Home செய்திகள் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இட்லிகடைக்கான பாத்திரங்கள் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இட்லிகடைக்கான பாத்திரங்கள் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்.

by mohan

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:மதுரை திருநகரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி உமாராணி. இவர் தான் இட்லிகடை வைத்து தனது குடும்பத்தின் நிலையை உயர்ந்த விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்று அவர் சுயதொழில் செய்து குடும்ப சூழலை உயர்த்த ஊக்குவிக்கும் வகையில் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் இட்லிகடைக்கான பாத்திரங்கள் வாங்கப்பட்டது.இவற்றை உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கினோம்.இதேபோல் உலக மனிதர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை உயர தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே உலகில் வறுமையே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கண்ணன், பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com