திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆவணிமாத அமாவாசை நடைபெற்ற து .இதனை முன்னிட்டு மருத்துவ முகாம் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்று ரோட்டரி கிளப் சார்பில் தெரிவித்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் MVM நகரிலுள்ள (VIP) விஐபி நகரில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக காவல் உதவி மையத்தை திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜா சார்பு ஆய்வாளர்கள் அழகுராஜா, ராஜகணேஷ் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி , ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 3 ஆட்டோக்கள் 7 மினிலாரிகள் தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்து கன்னிவாடி மற்றும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்க 14000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள் பிரகாசம் மற்றும் புரோக்கர் ருத்ரவன்னியன் உள்ளிட்ட 3 பேர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
செய்தி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீளம் தாண்டுதல் போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர் சாதனை
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடார் உயர் நிலைப் பள்ளி மைதானத்தில் நிலக்கோட்டை ஒன்றிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஆதிராஜன் முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவர் ஆதிராஜனையும் பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர் சுதர்சனையும் பள்ளியின் தாளாளர் சுதாகரன், தலைமை ஆசிரியர் விஜயகுமார், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வெகுவாக பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வு 32,879 பேர் எழுதவுள்ளனர்..மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் …
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் 01.9.2019 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் -ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்விற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை 1, நிலஅளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்வதற்காக ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது ராமநாதபுரம் மாவட்டத்தில் 01.9.2019 (ஞாயிற்றுக்கிழமை)அன்று நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்த 32,879 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை அமைதியான முறையில் நடத்த ஏதுவாக 107 இடங்களில் உள்ள 128 தேர்வு மையங்களில்
தேவையான அளவு தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படை குழுக்கள்,வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 27 நிறுத்தும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்களுக்கு தேவையான தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் அந்தந்த தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ப வேண்டும்.தேர்வு நாளில் தேர்வு எழுதும் நபர்கள் சிரமப்படாதவாறு போதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்பாக மாவட்ட கருவூலம் கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இத்தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளை எவ்வித பாரபட்சமுமின்றி பின்பற்றி அமைதியான முறையில் இத்தேர்வை நடத்த பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.ராமன் (பரமக்குடி)கோபு,(ராமநாதபுரம் பொறுப்பு)மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.மதியழகன் மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.முத்துச்சாமி,பாலதண்டாயுதபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் என்.கோட்டீஸ்வரன்,ஜி.பிரசாத் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துப்பாக்கி குற்றவாளிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.
by mohan
written by mohan
சென்னையை சார்ந்த தனசேகரன், கார்த்திகேயன், கிருஷ்ணன் ,மதுரையை சேர்ந்த ரகுபதி, ராஜா, பால்பாண்டி, சசிகுமார் ,ஆகியோர் ஒரு வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ,நேற்று 29.08.19 பகல் 2 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி கடக்கும்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்க பிரச்சனை ஏற்பட்டு, சசிகுமார் என்ற நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த SSI சுரேஷ் அவரை பிடிக்க முயன்று உள்ளார் .அவர்கள் தப்பிக்கவே இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
நான்கு பக்கமும் சுற்றி சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த நபர்கள் “தப்பிக்க திறம்பட செயல்பட நினைத்து, கொண்டு வந்த காரை விட்டு விட்டு ஆட்டோவில் தப்பிக்க முயன்றனர்.அப்பொழுது வாகன சோதனையில் ஈடுபட்ட வாலாந்தூர் போலீசார், ஆட்டோவில் வந்த நபர்களை அலேக்காக கைது செய்தனர் . விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், Iதுப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை விரைவாக கைது செய்த போலீசாரை வெகுவாக பாராட்டினர்.மேலும் அவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் 18 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன . அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குற்றவாளிகளை 1.1/2 மணி நேரத்தில் திறம்பட செயல்பட்டு கைது செய்த போலிசாருக்கு, *தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன்நேரில் சென்று பரிசு வழங்கினார்.DIG ஆனி விஜயா, IPS, மதுரைமாவட்ட SP மணிவண்ணன்,IPS ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்டு மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் தென் கடல் தீவு பகுதியான மன்னார் வளைகுடா மணலி தீவு மணல் திட்டில் படகு ஒன்று ஒதுங்கி இருப்பதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற போலீசார் 4624 பிடிஎம் என்ற எண்ணில் தயாரிக்கும் இடம் சின்ன குடியிருப்பு, கல் பெட்டி என எழுதிய இலங்கை படகை மீட்டனர். இலங்கையில் இருந்து தப்பித்து படகை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனி வட்டாச்சியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டுவதாக பொதுமக்கள் எச்சரிக்கை…
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதி திராவிட மக்களுக்கு என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கு மேற்பட்ட வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வழங்கிய வீட்டுமனை பட்டாவின் அருகில் பொது பயன்பாட்டுக்காக சுமார் 50 சென்ட் இடத்தை பிற்கால பொது பயன்பாட்டிற்காகவும் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் சமுதாயக்கூடம் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது.தற்பொழுது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசு மூலம் வழங்கிய வீட்டு மனை அருகில் அந்த மக்களின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் அல்லது சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல் சில தனி நபர்களிடம் சுமார் 20 ஆயிரம் என சுமார் 10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பொது இடத்தில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மெத்தனம் காட்டி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களின் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்குவதை தடுத்து நிறுத்தி பொது இடத்தில் சமுதாயக்கூடம் அல்லது அங்கன்வாடி மையம் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெயர் மாறியது: ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயர் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் என்ற பெயர் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மாநில தொழில்நெறிவழிகாட்டல் மையம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்றாட பணிகளுடன், திங்கள்தோறும் திறன் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், செவ்வாய்தோறும் பள்ளி கல்லூரிகளில் அரசு வேலைவாய்ப்புமற்றும் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துதல்,புதன்கிழமைகளில் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துதல்,வியாழக்கிழமைகளில் தனிநபர் , குழு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்,வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் போன்ற பணிகளை இவ்வழிகாட்டுதல் மையம் செய்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்மையத்தினை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற 02.09.2019 ந்தேதி மதுரை மாநகரில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனா போன்ற பல இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை மதுரை மாநகரில் பல இடங்களில் நிறுவி ஓரிரு நாட்கள் கழித்து தனித்தனியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்வதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை ஏற்படுத்த அரசை அறிவுறுத்தியதின்படி சிலைகளை நிறுவவும், தண்ணீரில் கரைப்பதற்கும் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி, போக்குவரத்து நடைமுறைப்படுத்துதல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல் போன்றவற்றை உறுதி செய்ய பொது இடத்தில் விநாயகர் சிலைகளை நிறுவுவது, பூஜை செய்வது மற்றும் தண்ணீரில் சிலைகளை கரைப்பது சம்பந்தமாக கீழ்காணும் விதிமுறைகள் / கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
3. விநாயகர் சிலைகளை நிறுவும் அமைப்பாளர்கள் கீழ்க்கண்ட தடையில்லா சான்றிதழைப் பெற்று, அந்த சான்றிதழ்களுடன் மதுரை மாநகரில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம், உரிய முறையில் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
சிலை நிறுவப்படும் இடம் பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு / நெடுஞ்சாலை துறையிடம் தடையில்லாச் சான்று பெற்று காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் ஒலிபெருக்கி அனுமதியுடன் (Sound amplifier license / permit) கூடிய தடையில்லா சான்று பெற்று காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சிலை நிறுவ தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் இதர அமைப்புகள் தீ பாதுகாப்பு தரத்துடன் இருப்பதை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் பெற்று காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடமிருந்து (TANGEDCO) தற்காலிக மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெறப்படும் ஆதாரம் ஆகியவற்றை தெரிவிக்கும் கடிதம் பெற்று காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
4. மேற்படி ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர்களால் கீழ்காணும் விதிமுறைகளின் அடிப்படையில் தேவையான அனுமதி வழங்கப்படும்.
நிறுவப்படும் சிலைகள் சுத்த களிமண்ணால் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதிக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (Plaster of Paris) தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டும், வேதிப் பொருட்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்ட சிலைகள் தடை செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி சிலைகள் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு இருந்தால் நீரில் கரையக்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கையான சாயங்கள் உபயோகிக்கப்பட்டு இருக்கவேண்டும். அமைப்பாளர்கள் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு தற்காலிகமாக அமைப்புகளை அமைக்க வேண்டும். மேலும் மேற்படி அமைப்புகளுக்கு உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்/ வெளி செல்ல எந்தவித சிரமமுமின்றி சென்று வரும் வகையில் அமைக்கப்படவேண்டும்.
விநாயகர் சிலைகள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக 12.00 மணிக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டு முறையாக அமைதியான முறையில் கரைக்கப்பட வேண்டும். முடிந்தவரையில் ஊர்வலம் ஆனது மசூதிகள் / கிறிஸ்தவ சர்ச்சுகள் ஆகியவற்றை தவிர்த்து செல்ல வேண்டும்.
அமைப்பாளர்கள் சிலை அமைக்கும் இடத்தில் தேவையான முதலுதவி மருந்து மருத்துவ உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் மேலும் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை சிலையை சுற்றி எந்த இடத்திலும் இல்லாதவாறு உறுதி செய்ய வேண்டும்.
நிறுவப்பட உள்ள சிலைகள் கண்டிப்பாக 10 அடி உயரத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.
வவழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் மருத்துவமனைகளுக்கு அருகிலோ கல்வி நிலையங்கள் அருகிலோ அல்லது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களிலிலோ சிலைகளை அமைக்கக்கூடாது.
மைக் அனுமதி காலை 2 மணி நேரம் மற்றும் மாலையில் 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும். பூஜை சமயத்தில் சிறிய அளவிலான பெட்டி (Box) வடிவ ஒலி ஒன்று மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். ஒலிப்பான்களின் சத்தத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது. இசை ஒலிபரப்பப்படும் பட்சத்தில் அதன் சத்தம் (டெசிபல்) அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கண்டிப்பாக இருக்கக் கூடாது கூம்பு வடிவ (Cone) ஒலிப்பான்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வழிபாடுகளை காரணம் காட்டி சட்டவிரோதமாக மின்சாரத்தை எடுத்தல் உள்ளிட்ட எந்த விதமான சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடைபெறா வண்ணம் அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
சிலை நிறுவப்படும் இடங்களில் எந்த ஒரு அரசியல் கட்சியினர் உடைய அல்லது மத சார்புடைய அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போடுகள் இருக்கக் கூடாது.
அமைப்பாளர்கள் சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் இரண்டு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். சிலை நிறுவப் பட்டுள்ள இடத்தைச் சுற்றி சிறந்த முறையில் ஒலி அமைப்பு செய்திருக்கவேண்டும். மின் தடைகள் ஏற்படின் ஜெனரேட்டர்கள் உபயோகப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத உணர்வைத் தூண்டும் வகையிலோ மற்ற மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் வகையிலோ கோஷங்கள் எழுப்புவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் (மினி லாரி / டிராக்டர்) உபயோகப்படுத்தப்பட வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மூன்று சக்கர வாகனங்கள் அனுமதிக்கக்கூடாது.
விநாயகர் ஊர்வலத்தின் போது வாகனத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 1988ம் வருடம் மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிகமாகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் கண்டிப்பாக வெடிகளை வெடிக்க கூடாது.
பொது அனுமதி, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய அமைப்பாளர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் அறிவுறுத்தும் எந்த ஒரு நிபந்தனைகளையும் அமைப்பாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தீ பாதுகாப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகளால் ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையில் பந்தல்களில் அமைக்கப்பட்டுள்ள மின்சார சாதனங்களின் பாதுகாப்பும் உறுதி தன்மையை சோதித்து ஒப்புதல் தீயணைப்புத் துறையினரிடம் பெற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர், காவல்துறையினர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் பரிசீலனை செய்து அறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.
பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அச்சிலைகள் நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.
சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சிலைகளில் இருந்த பூக்கள், துணிமணிகள், பிளாஸ்டிக் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை தனியாகவும் மறுசுழற்சி செய்யும் பொருட்களை தனித்தனியாகப் பிரித்து எடுக்கப்பட வேண்டும்.
சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சிலை கரைக்கப்பட்ட இடங்களான ஆற்றோரங்கள், நீர்நிலைகள், கடற்கரையோரம் அங்கிருந்து கழிவு பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மறுப்பிற்கு எதிராக காவல் ஆணையர், மதுரை மாநகர் அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேசிய விருது பெற்ற அழகப்பா பல்கலைக்கழக நுண்கலை துறை பேராசிரியர் தேவராஜ் மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான அடிப்படை திறன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
ஓவியர் தேவராஜ் மாணவர் ஜோயலை அமரவைத்து மூன்று நிமிடங்களுக்குள் அவரை போன்று படம் வரைந்து காண்பித்து அசத்தினார். பயிற்சியின் நிறைவாக மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள் ராகேஷ்,முகல்யா,நதியா,முத்தய்யன் ,அய்யப்பன்,ஓவியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில 200மது பாட்டில்கள் (பாண்டிச்சேரி) மதுபானம் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக அய்யர் பங்களாவைச் சோ்ந்த சுப்பையா முன்னதாக கைது செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா திட்ட முகாம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வட்டம் அம்பாத்துறை கிராமம் மேலக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைப்பெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, ரேசன் கார்டு, முதியோர் உதவித் தொகை, மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்கு மக்களிடத்தில் மனுக்கள் பெறப்பட்டன.
அம்மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ்,ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் மதிவானி, அம்பாத்துறை கிராம நிர்வாக அலுவலர் சாகிரா பானு, கீழக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜலெட்சுமி, N.பஞ்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கலிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகுல குமார், உதவி தோட்டக் கலை அலுவலர் கலையரசன், அதிமுக ஊராட்சி செயலர் துளசி, அம்பாத்துறை கிராம உதவியாளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
by mohan
written by mohan
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரியும் 100நாள் வேலை அட்டை வைத்திருந்த அனைவருக்கும் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் பாண்டியன் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் மாவட்ட பொருளாளர் காசி ஒன்றிய தலைவர் மலைச்சாமி சி பி எம் முருகன் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சரஸ்வதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
by mohan
written by mohan
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை ஆரிய பட்டியல் கடந்த இரண்டு மாதங்களாக சரியான குடிநீர் வழங்கப்படாததால் போர்வெல்லில் தண்ணி இல்லாததால் புதிய போர்வெல் அமைக்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர் இதில் ஆரிய பட்டி கிராம் ஆண்கள் பெண்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனைத் தொடா்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
by mohan
written by mohan
போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் கலா வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.இதில் எலும்பு முறிவு மருத்துவர் நடராசன், காது மூக்கு தொண்டை மருத்துவர் பழனிவேல்ராஜன், கண்மருத்துவர் சரண்யா, குழந்தைகள் நலமருத்துவர் ரேவதி, மனநல மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாற்றுத்திறன் குழந்தைகளை ஆய்வு செய்து அவர்கள் ஊனத்தின் தன்மைக்கேற்ப அடையாள அட்டைக்கு தேர்வு செய்தனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.இதில் புள்ளியியல் அலுவலர் ராமமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் மோகன், அரசினர் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் சுகந்தி, விஜயலட்சுமி, ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி பிசி பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தினமும் நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இவா்கள் பள்ளி செல்லும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகள் நிற்பது கிடையாது.ஒரு சில பேருந்துகள் நின்றாலும் கூட்டமாக இருப்பதினால் மாணவ மாணவியா் படியில் தொங்கிக் கொண்டே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை தாலுகா பொற்குணம் மதுராகாரப்பள்ளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். முகாமில் 1,014 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மழைநீரை நாம் சேமிப்பதில்லை. கிராமங்களில் உள்ள குளம், குட்டை, ஆறுகள் தான் உங்களின் பலம். அதை அழித்தால் பலவீனம். சமுதாயத்திற்கு பலன் தருவதை நாம் அழித்தால் முன்னேற முடியாது. நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியதை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் கிராமங்கள் அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும்.தற்போது குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள், ஊரணிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை. கிராமங்களை வாழ வைப்பதும், அழிப்பதும் உங்களிடம் தான் உள்ளது. வாழ்வதற்கு உகந்த இடமாக கிராமங்களை நாம் தான் உருவாக்க வேண்டும்.விவசாயத்திற்காக 70 சதவீதம் நீர் செலவிடப்படுகிறது. விவசாயத்தில் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகமாக சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தும் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. நிலத்தடி நீர் உயருவதற்கு மழை நீரினை நாம் அனைவரும் சேமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கலெக்டர் கந்தசாமி முகாம் நடைபெற்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இதனையடுத்து பொற்குணம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் நார்த்தாம்பூண்டி ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 , அன்று சிதறால் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக ஷர்மி என்ற பேராசிரியரை ஷாஜின் என்பவர் கொலை செய்த வழக்கில் சாட்சியாக இருந்து அவருக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பகை காரணமாக ஷாஜினின் நண்பனான பிரபல ரவுடி சுனில் (28) ஆனந்த் (27) , சஜிக்குமார் (24), சஜீன்(30) ஆகியோர் சேர்ந்து சாந்தகுமாரை கடத்தி சென்று 2 லட்சம் பணம் கேட்டு அவரது மனைவிக்கு செல்போனில் மிரட்டியுள்ளனர். செய்வது அறியாது திகைத்த அவரது மனைவி ராதா (36) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் .சிவ சங்கர் தனிபடையினர் விரைந்து செயல்பட்டனர். குற்றவாளிகளுக்கு முதற்கட்டமாக 50,000 ரூபாய் சாந்தகுமாரின் மனைவியை வைத்து கொடுப்பது போல அவர்களை ஆலுவிளை பகுதியில் வரவழைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கடத்தப்பட்ட 5 மணி நேரத்திற்குள்ளாக சாந்தகுமார் மீட்கப்பட்டார். குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார். கடத்தப்பட்ட நபரை 5 மணி நேரத்திற்குள்ளாக மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.