நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டியில் அவரது ரசிகர் ஒருவர் வித்யாசமான முறையில் கொண்டாடி வருகின்றார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45).இவர் உசிலை தேனி ரோட்டில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகின்றார்.ரஜியின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு தீவிர ரஜினி ரசிகரான ரமேஷ் தனது தலைவர் பிறந்தநாளன்று தனது கடையில் ரஜினி பிறந்தநாளான இன்று ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால் கால் கிலோ சிக்கன் கறி இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றாh.;பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படும.விளம்பரமில்லாமல் போஸ்டர் அடிக்காமல் ரஜினி ரசிகரின் தள்ளுபடி அறிவிப்பு தங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிப்பதாக கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா 17
You must be logged in to post a comment.