப்புதூர் 14வது வாா்டு பகுதி மக்கள் அமைச்சர் வருகிறாரா என கேட்டு விட்டு தங்கள் பகுதியில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி கீழப்புதூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவலறிந்த போலிசாரும் அதிமுகவினரும் வருவது முன்னாள் அமைச்சர்.இவரிடம் கூறி எதுவும் ஆகவில்;லை.என அவர்களுக்கு புரியச் செய்து கலைந்து போகச் செய்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலையுடன் கூடிய பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழையில் நனைந்து வீணாகும் நெல் குவியல்கள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், உள்ள நெல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமல் உள்ளதால், மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .அரசு உத்தரவிட்டும், அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் ,நெல் குவியல்களை பராமரிக்க தினந்தோறும் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாகவும் இதனால் ,மிகவும் வேதனை தருவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த மூன்று மாதங்களாக அறுவடை செய்த நெல், மழையில் நனைந்து வீணாவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .நெல் அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்து போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்,100 மூடை அளவுள்ள கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகளுக்கு மேல் உள்ளதால், அருகில் உள்ள வயல்களில் நெல் களை கொட்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திமுகவைச் சேர்ந்த செல்வம் என்பவர் கூறும்போது:நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கிராம பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்து தெரிவித்த போது, உடனே அதிகாரியைத் தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கட்சிக்காரர்களின் தூண்டுதலால், அதிகாரிகள் வர மறுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். மேலும், வயல்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு பத்து நாட்களுக்கு பின்பு மறுபடியும் கொள்முதல் நிலையத்தில் வந்து அதிகாரிகள் கொட்டி விட்டுச் சென்றனர். ஆகையால், மழையில் நனைந்து நெல்கள் முளைத்து போயுள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றார்.கொள்முதல் நிலையங்களில் உள்ள மூடைகளை ஏற்றுவதற்கு ஆறு ரூபாயும் குடோனில் இருந்து வரும் வேலையாட்களுக்கு மூடைக்கு 13 ரூபாய் போக்குவரத்திற்காக வாடகையாக பத்தாயிரம் ரூபாயும் செலவு செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இதில், அரசு கவனம் செலுத்தி செலவுகளை குறைத்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்பட்டி யூனியன் தலைவர் ஆகியோரிடம் சென்று முறையிட்டும் ,நான் சொல்வதை கேட்க மறுப்பதாகவும் இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கி கிடைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் முனைப்பு திட்டம்: அக். 20-ல் கல்விக் கடன் மேளா.
மதுரை மாவட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில்பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெறஉதவும் வகையில் மதுரை மாவட்டத்தில், கல்விக்கடன் முனைப்பு திட்டம்
மதுரை 2021 – 2022 என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில பொருளாதார சூழல் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிட ஏதுவாக கல்விக்கடன் பெற உதவும் வகையில் சிறப்பு திட்டத்தினை மதுரை மாவட்டத்தில் நடப்பு 2021-2022-ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, கல்விக்கடன் முனைப்பு திட்டம் மதுரை 2021 -2022 எனப் பெயரிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தினை, செயல்படுத்த ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ஆ-பிரிவில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் (20.10.2021) புதன் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ”கல்விக்கடன் மேளா” என்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்மேளாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் கலந்து கொள்கின்றன. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அனைத்து மாணவ, மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.