செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் அனைத்து தரப்பு சமுதாய மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.இந்நிலையில் தமிழக அரசின் வீடு தேடி கல்வி திட்டம் சார்பாக இப்பகுதியில் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் விஜய் துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஒன்றிய கவுன்சிலர் முருகன் திமுக கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் பயிற்றுனர் ஆர்த்தி பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, கிராமப்புற பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14
You must be logged in to post a comment.