22
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் அதிக நபர்களுக்கு பரவிவரும் காரணத்தினால் அஹ்மது தெரு பொதுநல சங்கம் சார்பில் என்.எம்.டி தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, அகமது தெரு, மேலத்தெரு, பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
பின்பு அவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள், அதாவது 14/12/2021 வரை நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். என் நிகழ்ச்சியில் அகமது தெரு பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.