Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆசிரியர் தினத்தில் நிச்சயமாக நினைவு கூற வேண்டியவர்கள்..

ஆசிரியர் தினத்தில் நிச்சயமாக நினைவு கூற வேண்டியவர்கள்..

by ஆசிரியர்

ஆசிரியர் தினமாகக் கொண்டாடத் தகுதியுள்ளவர்கள் ஜோதிராவ் பூலே மற்றும்  சாவித்திரிபாய் பூலே.

சமூக விடுதலைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை உயர கல்வி ஒன்றே ஆயுதம் என்று பள்ளி திறந்து கல்வி வழங்கிய ஆசான் ஜோதிபாய் பூலே.

சாவித்திரிபாய் பூலேவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, சமைப்பது இது தான் பெற்றோரால் கற்றுக் கொடுக்கப் பட்டது.

என்ன ஆச்சரியம்! ஜோதிராவ் பூலே தன் மனைவி சாவித்திரிபாய் பூலேயைப் படிக்க வைத்தார். இந்தியாவிலேயே பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடத்தை புனேவில் திறந்து, வகுப்புகளும் எடுத்த முதல் ஆசிரியர் சமூக விடுதலைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாடுபட்ட அவரை ஆசிரியர்கள் தினமான இந்நாளில் நினைவு கூறுவது சிறப்பு.

தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!