தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது.காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.மேலும், பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட இருக்கிறார்.தமிழக பட்ஜெட் ‘7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார்.நாளை 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 4-வது முறையாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். வேளாண் பட்ஜெட்டிலும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.இதனையடுத்து 21-ந் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளை சட்டசபை கூட்டம் நடக்கிறது. அதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில்பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, 22-ந் தேதி (வியாழக்கிழமை) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடையும்.அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.
Category:
மாநில செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-15
(கி.பி 750-1258)
இந்தியாவின் வட எல்லையில் ஆட்சியிலிருந்த கஜ்னவி பேரரசின்
அதிகாரத்திற்கு உட்பட்ட திரான் ஆக்ஸியானா பகுதியில் துருக்கியர்கள் குடியேறினர்.
செல்ஜுக் என்ற துருக்கிய தலைவரின் குடும்பத்தினர்கள்
குராசான் பகுதியில் குடியேறினர்.
கஜ்னவி சுல்தான் மஹ்மூது மரணமடைந்த பிறகு சுல்தான் மஸ்ஹுத் பதவி ஏற்றார்.
சுல்தான் மஸ்ஹுத்தை தோல்வியடையச்
செய்து செல்ஜுக்கியர்கள்
குராசானை கைப்பற்றினர்.
செல்ஜுக் என்ற துருக்கிய தளபதியின் பேரர்
தஹ்ரல் பைக் மிகச்சிறந்த வீரராக இருந்தார்.
அவரது தலைமையில் குராசான் பகுதியில் செல்ஜுக்கியர்களின் ஆட்சி மலர்ந்தது.
செல்ஜுக்கியர்கள்
“சுன்னத் வல் ஜமாத் ”
கொள்கையை பேணினார்கள்.
முந்தைய புவைஹிக்கள் சியா கொள்கையை பின்பற்றியதால்
அதனை பிடிக்காத பெரும்பான்மையான
மக்கள் செல்ஜுக்கியர்கள்
பின்பற்றிய சுன்னத் வல் ஜமாத் கொள்கையால் இவர்களை வெகுவாக ஆதரித்தனர்.
புவைஹிக்களிடம்
இருந்து பாக்தாத்தை கைப்பற்றினர்.
செல்ஜுக்கியர்கள் தங்கள் தலைநகராக
“மெர்வ்” நகரை கட்டமைத்தனர்.
இதனை அப்பாஸிய பேரரசர் அல்காயீம் வரவேற்றார்.
புவைஹிக்களை ஆதரித்து வந்த பாக்தாத் படைத்தளபதி பசாசூரியை செல்ஜுக் படை துறத்திவிட்டு, பாக்தாத்தை முழுக்கட்டுப்பாட்டில்
கொண்டு வந்தது.
பசாசூரி பாத்திமியாக்கள் என்ற குழுவின் துணையோடு
பாக்தாத்தின் மீது படை எடுத்து செல்ஜுக்கியர்களை ஆதரித்த அப்பாஸிய மன்னர் அல்காயீமை
கைது செய்துவிட்டு
அப்பாஸிய பேரரசின் புதிய மன்னராக அல் முன்தஸிர் என்பவரை பதவி ஏற்க வைத்தனர்.
செல்ஜுக் படைகள் மீண்டும் பாக்தாத்தை கைப்பற்றி அல் காயீமை அப்பாஸிய மன்னராக அறிவித்தனர்.
அந்த அளவிற்கு அப்பாஸிய அரசு வலுவிழந்து இருந்தது.
செல்ஜுக் சிற்றசரின் தலைவர் தஹ்ரல் பைக் அவர்களுக்கு
சுல்தான் பட்டம் வழங்கியதோடு,
அப்பாஸிய பேரரசர் காயீம் அவர்கள்,
மத்திய ஆசிய மாகாணத்தையும் பரிசாக வழங்கினார்.
தஹ்ரல் பைக் மிக எளிய வாழ்வு வாழ்ந்தார்.கல்வி,மதநம்பிக்கைகள்,
பேணுதல்கள்,
அறப்பணிகள் என்று
சாதாரண எளிமையான மனிதரராக இருந்தார்.
இவர் மத்திய ஆசியப்பகுதிகள்,
ஈராக், குவாரிஜிமி பகுதிகளில் வெற்றி பெற்றார்.
பைசாந்தியர்களோடு
போரிட்டு வெற்றி பெற்றனர்.
நிறைய பள்ளி
வாசல்களையும்,
மதரசாக்களையும்,
ஏற்படுத்தினார்கள்.
கல்விக்கூடங்களை
ஏற்படுத்தினார்கள்.
இதுபோன்ற செல்ஜுக் மன்னர்
தஹ்ரல் பைக் அவர்களின் கொள்கைகளும்,
எளிய வாழ்வும்,
நல்ல செயல்களும்
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தஹ்ரல் பைக் அவர்களுக்கு வாரிசுகள் இல்லை.
தஹ்ரல் பைக் மரணமடைந்தார்.
அவரது சகோதரர் மகன் அல்ப் அர்ஸலான் மன்னராக பதவி ஏற்றார்.இஸ்பஹான்
தலைநகராக இருந்தது.சுல்தான்
பட்டம் வழங்கப்பட்டது.
ஆர்மீனியா, ஜோர்ஜியா பகுதிகளை கைப்பற்றினார்.
இவர் சிறந்த கல்வியாளராகவும்,
நல்ல குணம் படைத்தவராகவும் இருந்தார்.
இவரது படைகள் ரோம பகுதிகளில் ஊடுறுவி ரோம மன்னரை கைது செய்தது.
ஆகவே ரோம அரசர் இவர்களிடம் ஈட்டுத்தொகை செலுத்தினார்.
செல்ஜுக்கியர்கள்
ரோமர்களின் பிரதேசத்தில் கால் பதித்தனர்.
இந்திகழ்வு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மக்களை குழப்பி மத வாதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள்!- காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்..
by Askar
written by Askar
மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மக்களை குழப்பி மத வாதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள்!- காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்..
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை தனக்கன்குளம் பகுதியில் புதிதாக சமுதாய மண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆர்வி பட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பணிகள் துவங்கப்பட்டது
இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி மற்றும் கணக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு;
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இது வரவேற்கத்தக்கவை. கே..எஸ் அழகிரி ராசியானவர், பல வெற்றிகளை பெற்று தந்துள்ளவர். அவர் பணி என்றும் காங்கிரஸ் வரலாற்றில் போற்றப்படும். செல்வப் பெருந்தகைக்கு இந்த பொறுப்பு மிகவும் முக்கியமானது அதை சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் அதனால் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என மோடி கூறியது குறித்த கேள்விக்கு;
மோடியை பொறுத்தவரை தான் என்ன செய்தேன் என்று மக்களிடம் சொல்ல வக்கில்லாமல், விவசாயிகளை, இளைஞர்களை, பெண்களை, சிறுகுறு தொழிலாளர்களை ஏமாற்றி வாக்கை பெற்று தற்போது அவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை.
வட இந்திய ஊடகங்களில் ஆதரவுடன் அவர்கள் வெற்றி பெறப்போவதாக பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
காங்கிரஸ் 40 தொகுதியை வெல்லட்டும் என்று மோடி கூறியது குறித்து கேள்விக்கு;
நாங்கள் ஏற்கனவே 52 தொகுதிகளை வென்று விட்டோம் தற்போதைய இவர் சவடால் விடுகிறார்.
பிரச்சனைகளை மறைப்பதற்காக வீண் விவாதங்களை தொடங்குகிறார்.
பாஜக வளர்ச்சி பெற்று உள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் கூறியது குறித்த கேள்விக்கு;
அவர்கள் வட மாநில பத்திரிகைகளை நம்பி இந்த பேச்சை பேசுகிறார்கள். மக்களை சந்திக்காதவர்கள் பேசுகின்ற பேச்சு இது. மக்களைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், மக்களிடம் உரையாடுபவர்களுக்கும் உண்மையான பிரச்சனை தெரியும்.
பிரச்சனைகளை மறைத்து மதத்தினால் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக அவர்களை திருப்பிக் கொண்டிருக்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்ப வேண்டும் மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து யாத்திரை நடந்து கொண்டிருக்கிறார்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்த கேள்விக்கு;
இந்தப் பிரச்சனை மூன்று முக்கிய விஷயங்களில் சிக்கி தவிக்கிறது. தொழில் ரீதியான பாதுகாப்பு, தொழில் ரீதியான அதிகாரிகள் கண்காணிப்பு, அதோடு சேர்த்து மத்திய அரசின் தலையீடு மிகவும் அவசியம். இவற்றில் தொய்வு ஏற்படும் போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாயணமாக10 லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு;
அந்தக் குழுவில் நான் இல்லை டி ஆர் பாலு தலைமையிலான குழுவிடம் பேசி உள்ளார்கள். சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது மீண்டும் திமுகவினர் அழைத்தால் அவர்களுடன் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள்.
விருதுநகர் தொகுதி திமுக கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு;
இந்தியா கூட்டணி சேர்ந்து பயணிக்கிறோம் எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர தனிநபரின் வெறுப்பு வெறுப்புகள் முக்கியமில்லை.
அயோத்தியில் குழந்தை ராமருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு;
மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மக்களை குழப்பி மதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் திருட்டுகிறார்கள் அதில் விழுந்து விடாமல் மக்கள் பிரச்சினைகளை சிந்திக்கும் கட்சிக்கும் மக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் துர் நாற்றத்துடன் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி..
by Askar
written by Askar
இராஜபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் துர் நாற்றத்துடன் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் பாதாள சாக்கடை மூலம் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி வருகின்ற நிலையில் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியார் மருத்துவமனை முன்பு பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் துர்நாற்றத்துடன் சாலையில் செல்வதால் புதிய பேருந்து நிலையம் ,செல்லக்கூடிய பேருந்து, கார், போன்ற கனரக வாகனங்கள் செல்வதால் கழிவு நீர் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக, செல்வப்பெருந்தகை நியமனம்..
by Askar
written by Askar
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக, செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவராக, 2019ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்தது. அவர் ஐந்து ஆண்டுகளாக நீடிப்பதால், தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என, தகவல் வெளியானது. அப்பதவிக்கு, முன்னாள் தலைவர்கள் பலரும் முயற்சித்தனர்.இந்நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை காங்கிரஸ் தலைவராக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளசெல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம், புதியதமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றில் இருந்தவர்; பகுஜன் கட்சி மாநில தலைவராகவும் இருந்தவர். கடந்த 2010ல், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.கடந்த 2006ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலுார் மாவட்டம், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 சட்டசபை தேர்தலில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசியலுக்காக ஆட்சி நடத்தும் பாஜக மக்களுக்காக ஆட்சி நடத்தும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..
by Askar
written by Askar
அரசியலுக்காக ஆட்சி நடத்தும் பாஜக மக்களுக்காக ஆட்சி நடத்தும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..
மதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என குரல் எழுப்பும் வகையில் மக்களை சந்திக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார் கழக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி., மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்;
வந்திருக்கிற அண்ணன் ராஜா அவர்கள் நீண்ட காலம் டெல்லியில் பல பொறுப்புகளில் பணியாற்றி இங்கே தெளிவாக இந்த தேர்தலினுடைய முக்கியத்துவத்தையும் பாசிசத்துடைய பெரிய ஒரு கேட்டையும் உரையாற்ற இருக்கிறார். எனவே மாநில அளவில் உறுப்பினராக அமைச்சராக இருக்கிற நான் மிகவும் விளக்கி கூற தேவையில்லை சுமார் பத்து நாட்களுக்கு முன் டெல்லியில் கர்நாடக முதல்வர் முதல் நாளும் அடுத்த நாள் கேரள முதல்வர் டெல்லி மாநில முதல்வர் பஞ்சாப் மாநில முதல்வர் ஒன்றிய அரசு உடைய ஒரு தலைபட்சமான நிதி ஒதுக்கீட்டிலும் குறிப்பாக தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் கொடூரமான செயல் செய்வதையும் போராடுவதற்காக கூட்டம் கூட்டியிருந்தார்கள். உரிமைகளுக்கு போராடுவதற்காக அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்னை கலந்து கொள்ளுமாறு வெளிநாட்டிலிருந்து கட்டளையிட்டதனால் நானும் போய் கலந்து கொண்டு சில கருத்துக்களை மற்றும் டெல்லியில் கூறிய அதே கருத்துக்களை மதுரையில் கூற விரும்புகிறேன். முதலில் எல்லா வகையிலும் மாநிலத்துடைய நிதி ஒதுக்கீடு குறைக்கிறார்கள் நிதி கடன் வாங்கக்கூடிய திறனையும் சட்டத்துக்கு விரோதமாக சட்டமைப்புக்கு விரோதமாக குறைக்கிறார்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் தடையாக இருந்து எப்படியாவது நம்முடைய வளர்ச்சியை குறைக்கணும் நம்மளும் பின்தங்கியே இருக்கணும் முன்னேறக்கூடாது என்ற அடிப்படையில் ஏனென்றால் பாசிசத்தை மத வெறியை இங்கே உள்ள நம்ம விடுறது கிடையவே கிடையாது போயிட்டு வான்னு சொல்றதுனால் எப்படியாவது நம்மை தண்டிக்கணும் என்பதற்காகவே இந்த செயல் செய்கிறார்கள் எத்தனையோ உதாரணங்கள் கூறினேன் அது பலருக்கும் தெரியும் ஆனால் நான் கூறின முக்கிய கருத்து எந்த அளவுக்கு நம்மிடம் இருந்து பணம் எடுத்தாலும் உரிமை பறித்தாலும் நமக்கு தவறான வகையில் கட்டுப்பாடு உருவாக்கினாலும் என்றைக்குமே அவங்களால் வெல்லவே முடியாது என்றைக்குமே நம்மளை வீழ்த்தவே முடியாது இதற்கு ரெண்டே ரெண்டு காரணம் சொன்னேன் அவங்க அரசியலுக்காக மட்டும் தான் ஆட்சி நடத்துகிறார்கள் அவங்க வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நடத்தறது இல்லை.
ஏனென்றால் நிஜமாவே வளர்ச்சிக்கு இந்த மக்களுக்கு நேரத்தில் நாம் முதல்ல எல்லாத்துக்கும் கல்வியை கொடுக்கணும் அதற்கு ஒரு படிப்பு கொடுக்கறது இல்ல. வளர்ந்ததாக சொல்லப்படும் குஜராத் மாநிலத்திலேயே 50 சதவீதம் பெண்கள் தான் பள்ளிக்கல்வியை முடிக்கிறார் என்றால் எப்படி வளர்க்க முடியும் அதே போல் நல்ல ஒரு பொருளாதார சூழ்நிலை உருவாக அரசியலுக்கு விரோதம் என்றதனால் அதையும் ஒரு போதும் இருக்க விட மாட்டார்கள் மூன்றாவது அவங்க எந்தெந்த நிறுவனம் இருக்கோ அது நீதிமன்றமாக இருக்கட்டும் எந்த எண்ணமோ ஜனநாயகம் நல்லா செயல்பட வேண்டும் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஒரு தலைப்பட்சமாக போகக்கூடாது பாசிசம் உருவாக்கக்கூடாது என்று சட்டமைப்பில் உருவாக்கப்பட்டு எந்தெந்த நிறுவனம் இருக்கோ அதையெல்லாம் கைப்பற்றி முடக்கி அதனுடைய செயலை மோசமாக்கினார்கள் எனவே அவங்க கையில் எவ்வளவு அதிகாரம் வந்தாலும் அவங்க கையில் எவ்ளோ நிதி இருந்தாலும் என்றைக்குமே தோல்வி அடையப் போகிறார்கள் மக்கள் முன்னேற்றதிலும் அரசாங்கத்திலும் அதே போல் எந்த அளவுக்கு அவங்க நம்ம மேல் நெருக்கடியை கொடுத்தார்களோ நம்மளோட பண்பு நம்மளுடைய கொள்கை நம்முடைய செயல்திறன் நம்மளுடைய இரக்கம் நம்மளுடைய மனிதநேயம் இதையெல்லாம் நம்ம சிறப்பாக பின்பற்றி நம்முடைய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் சிறப்பித்தால் அவர்கள் எவ்வளவுதான் நெருக்கடி கொடுத்தாலும் என்றும் நம்முடைய வெற்றியை நம்முடைய முன்னேற்றத்தை அவங்களால தடை செய்யவே முடியாது என்றது உறுதி என்று நான் டெல்லியில் கூறினேன் அதே கருத்தை டெல்லியிலும் சென்னையிலும் மதுரையில் பேசுகிறவர்தான் நான் பிரதமர் மாதிரி எந்த நாற்காலியில் உட்கார்ந்து வெவ்வேறு பேச்சு பேசுற ஆள் கிடையாது நான் ஒரே கருத்து தான் பேசுவேன்அது எதிர்கட்சியா இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஓசூர் அருகே ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
by Askar
written by Askar
ஓசூர் அருகே ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிராம பகுதியில் ஒன்றை காட்டு யானை சுற்றி வருகிறது. இதனை அறியாமல் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா கூலி வேலைக்காக தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு காட்டு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் காட்டுயானை அவரை தாக்கியது. இதில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறிது நேரத்தில் தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி அஸ்வத்தம்மா என்பவரையும் அதே காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் அஸ்வத்தம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னியாலம், தாவரக்கரை, தாசரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய மொந்தையில் பழைய கள்! – சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள் குறித்து எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி 09ம் தேதி சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து, கடந்த காலங்களில் திமுக அரசு செய்த, செய்து வந்த சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்தும், சில வாக்குறுதிகளையும் அப்போது அவர் அறிவிப்பாக வெளியிட்டார். சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தவரை அழைத்து பேசியது போன்று முஸ்லிம்களையும் அழைத்து பேச வேண்டும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபி கட்சி அப்போது வலியுறுத்தியது.
இந்த கூட்டம் எதிர்வரும் தேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ச்சியாக முன் வைக்கும் கோரிக்கைகளை உண்மையிலேயே நிறைவேற்றும் கூட்டமாக, சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டமாக அது அமைய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில்தான் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளை முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, திமுக அரசு கடந்த காலங்களில் செய்த திட்டங்கள் குறித்து பேசியதோடு, சிலவற்றை வாக்குறுதிகளாகவும் அறிவித்துள்ளார்.
ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆன போதும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகள் மீது இதுநாள் வரையில் எவ்வித அக்கரையும் செலுத்தாத, முஸ்லிம் சமூகத்திற்கான எந்தவித பொருளாதாரத் திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, இந்த கூட்டத்தின் மூலமாக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த கால திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே கிறிஸ்தவ சமூகத்தினரை அழைத்து பேசிய போது அறிவித்த திட்டங்களையும், சில சிறிய கண் துடைப்பு திட்டங்களையும் மட்டுமே அறிவிப்பு செய்துள்ளார்.
‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்கிற ரீதியில், ஏற்கனவே உள்ள மற்றும் சரிவர செயல்படுத்தப்படாத பழைய திட்டங்களை, கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் திரும்ப எடுத்து வைத்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பில் பெரும்பாலானவை வாக்குறுதி அறிவிப்புகளாக உள்ளன. ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வக்பு வாரியம் மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள், வாழ்வாதாரம், பிரதிநிதித்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் இன்னும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. ஐந்து சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை, அரசின் உயர் பதவிகளில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவ கோரிக்கை, நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் முழுமையான விடுதலை கோரிக்கை, முஸ்லிம்களுக்கான சமூக நலத்திட்டங்கள், பொருளாதார திட்டங்களை மேம்படுத்த சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டியை அமைக்கும் கோரிக்கை என்பன உள்ளிட்டவை பாராமுகமாகவே உள்ளன.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு நடத்தப்பட்ட இந்த கூட்டம் தாமதமான ஒன்றாக இருந்தாலும் கூட, தமிழக முதல்வர் அவர்கள் இந்த கூட்டத்தில் வாக்குறுதிகளாக அறிவித்த சில திட்டங்களையாவது, தேர்தல் செயல்பாடுகளாக அல்லாமல், மக்கள் நல செயல்பாடாக கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உதகை அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா காட்சிமுனை ஆகிய இடங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் பாா்வையிட்டாா்..
by Askar
written by Askar
உதகை அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா காட்சிமுனை ஆகிய இடங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் பாா்வையிட்டாா்..
நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, உதகை அருகே உள்ள தோடா் பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்திற்குச்சென்று, தோடா் பழங்குடியினரின் வாழ்வியல் முறை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இறை வழிபாடு ஆகியவற்றைப் பாா்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினா்.
இதைத் தொடா்ந்து தமிழகத்தின் உயா்ந்த மலைச் சிகரமான தொட்டபெட்டா காட்சிமுனைக்குச் சென்று இயற்கை காட்சிகளைக் குடும்பத்துடன் சனிக்கிழமை கண்டுரசித்தாா்.
இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அரசு அருங்காட்சியகத்தையும் குடும்பத்தினருடன் பாா்வையிட்டாா். ஆளுநரின் பயணத்தையொட்டி உதகை நகரப் பகுதிகள், சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-14
(கி.பி 750-1258)
அப்பாஸிய பேரரசர் அவர்கள்,
புவைஹி மன்னர்
சில பகுதிகளை வெற்றி கொண்டதை பாராட்டி,தனது அழகிய மகளையும்
புவைஹி சிற்றசின் மன்னர் பக்தியாருக்கு மணமுடித்து கொடுத்தார்.
சிற்றரசருக்கு அப்பாஸிய பேரரசர் தனது மகளை மணமுடித்து கொடுப்பதாக அறிவித்து, மணமுடித்து கொடுத்தது, மற்ற சிற்றரசர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேலும் “அல்சுல்தான்”
“தாஜுல் மில்லா”
“ஷாகின்ஷா”
“ஹாக்கிம்ஷா”
போன்ற பட்டங்களை கொடுத்து ஆச்சரியமளித்தார்.
மேலும் குத்பா உரையின் இறுதியில்
பக்தியாரின் பெயரும் சேர்ந்து வாசிக்கப்பட்டது.
பக்தியார் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.
தலைநகர் சீராஜை பாக்தாத்தை போல
அழகுபடுத்தினார்.
பல புதிய கட்டிடங்களை கட்டினார்.
பிரமாண்டமான மருத்துவமனையை
கட்டினார்.
அது மருத்துவ
மனையாகவும்,
மருத்துவ பல்கலைக்
கழகமாகவும்
திகழ்ந்தது.
அதில் 24 மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை மருத்துவரும்,
பல மருத்துவர்களும்
பணியில் இருந்தனர்.
பாக்தாத் நகரை மேலும் அழகூட்டினார்.
இவரது அரசவையில்
பல அறிஞர்கள் இருந்தனர்.கலைகள்
வளர்ச்சி பெற்றன.
இவரது மரணித்திற்கு பிறகு இவரது மகன்
சம்சுத்தௌலா பதவியேற்றார்.
இவர் மூன்று ஆண்டுகளில் மரணமடைந்தார்.
இவரின் சகோதரர் சரபுத்தௌலா ஆட்சியை கைப்பற்றினார்.
இவருக்கும் “அமீருல் உம்ரா”பட்டம் வழங்கப்பட்டது.
இவர் மிகச்சிறந்த கல்விமானாகவும்,
அறிஞராகவும், திகழ்ந்தார்.இவரின் ஆட்சியில்
வானவியல் ஆராய்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மிகப்பெரிய பல பயனுள்ள கட்டுமானங்களை கட்டினார்.
இவருக்குப்பிறகு சில தௌலாக்கள் ஆட்சியிலிருந்தாலும் மிக பலவீனமாகவே இருந்தனர்.
புவைஹி சிற்றரசின் இறுதி மன்னராக
அல் மலிக்குல்ராஹிம் என்பவர் கி.பி 950 முதல் 954 வரை ஆட்சி செய்தார்.
புவைஹிக்கள் 110 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்.
இவர்களது ஆட்சியில்
நிர்வாகம் சிறப்பாகவே இருந்தது.
இவர்களின் ராணுவம்,
வலிமையானதாக
இருந்தது.புவைஹி
மன்னர்கள் மிகுந்த ஆட்சித்திறமை
உடையவர்களாக
இருந்தனர்.
இவர்களின் ஆட்சியில் சமாதானம் நிலவியது.
ஆட்சி அமைதியாக நடை பெற்றது.
இவர்களின் ஆட்சியில் கவிஞர்கள்
அறிஞர்கள் அதிகம் மதிக்கப்பட்டனர்.
கட்டிடக்கலை சிறந்து விளங்கியது.
ஏராளமான நூலகங்கள் உருவாக்கப்பட்டது.
வணிகமும் செழித்து
இருந்தது.
இந்தியா, மத்திய தரைக்கடல்,
செங்கடல் ஆகியவைகளை
உள்ளடக்கிய வணிகப் பாதைகளை
அமைத்தனர்.
ஆகவே வெளிநாட்டு வணிகம் சிறப்புடன்
நடைபெற்றது.
இவர்களின் இறுதிக்காலத்தில்
செல்ஜுக்கியர்கள்
ஆட்சியை கைப்பற்றினர்.
அவர்களின் கொள்கை கோட்பாடுகள் மக்களை ஈர்த்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் முத்துக்குமார் ( வயது37/24) என்பவர் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்துவிட்டார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் தன் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் வல்லந்தை கிராமத்தில் பரமக்குடி சார ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் மகாலில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவாக்க கல்வி இயக்ககம் இணைந்து மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்கக் கல்வி இயக்குனர் முனைவர் முருகன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக வேளாண்மை தொழில்நுட்ப பயன்பட ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஷேக் என் மீரான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்த விவசாயி ராமர் என்பவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி இணை பேராசிரியர் தா பிரபு ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் ராம்குமார் தஞ்சாவூர் வேளாண்மை கல்வி இணை பேராசிரியர் வ ராமமூர்த்தி ராமநாதபுரம் விற்பனை குழு செயலாளர் ராஜா கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் தேதி மீன்பிடிக்க சென்று நான்காம் தேதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.மீனவர்களின் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், இரண்டு மீன்பிடி விசைப்படைகு ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ராபர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனையும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2019 ஆண்டு சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் மெல்வின் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்பளித்தார். இலங்கை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ந வேண்டும் எனவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட், பெக்கர், மெல்வின்ஆகிய மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று மீனவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு கண்ணீருடன் தங்களது சிறையில் உள்ள தங்களது உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். பின்னர் கூட்டத்தின் முடிவில் வரும் 23,24 ஆகிய தேதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்த கொள்ளாமல் தமிழக மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாகவும், விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், நாளை மீன்பிடி விசைப்படகுகளில் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து வரும் செவ்வாய்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூன்று நாட்கள் நடந்து சென்று விசைப்படகு மீனவர்கள் அனைவரும் தங்களது மடகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக மீனவர் நடத்தி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். மேலும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது வரவேற்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரனாக அவருடன் பேசியதுண்டு பழகியதுண்டு காணொளி காட்சி மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு களித்த துண்டு ஆனால் நான் தந்தை பெரியார்.பேரறிஞர் அண்ணா அவர்களுடன். பேசியதோ பழகியதோ கிடையாது ஆனால் இங்கு வந்திருக்கும் கழகம் முன்னோடிகளோ பெரியாருடனும் பேரறிஞர் அண்ணாவுடனும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்றவர்கள் வந்திருக்கிறீர்கள் அதனால் நான் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னை பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தங்களுடைய குடும்ப உறவுகளின் பல்வேறு விழாக்களுக்கும் அழைக்கின்றனர் அவர்களிடம் எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றை ஒன்று மட்டும் தான் என்னை எந்த விழாவிற்கு வேண்டுமென்றால் அழையுங்கள் நான் கட்டாயம் வருவேன் ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய கழகம் முன்னோடிகளை சந்தித்து அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை தற்சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு பொற்கிழிகளை வழங்கி வருகிறேன் இது மட்டுமில்லாமல் திமுக சார்பில் பல்வேறு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார் இந்நிகழ்ச்சியில் ஆயிரத்து இரண்டு நபர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன மேலும் இதில் மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் அயலக அணி மாவட்ட தலைவர் முஹம்மது அனிபா அயலக அணி மாவட்டத் துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாய் முகமூடி அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..
written by Abubakker Sithik
நாய் முகமூடி அணிந்து கொண்டு நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..
தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய் முகமூடி அணிந்தும், நாய்போன்று குரைத்து கொண்டும் நகர்மன்ற தலைவரிடம் கவுன்சிலர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான கொடிமரம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில், தென்காசி 20 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் M.A.ரஃபீக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்று நகர் மன்ற தலைவர் ஆர். சாதிரிடம் கோரிக்கை மனு அளித்தார். சிரித்த நிலையில், நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மனுவை பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..
by Askar
written by Askar
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..
இது சம்பந்தமாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் (டாஸ்) மாநில செயலாளர் ஜெபசிங் விளக்கம் அளிக்கிறார்!
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் பணிச் சான்று. ஆதார் அட்டை நகல். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல். வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000 வழங்கப்படும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரையும், இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் .
மேலும் திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக (மாதந்தோறும்) ரூ.1,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும் என டாஸ் மாநில செயலாளர் சகோ.ஜெபசிங் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்கள் தேவைப்படின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்.☎️ 8144069997
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கரம்; பட்டாசு வெடி விபத்து-10 பேர் பேர் உயிரிழப்பு..
by Askar
written by Askar
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கரம்; பட்டாசு வெடி விபத்து-10 பேர் பேர் உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
written by Abubakker Sithik
இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி சுரண்டையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் சுரண்டையின் கீழ் பகுதியில் இருந்து ஊத்துமலை வரை உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி வருகிற நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் காட்டு பன்றிகள் விவசாய விளை பொருட்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டனர்.
மேலும் இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்திற்க்கு தமிழக அரசு நிதி ஒதுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கையில் விவசாயிகள் சங்கம் ஈடுபடும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் மருதசாமி பாண்டியன், ஊராட்சி தலைவர் ஸ்நாபக அந்தோணி என்ற பதிவர், குத்தாலிங்கம், அந்தோணி சவரிமுத்து, மைக்கேல் ராஜ், செல்வராஜ், அருணாசலம், திருமலை ஆண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கூறுகையில், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இரட்டை குளம் கால்வாய் திட்டம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நிதி நெருக்கடியிலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 80 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய பத்து முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இரட்டை குளம் கால்வாய் திட்டம் என கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தனியாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கினேன். அதைத் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 64 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. வருகிற நிதியாண்டில் தமிழக முதல்வர் கண்டிப்பாக இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதில்மேல் பூனை போல, தேமுதிகவின் தற்போதைய நிலை!- குழப்பத்தில் பிரேமலதா விஜயகாந்த்..
by Askar
written by Askar
பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றும் இரு தரப்பிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக கூறியுள்ளதால் எந்த கூட்டணியில் சேர்வது என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது.
பாஜக கூட்டணியில் இணைந்தால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ராஜ்யசபா தொகுதி எம்பி மூலம் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேமலதாவிற்கு பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் அதிகம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் கட்சியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் காயம்பட்ட கண்ணாடிவிரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்கள்..
by Askar
written by Askar
மதுரையில் காயம்பட்ட கண்ணாடிவிரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்கள்..
மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட திருநகர் அருகில் ஜோசப் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வேலியில் சிக்கி வயிற்று பகுதியில் காயமடைந்த பாம்பை வீட்டின் உரிமையாளர் வாசுதேவன் என்பவர் மீட்டு
பாம்புபிடி வீரர் ஆர்வலர் சகா என்பவரின் உதவியுடன் வேலியில் சிக்கிய 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தை மதுரை பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து (12 தையல் போட்டு) பின்னர் பத்திரமாக அடர்வணப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது தொடர்ந்து காயமுற்ற பாம்பை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.