வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.22.47கோடிமதிப்பீட்டில் அம்ருத்குடிநீர்மேம்பாட்டுபணிகள் அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார்.
வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.22.47கோடி மதிப்பீட்டில் அம்ருத் குடிநீர் விநியோகமேம்பாட்டுதிட்டபணியினை அமைச்சர் பி.மூh;த்தி தொடக்கி வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மத்தியஅரசின் அடல்மறுசீரமைப்பு மற்றும் நகர்புறமாற்றுஇயக்கம் அம்ருத் திட்டம் சார்பாக ரூ.22.47கோடி மதி;ப்பீட்டில் குடிநீர் விநியோகப்பணிகள் தொடக்கவிழா 6வதுவார்டு லாலாநகரில் முதல்கட்டமாக 2லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலைக்குடிநீர்தொட்டிகட்டிட பூமிபூஜை நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., உதவிஇயக்குநர் சேதுராமன், முன்னாள்பேரூராட்சிதலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலைவகித்தனர். செயல்அலுவலர் ஜெயலெட்சுமி வரவேற்றார். இத்திட்டத்தினை வணிகவாp மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார். இதில் அம்ருத்திட்டகுழுதலைவர் பொறியாளர் பரூக், ராமசாமி, கவுன்சிலர்கள் பூமிநாதன், ஜெயகாந்தன், கார்த்திகாராணிமோகன், சரசுராமு, மற்றும் அலுவலகபணியாளர்கள், கிராமபொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் இளநிலைஉதவியாளர் முத்துபாண்டி நன்றிகூறினார்.செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.