இளம் பெண் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு; தென்காசி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் இளம் பெண் கொலை வழக்கு குற்றவாளி மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் கடந்த மாதம் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியான சிந்தாமணி அம்பேத்கர் நகர் 1-வது தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கருப்பசாமி(34). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.