Home செய்திகள் சோழவந்தான் மற்றும் கருப்பட்டியில்காந்தி ஜெயந்தி விழா.

சோழவந்தான் மற்றும் கருப்பட்டியில்காந்தி ஜெயந்தி விழா.

by mohan

சோழவந்தானில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது இங்குள்ள கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தாளாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்தார் எம் வி எம் குழுமம் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதேபோல் கருப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு வேடமணிந்துநூதன முறையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடினார்கள் செயற்குழு உறுப்பினர் முருகன் காந்தி வேடம் முகமது இலியாஸ் நேரு வேடம் புரிந்து வந்தனர் இதில் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வரிசை முகமது கிராம கமிட்டி தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் லெக்சர்கான் கணேசன் புரோஸ்கான் சோலை உட்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் அனைவரும் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com