Home செய்திகள் சுரண்டை காங்கிரஸ் சார்பில் காந்திபிறந்த தினவிழா; காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு..

சுரண்டை காங்கிரஸ் சார்பில் காந்திபிறந்த தினவிழா; காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு..

by mohan

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் தேசத்தந்தை காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் காந்தி,காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுரண்டை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த இந் நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார். நகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், இளைஞர் காங்கிரஸ் சந்திரன், தபேந்திரன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு சிங்கராஜ் வரவேற்றார். தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் அலங்கரிப்பட்ட காந்தி மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பால் எ சண்முகவேல், சோனியா பேரவை பிரபாகரன், தெய்வேந்திரன், ரத்தினசாமி, சதீஷ் குமார், ராஜேந்திரன், வேல்முருகன், ஆனந்த், ஆட்டோ செல்வராஜ், சுக்கிரன் மாடசாமி, காந்தி, சமுத்திரம், கந்தையா, செல்வம், சுரேஷ், சங்கர், சமுத்திராண்டி, டுவின்ஸ் முருகேசன், டேவிட் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com