திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர்ரோடு சம்ந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிபல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சிக்கு மக்களிடத்தில் பிச்சை எடுத்து அந்த பணத்தில் ரோடு போட சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி நூதனப் போராட்டம் நடத்தினர்.
வத்தலகுண்டுவில் முக்கிய பகுதியான காந்தி நகர் ரோடு பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. அந்த ரோட்டில் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கியமான கட்டிடங்கள் அந்த ரோட்டில் தான் அமைந்துள்ளது. ஆகையினால் நோயாளிகள் பள்ளிக்குழந்தைகள் வாகன ஓட்டிகள் போன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருப்பாளர் உலக நம்பி அவர்கள் கூறுகையில்,”இந்த ரோட்டை சீரமைத்து தருமாறு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பிரயோஜனமும் இல்லை, ஆகையினால் இந்த பிச்சை எடுக்கும் போராட்டத்தை கையில் எடுத்தோம் இதிலும் தீர்வு கிடைக்க வில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.