மதுரை காந்திபுரம் 3 வது தெருவை சேர்ந்த முத்து அவரது மகள் அர்ச்சனா 15 .லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார் .இந்த நிலையில் இன்று 06.09.19 பள்ளிக்கு வந்த அர்ச்சனா பள்ளிக்கு வரும்போது பள்ளிப் பையில் சேலை வைத்துக் கொண்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து வகுப்பு அறைக்கு உள்ளே சென்று சேலையை போட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. நீண்ட நேரமாகியும் உடலை எடுத்து செல்ல வாகனம் வராத்தை தொடர்ந்து உறவினர்கள் அர்ச்சனா உடலை இருசக்கர வாகனத்துல் எடுத்து செல்ல முயன்றனர்.. அதில் உறவினா்களுக்கும் காவல்துறையினருக்கும் தகராறு எற்பட்டது. பின் வாகனம் வந்தது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு எடுத்துச் செல்லப்பட்டது
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.