வேலூர் அடுத்த கஸ்பாவில் ௹ 1.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இது கட்டப்பட்டது. அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், திமுக பிரமுகர் வள்ளலார் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், அன்னதானம் நடைபெற்று வருகிறதுஇதனைத் தொடர்ந்து, மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உணவு தயார் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதனை தொடர்ந்து, சமையல் கலைஞருடன் சேர்ந்து தானும் சமையல் பணியில் ஈடுபட்டு வடை சுட்டு அசத்தினார். இதனை பார்வையிட்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சரைபாராட்டினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:புரட்சித்தலைவி அம்மாவின் திரு பெயரில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.கடந்த அம்மா ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் போது உணவே மருந்தாக 5 வேளையும் கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 50 அடி ரோட்டில் ,மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம். முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, முகேஷ் சர்மா, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
by mohan
written by mohan
திருப்பரங்குன்றம் நகர்மன்ற பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில் முன்னர் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அன்னதானத்தை துவக்கி வைத்தார்திருப்பரங்குன்றம் ரஜினி காந்த் 72 வது பிறநத நாளை முன்னிட்டு பதினாறுகால் மண்டபத்தில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினர்முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலில் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருக்க சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் சுரங்க பாதையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீர் தேங்கியதால் அவதி.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இராஜபாளையம் to வெம்பக்கோட்டை வரை செல்லும்.சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது .தற்போது ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் சுற்றி செல்கிறது மேலும் இருசக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கணபதியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை பயன்படுத்தி செல்கின்றனர்மழை நேரங்களில் இந்த பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அகதி அளவில் சகதிகள் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது .சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீருக்கு மேல் சிமெண்ட் கலந்த சல்லிகளை போட்டு தற்காலிகமாக சாலைகளை சரி செய்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு .சிமெண்டு ஜல்லி கீழே போட்டு சாலையை சீரமைத்து வரும் பணியில் தங்கபாண்டியன் எம்எல்ஏ ஈடுபட்டு வருகிறார் பொதுமக்கள் இந்த பகுதியில் தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தண்ணீரில் செல்ல மாற்றுப்பாதை செல்வதற்கு வழி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினருரிடம் அப்பகுதி பொதுமக்கள் MLA விடம் கோரிக்கை வைத்தனர் .விரைவில் சரி செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்கமாநாடு நடைபெற்றது விழாவில் நக்கீரர் தமிழ்ச் சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை கூறினார்.டெல்லி அகில இந்திய தமிழ் சங்க தலைவர் முகுந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார். ‘விழாவில் பேசிய ஆதினம் அவர் கூறியதாவதுதமிழ் தொன்மையான மொழி பழமையான மொழி அவற்றின் தன்மை புரியாமல் மம்மி டாடி என்று கூறுகின்றனர் மம்மி என்பதற்கு இறந்தது என்று பொருள் ஆனால் அதை பேசும் குழந்தையை கட்டியணைத்து மகிழ்கின்றனர் .எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உள்ளது கண்ணகி பாண்டிய மன்னனை எதிர்த்து தேரா மன்னா என்று கூறியதை நினைவு கூறவேண்டும்.வந்திருப்பது தெய்வம் என்று தெரிந்தும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறிய நக்கீரர் வாழ்ந்த தமிழ் மண் இது.ஆகையால் தமிழைப் போற்றி தமிழை வளர்க்க வேண்டும் ஆங்கிலேயன் போய்விட்டாலும் ஆங்கிலத்தை நாம் விடமுடியவில்லை ஆங்கில சம்பிரதாயங்களை நாம் கடைபிடித்து வருகிறோம்.ஆகையால் நாம் தமிழ் மொழியை வளர்க்க பாடுபட வேண்டும்.அவ்வையார் போல் தமிழ்மொழியை யாரும் வளர்க்க வில்லை.ஆத்தி சூடி.கொன்றைவேந்தன் நாலடியார்,திருவாசகம் போன்றவை பற்றி தெரியவில்லை.திருக்குறளை பற்றி தெரியவில்லை. என கூறினார்.பின்னர்செய்தியாளார்களிடம்பேசிய ஆதினம்உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதற்குநான் எழுந்து நிற்பேன் என கூறினார்மாநாடு கூறித்த கேள்விக்குமாநாடு சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் பாட நூல்களில் ஆசாரக்கோவை இன்னா நாற்பது இனியவை நாற்பது கொன்றைவேந்தன் திருவாசகம் தொல்காப்பியம் பெரியபுராணம் நீதி நெறி விளக்கம் போன்ற தமிழ் நூல்கள் பயிற்றுமொழிக்கபடவேண்டும்.தமிழ் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என நிலவ வேண்டும் என மதுரை ஆதீனம் ஞான தேசிக பரமாச்சாரியார் கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மேம்பாலத்தில் இருந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவர் இன்று அலங்காநல்லூரில் இருந்து சிந்தாமணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலைய மேம்பாலத்தில் நெசவுபாண்டி என்பவருடன் மதுபோதையில் வேகமாக வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் மேம்பலத்தில் இருந்த தடுப்புச் சுவரில் நிலைதடுமாறி மோதிய விபத்தில் பாலத்திலிருந்து கீழே விழுந்த இருவருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஜெஸ்லின் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கவுரவித்தார். தென்காசி நகர SDPI மருத்துவ சேவை அணி மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா தென்காசி அஹமதுஷா மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் ஆசாத்,நகர துணைத் தலைவர் பீர் முஹம்மது, நகர துணைச் செயலாளர் மாஸ் காஜா மைதீன், நகர பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் சினா, சேனா சர்தார்,தொகுதி பொருளாளர் சுல்தான், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சமூக சேவகர் ஹாஜி செய்யது ஜலாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாவட்ட தலைவர் யாசர் கான், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், குழந்தைகள் நல மருத்துவர் பாபு, அரசு காச நோய் மருத்துவர் ஜாபர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி உரிய ஆலோசனைகளை வழங்கினர்.இந்த நிகழ்வின் போது மாவட்டம் முழுவதிலும் இருந்து வருகை தந்திருந்த பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வடகரை மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.இதில் சிறப்பாக திறன்பட பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு கோப்பைகள் மற்றும் நற்சான்றுகளை மாவட்ட எஸ்.பி வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற செயல்கள் பற்றியும், குற்ற செயல்களை எவ்வாறு விரைவாக செயல்பட்டு கண்டறிவது என்பது பற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குற்றங்களை தடுப்பதற்கும் நடந்த குற்றத்தை விரைவாக கண்டறிவதற்கும் அதிக அளவு CCTV கேமராக்களை அமைத்த கரிவலம் வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் அவர்களுக்கு சிறந்த செயல்படும் அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. குற்றங்களை திறன்பட கண்டறிவதற்காக தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு சிறந்த புலன்விசாரணை அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. காவல் நிலையத்திலும் பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று சிறப்பாக செயல்பட்டதற்காக புளியரை சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் அவர்களுக்கு சிறந்த நிலைய பொறுப்பு அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது. மேலும் சம்மன் மற்றும் சாட்சிகள் ஆகியவற்றை திறன்பட நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விரைவாக தீர்ப்பு பெற செய்த செங்கோட்டை காவல் நிலைய முதலாம் நிலை காவலர்கள் சங்கர் மற்றும் முருகன் ஆகியோருக்கு சிறந்த நீதிமன்ற காவலர்கள் என்ற கோப்பையும் வழங்கப்பட்டது.மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக குற்றத்தை திறம்பட கண்டறிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு IUCAW, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், சைபர் கிரைம் மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய அளவிலான சிலம்பப் போட்டி இன்று (12.12.21) திருச்சி தேசிய கல்லூரியில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500-க் கும் மேற்பட்ட சிலம்பக்கலை வீரர்-வீராங்களைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். இந்த போட்டியயை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக ஒருவருக்கு ஒருவர் மோதினார்கள். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதகளும் கேடயமும் வழங்கப்பட்டது.இதில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு விலங்கியல் பயிலும் மாணவர் T. சந்துரு மூன்றாம் பரிசு பெற்று நம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அம்மாணவனின் வெற்றிக்கு காரணமாக சிலம்ப ஆசான் முனைவர். ப. மனோகர், உதவிப் பேராசிரியர் தாவரவியல் துறை மற்றும் S. மணிகண்டன் உதவிப் பேராசிரியர் ஆங்கில துறை ஆகியோர் இருவரும் இருந்துள்ளனர். நம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவனை கல்லுரி தலைவர், செயலர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வாழ்த்தினர். போட்டி ஏற்பாடுகளை திருச்சி கராத்தே மாஸ்டர் சங்கர் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்த யோகான் வான் இலாமாண்ட் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13, 1805).
by mohan
written by mohan
ஜான் வான் இலாமாண்ட் (Johann von Lamont) FRSE டிசம்பர் 13, 1805ல் ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன்சயரில் இன்வெரே பகுதிக்கு அருகில் அமைந்த கோரீமுல்சீயில் பிறந்தார். இவரது தந்தையார் இராபர்ட் இலாமாண்ட். இவரது தாயார் எஇலிசபத் ஏவான். இவர் பிரேமார் பக்கத்தில் அமைந்த இன்வெரே பள்ளியில் கல்வி பயின்றார். இவர் தந்தையார் 1817ல் இறந்துவிட்டார். எனவே இவர் செருமனிக்கு, புனித ஜேம்சு துறவுமடத்தின் இரேட்டிசுபானில் உள்ள சுகாட்சு பெனெடிக்டைன் கல்லூரிக்கு, அனுப்பப்பட்டார். இவர் போகங்கவுசன் வான்காணகத்தில் சேர்ந்து வானியல் பணியைத் தொடங்கினார். 1835ல் அதன் இயக்குநரானார். முனைவர் பட்டத்தை 1830 இல் முடித்து 1852 இல் மூனிச் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆனார். சுமார் 35,000 உள்ளீடுகளைக் கொண்ட ஒரு நட்சத்திர பட்டியலை உருவாக்கும் பணியை அவர் ஆய்வகத்தில் மேற்கொண்டார்.இவரது சிறப்புப் புலம் புவியின் காந்தவியலாகும். இவர் புவியின் காந்த அளக்கைகளைப் பவாரியா, வடக்குச் ஜெர்மனி, பிரான்சு, சுபெயின், டென்மார்க் ஆகிய இடங்களில் மேற்கொண்டார். இவர் 1850ல் காந்தப் பத்தாண்டு அலைவுநேரத்தையும் (பத்தாண்டு வட்டிப்பு புவிக்காண்டஹ்ப்புலத்தை உருவாக்கும்) புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்தார். இது ஓரளவு சூரியக் கரும்புள்ளி வட்டிப்பை ஒத்தமைந்தது. அதே ஆண்டில் என்றிச் சாமுவேல் சுவாபே சூரியனின் கரும்புள்ளிகளின் வட்டிப்பைக் கண்டறிந்தார். இவர் யுரேனசு, காரிக்கோள் ஆகியவற்றின் வட்டணைகளைக் கணக்கிட்டார்.யுரேனசின் பொருண்மையின் முதன்மதிப்பைக் கொணர்ந்தார். தற்செயலாக இவர் 1845ல் ஒருமுறையும் 1846ல் இருமுறையும் கண்ணுற்றுள்ளார். எனினும் அதை இவர் ஒரு புதிய கோளாக உய்த்துணரவில்லை. இவர் Handbuch des Erdmagnetismus (1849) எனும்நூலின் ஆசிரியர் ஆவார்.இலாமாண்ட் அரசு கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரும் எடிபர்கு அரசு கழக உறுப்பினரும் ஆவார். இவர் 1867ல் பவாரிய அரசரால் பவாரிய முடித்தகைமை ஆணை வழங்கப்பட்டார். இவர் இதன்வழி வான் எனும் முன்னடையைப் பயன்படுத்தலாம். புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்த யோகான் வான் இலாமாண்ட் ஆகஸ்ட் 6, 1879ல் தனது 73வது அகவையில் ஜெர்மனி மூனிச் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். மூனிச்சில் உள்ள இவரது சிலை திறந்த கையோடு வடிக்கப்பட்டுள்லது. இக்கையில் மக்கள் சிறு காசுகளை வைக்கின்றனர். டீசைடு களக்குழு 1934ல் ஸ்காட்லாந்தில் இன்வெரேவில் பளிங்கு நினைவு பேழையை நிறுவியது. இச்சிலை சர் ஜேம்சு ஜீன்சு அவர்களால் திறக்கப்பட்டது. இலாமாண்ட் (செவ்வாய்க் குழிப்பள்ளம்), இலாமாண்ட் (நிலாக் குழிப்பள்ளம்) ஆகியவற்றிக்கு இவர் பெயர் இடப்பட்டுள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி மாற்றி அமைக்க கோரிக்கை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று 11.12.2021, இயக்க அலுவலகத்தில் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் தாஜுல் அமீன், துணை செயலாளர் நூருல் ஜமான், இணை செயலாளர் அகமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், மக்கள் செய்தி தொடர்பாளர் முகைதீன் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் செய்யது ரசீன் அகமது, சேகு ஜலாலுதீன் மற்றும் உறுப்பினர்கள் அஹமது ஹுசைன் ஆஷிப், முகம்மது அய்யூப்கான், இஸ்மாயில், அஹமது அஸ்லம், ஹமீது சுல்த்தான் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. கீழக்கரை நகராட்சியில் செய்யப்பட்ட வார்டுகள் மறுவரையறையில் இருக்கும் குளறுபடிகளை எதிர்த்தும், 14.12.2018 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் எண் : 407 ஐ இரத்து செய்யக் கோரியும், கீழக்கரை நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்திடக் கோரியும், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, சட்ட ரீதியாக போராடி நீதியை பெறுவது என்றும் ஏக மனதாக தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.
2. கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனையினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெறுவது சம்பந்தமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதென்றும், அதற்கேற்ப தாலுகா மருத்துவமனையினை மேம்படுத்த அரசு துறையினருக்கு மனு செய்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கோருவது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு மனு செய்வது என்றும் ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் அஹமது தெரு பொதுநல சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் அதிக நபர்களுக்கு பரவிவரும் காரணத்தினால் அஹ்மது தெரு பொதுநல சங்கம் சார்பில் என்.எம்.டி தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, அகமது தெரு, மேலத்தெரு, பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
பின்பு அவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள், அதாவது 14/12/2021 வரை நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். என் நிகழ்ச்சியில் அகமது தெரு பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் தனது கோழிக்கடையில் ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் கால் கிலோ சிக்கன் இலவசமாக வழங்கி வருகின்றார்.
by mohan
written by mohan
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டியில் அவரது ரசிகர் ஒருவர் வித்யாசமான முறையில் கொண்டாடி வருகின்றார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45).இவர் உசிலை தேனி ரோட்டில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகின்றார்.ரஜியின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு தீவிர ரஜினி ரசிகரான ரமேஷ் தனது தலைவர் பிறந்தநாளன்று தனது கடையில் ரஜினி பிறந்தநாளான இன்று ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால் கால் கிலோ சிக்கன் கறி இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றாh.;பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படும.விளம்பரமில்லாமல் போஸ்டர் அடிக்காமல் ரஜினி ரசிகரின் தள்ளுபடி அறிவிப்பு தங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிப்பதாக கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய உச்சத்தைத் தொட்ட மல்லிகைப் பூவின் விலை வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத விலை உயர்வு.
by mohan
written by mohan
மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை சந்தையில் உச்சபட்சமாக மல்லியில் விலை கிலோ ரூபாய் நான்காயிரம் விற்பனையாகிறது அரளிப்பூ கிலோ 400 ரூபாய் முல்லைப்பூ 1,500 ரூபாய் பிச்சி பூவின் விலை கிலோ 1,200 ரூபாய் சம்பங்கி பூவின் விலை கிலோ 250 ரூபாய் செண்டுமல்லி கிலோ 200 ரூபாய் பட்டர் ரோஸ் கிலோ 300 ரூபாய் தாமரை பூவின் ஒன்று விலை 25 ரூபாய் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது மழை மற்றும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக இந்த ஆண்டு அதிகபட்ச விலை ஆகும் மல்லிகை பூவின் விலை நான்கு ஆயிரத்துக்கு விற்பனை குறிப்பிடதக்கது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, ஆடருத்தான் தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஹமத் சுஹைல், சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹூசைன், ஆலோசகர் மசூத் அஹமத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாம் ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான்,சங்கத்தின் உறுப்பினர்கள் சுகைல், சைபுல்லாஹ், அசிம் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இந்த முகாமின் மூலம் 2000 க்கும் அதிமாக பொதுமக்கள் பயன்பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்க பொருளாளர் சல்மான் கான் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (50).இவர் வேலை விஷயமாக உசிலம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு இரு சக்கர சென்றுள்ளார்.உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி அருகில் செல்லும் போது தனது கிராமத்திற்கு செல்ல வலது பக்கம் திருப்பிய போது இவரது பின்னால் வந்த கார் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த தாமோதரன் (43) அமுதா (38) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.இவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். .தகலறிந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையப் போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெருமாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழை நீரால் மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மூழ்கியது., பேருந்து வராததால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு நடந்து செல்லும் மாணவர்கள்.
by mohan
written by mohan
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தென்பலஞ்சி அருகே உள்ள மாவிலிபட்டி கிராமத்தில்., தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அருகில் உள்ள தென்பழஞ்சி கிராமத்தின் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் தென்பழஞ்சி கிராம கண்மாய் நிரம்பி வருகிறது.இதனால் திருப்பரங்குன்றத்திலிருந்து மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்ல தென்பழஞ்சி கிராம சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சாலையானது தென்பழஞ்சி கண்மாயை ஒட்டியுள்ளதால்., இந்த சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த சாலையில் இருபுறமும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது.மாவிலிபட்டி கிராம மக்கள் இந்த சாலை வழியாகத்தான் மதுரைக்கு செல்ல திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பழம்மார்க்கெட், காய்கறி சந்தை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைய முடியும். மேலும்., இங்குள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.இவர்கள் அரசுப்பேருந்து மூலம் பள்ளி சென்று திரும்பும் நிலையில் இந்த தென் பகுதி வழியாக மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் மூழ்கியுள்ளதால் அரசுப்பேருந்து தற்போது மாவிலிபட்டிக்கு முன்பு உள்ள தென்பழஞ்சி வரை மட்டுமே இயக்கப்படுவதால் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை, மாலை இரு வேளையும் மாவிலிபட்டி கிராமத்திலிருந்து தென்பழஞ்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பள்ளி சென்று திரும்புகின்றனர்.இப்பகுதி மக்கள் வியாபாரிகள் விவசாயிகள் மருத்துமனைக்கு செல்லும் நபர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோர் மாவிலிபட்டி கிராமத்திற்கு பாதுகாப்பான முறையில் கடந்துசெல்ல மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் மாற்றுப்பாதையில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிறப்பு முதல் இறப்பு வரை அரசு மருத்துவமனை லஞ்சம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
by mohan
written by mohan
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினசரி மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் விபத்து மற்றும் பிரசவம் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்கள்கள் நம்பி உள்ளனர் தற்பொழுது சமீபகாலமாக மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் பணம் கொடுத்தால்தான் வேலை இன்று நிலைமை மாறிவிட்டது ஆண் குழந்தை பிறந்தால் 1000 ரூபாய் பெண் குழந்தை பிறந்தால் 500 என கொடுத்தால்தான் குழந்தையாகவே உறவினர்கள் பார்க்க கூடிய சூழ்நிலை உள்ளது என குற்றச்சாட்டு எழுகிறது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மாவுக்கட்டு போட 100 முதல் 300 வரை வசூல் வேட்டை நடத்துகின்றனர் இந்த நிலையில் தற்போது இணையத்தில் விபத்தில் காயமடைந்த நபர் ஒருவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்படும் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது இதில் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு மாவுகட்டு போடுவதற்காக சென்றுள்ளனர் அப்பொழுது அங்கு பணியில் உள்ள ஊழியர் பணம் கொடுத்தால்தான் கட்டு போட முடியும் என கூறியுள்ளார் இதைக்கண்டு அதிர்ந்த அவர் ரகசியமாக வீடியோ பதிவு எடுத்துள்ளார் இது தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது இவர் மாதம் வாங்கும் சம்பளத்தை விட வாங்கும் லஞ்சம் அதிகம் என பொதுமக்களும் நோயாளிகளும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக அளவு பணம் செலவழித்து மருத்துவம் பார்க்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள் குழந்தை பிறந்தால் லஞ்சம் பிரேத பரிசோதனையில் லஞ்சம் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு மருத்துவமனையில் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் என லஞ்சம் தலைவிரித்தாடும் கொடுத்தால்தான் பணி நடைபெறும் என்கின்ற பொழுது மனம் நொந்து வேறுவழியின்றி பணம் தரும் சூழ்நிலை ஏற்படுகிறது இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவை வைத்து லஞ்சத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்க அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் குழு ஒன்று அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா அரசு மருத்துவமனை நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் அனைத்து தரப்பு சமுதாய மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.இந்நிலையில் தமிழக அரசின் வீடு தேடி கல்வி திட்டம் சார்பாக இப்பகுதியில் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் விஜய் துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஒன்றிய கவுன்சிலர் முருகன் திமுக கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் பயிற்றுனர் ஆர்த்தி பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, கிராமப்புற பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.