இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் சதீஷ்குமார்,36. இவரது மனைவி சண்முகசுந்தரி,24. இவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கடந்த 24.01.2012 மாலை ரமேஷ்குமார், மது குடிக்க சண்முகசுந்தரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்த சண்முகசுந்தரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, வீட்டை பூட்டிவிட்டுச் தப்பினார். சண்முகசுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக ரமேஷ்குமார் மீது அபிராமம் போலீசார்கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில், சண்முகசுந்தரியை எரித்துக் கொன்ற ரமேஷ்குமாருக்குஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள்தீர்ப்பு அளித்தார் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Category:
மாவட்ட செய்திகள்
தமிழகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு நீதிபதி மற்றும் அகில இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே. பிரசாத் “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார், அதனை அடுத்து சங்கத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் சென்று சந்தித்து பேசினர்.அப்போது பல விஷயங்கள் பேசப்பட்டது மட்டும் அல்லாமல் சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.
அதில் முக்கியமாக சில மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் அமைக்க பட வேண்டும் என்ற கோரிக்கை. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு நிச்சயமாக அதற்கான முயற்சிகள் செய்வோம் என்று கூறினார். மேலும் மாண்புமிகு சி.கே.பிரசாத் கூறும்போது தமிழகத்தில் இருந்து தமக்கு இரண்டே இரண்டு புகார்கள் மட்டுமே வந்ததாகவும் (அன்பழகன் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா சம்பந்தமாக) மேலும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டது சம்பந்தமாக தன்னிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் தகுந்த முறையில் நடவடிக்கை என்றும் கூறினார். WJUT எப்போது சங்க நிகழ்ச்சி நடத்தினாலும் தாம் அவசியம் வந்து கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா, மாநில இணைச் செயலாளர்கள் லட்சுமி ராஜாராம், சன் டிவி ரமேஷ், ஜெய் சங்கர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், காந்தி, பொதுக் குழு உறுப்பினர் மலையப்பன், தலைமை நிலைய இணைச் செயலாளர் வல்லரசு,சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆண்டனி செல்வா, ராஜ் டிவி சாலமன் மாவட்ட இணைச் செயலாளர் பபிதா மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போளூர் நகரம் அத்தீமூர் பெரியகரம் மண்டகொளத்தூர் ராந்தம் பெலாசூர் கலசபாக்கம் மற்றும் போளூர் நகரை சுற்றிஉள்ள கிராமங்களுக்கு நாளை 7-09-2019 காலை 9.00 மணிமுதல் மாலை 5.00மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டும் போளூர் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொட்டும் மழையில் சாலை மறியல் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் திடீரென பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு செட் டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு
by mohan
written by mohan
மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களின் ஒளிபரப்பை கண்டுகளிக்க ஆணையிட்டு அதன்படி நாடு முழுவதும்
பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மத்திய அரசுடன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று கட்டுப்பாட்டு அறை அமைத்து 1.9.2017 முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உயர் தொழில் நுட்பத்தில் துல்லிய (டிஜிட்டல்) முறையில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமறை ஆணையம் (டிராய்) விதிமுறைகளின்படி “அனலாக்” முறையில் சிக்னலில் ஒளிபரப்புவது செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு, சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்து,கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கேபிள் டிவி ஆபரேட்டர், அஞ்சலக உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதக்கட்டணத்தொகையான ரூ.154 (வரிகள் உட்பட) என நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்ட ஒரு சில ஆப்ரேட்டர்கள், அரசு செட்டாப்பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்ஸ்களை பெற்று ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள், உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பின் அதனை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும். தாங்கள் குடியிருப்பு வீட்டை காலி செய்து விட்டு, வேறு பகுதிக்கு செல்லும் போது,அல்லது வேறு இணைப்பிற்கு மாறினாலோ தாங்கள் பெற்ற அரசு செட்டாப் பாக்ஸை ஆப்ரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.விட முயற்சியுடன் ,நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க உள்ள சந்திராயன் -2 யை வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ,தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில், மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளை வழங்கிய அரசு அதிகாரியின் செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, ராமேஸ்வரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு, மணமகள் வீட்டின் சார்பில் துணியிலான தாம்பூல பை வழங்கப்பட்டது. அந்தப் பைக்குள் இருந்த அட்டைப்பெட்டியில் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நெல்லி, நாவல் போன்ற விதைப் பந்துகள் இருந்தன.அத்துடன், ‘இது, இயற்கை அன்னையை காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்’ என்ற வாசகமும் தாம்பூலப் பையில் பொறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ராமநாதன் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அலுவலக ரீதியாக அனுப்பப்பட்டேன். அங்கு, கஜா புயல் ஏற்படுத்திய தாக்குதலினால் மரங்கள் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது.அப்போதே, ‘வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு பதிலாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என மனதில் நினைத்தேன். இதையடுத்து, எனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விதைப் பந்துகளை வழங்கிட முடிவு செய்தேன்.அதற்காக, அவினாசி பகுதியிலிருந்து 6,000க்கும் அதிகமான விதைப் பந்துகளை வாங்கி வந்து ஒவ்வொரு பாக்கெட்டிலும் 6 விதைப் பந்துகளை வைத்து வழங்கினேன்” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இம் மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, கண், காது, மூக்கு ,தொண்டை பிரிவு,, சித்தா பிரிவு,உள்ளிட்ட அனைத்து விதமான பிரிவுகள் செயல்படுகின்றன.. தற்பொழுது புதிதாக கண் மருத்துவ பிரிவிற்கு சிறப்பு கண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக கண் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலைமை முற்றிலும் மாறி தற்பொழுது இம் மருத்துவமனையில் கண் மருத்துவ பகுதியில் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவு முதலியன புதுப்பொலிவுடன் செயல்பட துவங்கியுள்ளது. பெரியகுளம் நகர மற்றும் கிராமப்புற ஏழை நோயாளிகளின் துயர் நீக்கும் வகையில் இப் பிரிவு செயல்படுவதாக சமூக ஆர்வலர்களும், மருத்துவ பயனாளிகளும் பாராட்டு தெரிவிக்கின்றனர். இம் மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க சிறந்த நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் (மருத்துவம், ஊரகம் மற்றும் குடும்ப நலம்) மரு.சரஸ்வதி, மருத்துவமனை கண்காணிப்பாளர், மரு.குமார், மற்றும் நிலைய மருத்துவர் மரு..ஆசியா ஆகியோர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்
சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை உடைபட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால் இதனை தடுக்க 01.09.2019-ஆம் தேதியன்று ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள்ஆனந்தராஜ் மற்றும் .ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை JCB இயந்திரம் வரவழைத்து பொதுமக்கள் உதவியோடு சாலையை சமன் செய்தனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சென்று வருகின்றனர்.
இரவு நேரம் என்றும் பாராமல் பொதுப்பணியில் ஈடுபட்ட காவலர்களை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.ஆலங்குளம் காவல் துறையினர் செய்த இத்தகைய பொதுப்பணி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
)மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
.செய்தி வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிமராமத்து, குடிநீர் விநியோக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
by mohan
written by mohan
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்கள் மூலமாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ. 21.8 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. ராமநாதபுரம் வட்டம் வட்டகுடி கண்மாயில் ரூ.48 லட்சம் மதிப்பிலும்,நாரணமங்கலம் கண்மாயில் ரூ.72 லட்சம் மதிப்பிலும், வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமராமத்து திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித் துறை மூலம் புறக்குடி கிராமத்திலுள்ள மெய்க்கண்டான் ஊரணியிலும், தேவிப்பட்டினம் ஊரணியிலும் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சென்று மாணவ, மாணவியருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் கீரை
வகைகள், காய்கறிகள் போன்ற பயன்தரும் செடிகளை நடவு செய்து சிறிய அளவில் தோட்டமாக பராமரித்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு, உதவி பொறியாளர் ஆனந்த்பாபுஜி, ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் லியோ பிராங்க்ளின்,ராமநாதபுரம் வட்டாட்சியர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், பாசனதாரர் நலச்சங்கத்தினர்,கிராம பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புற்றுநோயால்முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவரை ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரி ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தது. இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோய் பாதிப்பால், அவனது முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு ஆளானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், முதுகு தண்டுவடம் மேலும் செயல் இழக்கும் அபாயம் உணர்ந்து 8 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனது உறவினர்கள், தமுமுக.,விடம் உதவிக்கரம் கோரினர்.
இதை தொடர்ந்து நோய் பாதித்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்ல முடிவு செய்தனர். புதுச்சேரி துரிதமாக செல்ல தமுமுக.,வினர் இராமநாதபுரம் – புதுச்சேரி இடையே அனைத்து பகுதிகளிலும் உள்ள தமுமுக., முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பதிவிட்டனர். இத்தகவல் படி, இராமநாதபுரம் – புதுச்சேரிபோலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரினர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 366 கி.மீ., தூரத்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை தமுமுக., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொண்டி ஜாஸ் ஒட்டிச் சென்று உரிய நேரத்தில் சிறுவன் உயிர் காக்க உதவினார். நிஜ ஹீரோ தொண்டி ஜாஸ் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரியில் தொண்டி ஜாஸை ஒரு நாள் முதல்வராக்கி, நிறுவனர் முகமது ஷலாவுதீன் கவுரவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கல்வி ஆலோசகர் முனைவர் அ.சங்கரலிங்கம் எழுதிய நம் குழந்தை பத்திரம் நூல் வெளியீட்டு விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது.ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் அரிமா எம்.ஏ.சுந்தரராஜன் தலைமை வகித்தார். சு.மா.ஆதர்ஷியா இறை வாழ்த்து பாடினார். நேஷனல் அகாடமி பள்ளி குழும தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா முன்னிலை வகித்தார். டாக்டர் ச.ஜெ.அஸ்வின் துரை வரவேற்றார். செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளரும், ரோட்டரி முன்னாள் ஆளுநருமான டாக்டர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை கவிஞர் ஏகலைவன் புத்தக அறிமுகவுரை ஆற்றினார். நூலாசிரியர் முனைவர் சங்கரலிங்கத்தை நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் டாக்டர் வ.ஜெயலட்சுமி அறிமுகம் செய்து பேசினார். கனகமணி கிளினிக் மகப் பேறு தலைமை டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் சிறப்புரை ஆற்றினார். ஆப்டிகல் பேபஸ் உரிமையாளர் எம்.பாஷா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு) ச.அப்பாதுரை முதல் பிரதியை வெளியிட்டார். பொதுப்பணி துறை ஆட்சி அலுவலர் (ஓய்வு) சி.வள்ளி நாயகம், நெய்வேலி நிலக்கரி கழக மின்னியல் பிரிவு துணை பொது மேலாளர் வே.வேலப்பன், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் கு.கேசவராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நம் குழந்தை பத்திரம் நூலாசிரியர் முனைவர் அ.சங்கரலிங்கம் ஏற்புரை வழங்கினார். ச.ஜெ.பத்ம தர்ஷினி நன்றி கூறினார். திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை சே.தமிழரசி உதயகுமார் தொகுத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அடிப்படைவதிகள் இல்லாததை கண்டித்து மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் மாணவர்கள் படித்து வருகிறார்கள் இந்த கல்லூரியில் மாணவிகளுக்கான எந்தவிதமான கழிப்பிட வசதிகளும் குடிநீர் குழாய் யே எதுவுமே இல்லாத நிலையில் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத முதல்வரை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இன்று மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் கழிப்பிட வசதிகளை உடனடியாக செய்து தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தப் போவதாக கூறினர் இதன் பின்பு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவளுடைய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சரி செய்வதாக கூறியதின் பேரில் கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பும் பதற்றமும் நிலவியது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.திருச்சி பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில் புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ – மாணவியர் நேற்று (5ம் தேதி) காலை, ‘துாய்மை பாரதம்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில் பேரணி செல்லும்போது, சாலையில் பணக் கட்டு கிடந்துள்ளது.
இதைப் பார்த்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவியரான மதுஸ்ரீ (9), கனிஷ்கா (9) ஆகியோர், அந்த பணத்தை எடுத்து அருகில் இருந்த ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பேரணி முடிந்து பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர் மெட்டில்டா ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தார்.பள்ளியின் தாளாளர் செபாஸ்டின் அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்து, உரியவரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இது குறித்து, தாளாளர் செபாஸ்டின் கூறியதாவது: “இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை பெயின்டர். இந்த இரண்டு மாணவிகளும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்படி இருந்தும், கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை நேர்மையுடன் ஆசிரியையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவியரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம்” என, அவர் தெரிவித்தார்.ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மாணவியரை, ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அஞ்சல் பிரிப்பகம் மூடும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்..அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டம்
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அஞ்சல் பிரிப்பகம், தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே செயல்பட வேண்டும், இந்த அலுவலகம் மூடும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என, அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே ஒரு அஞ்சல் பிரிப்பகம் மட்டுமே திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அலுவலகமான இது, 1982 ஆம் ஆண்டு முதல் தியாகி அண்ணாமலை நகரில் உள்ள, தலைமை அஞ்சலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், இந்த அஞ்சல் பிரிப்பகத்தை மூடிவிட, தபால்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தை விழுப்புரம் மாவட்ட தலைநகரோடு இணைத்திட அஞ்சல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அலுவலகத்தை மூடிவிட்டால், பொதுமக்கள் இந்த சேவைகளை பெற விழுப்புரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.எனவே, அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தியும், இந்த அஞ்சல் பிரிப்பகம் மூடப்படுவதை கண்டித்தும், திருவண்ணாமலையில் வெள்ளியன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கோட்ட தலைவர்கள் பி.குணசேகரன், கே.அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர்கள் கே.சங்கரன், பி.பரந்தாமன், கோட்ட செயலாளர்கள் டி.குணசேகரன், டி.பி.ரமேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையிலிருந்து மதுரைக்கு வந்து பயணிகள் ரயிலில் பொள்ளாச்சியில் டிக்கெட் எடுத்து ஏறியுள்ளார் .இவர் இரவு துப்புரவு பணிக்காக ரயில் கொண்டு செல்லப்பட்டது .அப்போது இவரது உடலைக்கண்ட துப்புரவு பணியாளர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் .அவரை சோதித்து பார்த்தபோது அவர் பாலக்காட்டில் நேற்று மதியம் மது வாங்கியதற்கான பில் ஒன்று அவர் பையில்இருந்துள்ளது .இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை மது அதிக அளவில் குடித்து மரணம் அடைந்தாரா அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து, திருச்சி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இந்த இயந்திரத்தைக் கொண்டு, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இணைந்து, ‘புதிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு கிளப்’ என்ற அமைப்பை உருவாக்கி சில கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்கள், 1983-ல் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுடன் இணைந்து, சாலையோர குப்பைகளை அகற்றும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு முன்னர், சென்னை மாநகராட்சிக்கு சென்று அங்கு உள்ள குப்பை அகற்றும் இயந்திரத்தை பார்வையிட்டனர்.
அதன்பின்னர், என்.ஐ.டி-யின் முதல்வர் மினிஷாஜி தாமஸ், திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த இயந்திரத்தை வடிவமைத்தனர். ஒரு லட்சம் ரூபாய் செலவில், ஓராண்டு கால உழைப்பில் வாக்வம் கிளீனர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை, திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினர்.
இந்த இயந்திரத்தைக் கொண்டு காய்ந்த இலைகள், பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகள் என, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அ.இ.பா.பிளாக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மூக்கைத்தேவாின் 40வது குருபூஜை அனுசாிக்கப்பட்டது.இதில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று6.9.19 கல்வித்தந்தை அமரர் மூக்கையாத்தேவர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.பின் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளா் ராஜேஷ் கண்ணன் ராஜஸ்தான்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை காந்திபுரம் 3 வது தெருவை சேர்ந்த முத்து அவரது மகள் அர்ச்சனா 15 .லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார் .இந்த நிலையில் இன்று 06.09.19 பள்ளிக்கு வந்த அர்ச்சனா பள்ளிக்கு வரும்போது பள்ளிப் பையில் சேலை வைத்துக் கொண்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து வகுப்பு அறைக்கு உள்ளே சென்று சேலையை போட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. நீண்ட நேரமாகியும் உடலை எடுத்து செல்ல வாகனம் வராத்தை தொடர்ந்து உறவினர்கள் அர்ச்சனா உடலை இருசக்கர வாகனத்துல் எடுத்து செல்ல முயன்றனர்.. அதில் உறவினா்களுக்கும் காவல்துறையினருக்கும் தகராறு எற்பட்டது. பின் வாகனம் வந்தது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு எடுத்துச் செல்லப்பட்டது
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.