இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன் குணசேகரன், 22. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவர் சக்கரக்கோட்டை ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றினா. ரயிலில் அடிபட்டு இறந்தாரா? யாரேனும் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே N.பஞ்சம்பட்டி பிரிவில் திண்டுக்கல்_மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த அருளானந்தம் (வயது 38) சற்று முன் (17/02/2019 – இரவு 10.00 மணியளவில்) சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்க்காக திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இவ்விபத்து குறித்து அம்பாத்துறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சியில் அம முக., கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலர் ஜி.எம்.ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன் கொடியேற்றினார். மண்டபம் பேரூர் செயலர் எம்.களஞ்சிய ராஜா, வேதாளை ஊராட்சி செயலர் இஸ்மத் நூன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் சிகாமணி, ஒன்றிய இளைஞரணி செயலர் அரவிந்தன், ஒன்றிய துணை செயலர் எம்.ஏ.பக்கர், மரைக்காயர் (எ) காசிம், கனி ராஜா, லியாக்கத் அலி, வஹாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் அதிகபட்ச விலையை காட்டிலும் ஒவ்வொரு பொருளிலும் ரூபாய் 5 முதல் 8 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்படுகிறது. அஅதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதைப் பற்றி கேட்டால், அமாவடியான பதிலும், அப்படித்தான் செய்ய முடியும் உங்களால் முடிந்ததை பார் என மிரட்டல் தொணியில் பதில் அளிக்கிறார்கள்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேடசந்தூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டிற்குள் சொகுசு கார் புகுந்து விபத்து…வீடியோ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று (17.02.19) கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கூலித் தொழிலாளி வீட்டில் சொகுசு கார் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.
அதிஷ்டவசமாக சுற்றியிருந்த பத்துக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் தப்பினர். விபத்து நடந்த பகுதியை நிருபர்கள் படம் பிடிக்க சென்றபோது அரசியல் கட்சியினர் அதன் உரிமையாளரை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மதிச்சியம் அருள்மிகு “ஸ்ரீ வீரகாளியம்மன் 24.ம் ஆண்டு “மஹா கும்பாபிஷேகம்” முன்னிட்டு அன்னதானம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மதிச்சியம் அருள்மிகு “ஸ்ரீ வீரகாளியம்மன் 24.ம் ஆண்டு “மஹா கும்பாபிஷேகம்” நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். மதியம் பக்தர்களுக்கு “அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை செயலாளர் “சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
இவ்விழா ஏற்பாடுகளை தலைவர் பாக்கியம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சௌந்தரபாண்டியன், உப தலைவர்கள் சுரேஷ்குமார், கண்ணன், துணை செயலாளர்கள் ரகுராமன், நவீன்குமார், துணை பொருளாளர்கள் அருண்குமார், செந்தில்குமார் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த சிஆர்பிஎப்., (மத்திய ஆயத்த பாதுகாப்பு படை) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்குறுதியை நிறைவேற்றிய கனிமொழி….”கனிமொழிக்கு எங்க நன்றியை சொல்லிடுங்க” மக்கள் நெகிழ்சி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். அந்த வகையில் ஜனவரி 27ஆம் தேதி தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஊராட்சி சபையில் கலந்துகொண்டார் கனிமொழி. அப்போது அவரிடம் பேசிய பெண்கள் பலர், சுகாதார வசதி சரியில்லை என்று குறைகளைப் பட்டியலிட்டனர்.
அப்போது கனிமொழி மக்களிடம், வெகு விரைவில் மருத்துவ முகாமை இந்த பகுதியில் நடத்த ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். அதன்படியே பிப்ரவரி 17ஆம் தேதி மாப்பிள்ளையூரணி கிராமத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பல்லோ, அரவிந்த கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த
மருத்துவ நிபுணர்களும், செவியர்களும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
காது, மூக்குத் தொண்டை, பொது மருத்துவத்தில் தொடங்கி வயிற்றுப் பிரச்சினை, இருதய நோய், நுரையீரல் கோளாறுகள், குழந்தைகள் மருத்துவம், பெண்களுக்கான பிரத்யேக பிரச்னைகள், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என அனைத்து வகை பிரச்னைகளுக்கும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் உரிய மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் கண் புரை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து உரிய மூக்கண்ணாடிகளும் இலவசமாக வழங்க உள்ளனர்.
387 பேர்களை பரிசோதித்தில் 135 பேருக்கு மூக்குக கண்ணாடி தேவைப்பட்டது. அவர்களுக்கு ஒரு வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் . 16 பேருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சாதாரண சோதனை முதல் ஈசிஜி, ஸ்கேன் வரையிலான உயர் தர மருத்துவம் வரையில் இந்த மருத்துவ முகாமில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.
இன்று மருத்துவ முகாம் நடக்கும் நிலையில் கனிமொழி மாப்பிள்ளையூரணிக்கு வரவில்லை. ஆனாலும் மக்கள், ‘கனிமொழிக்கு எங்க நன்றிய சொல்லிடுங்க’ என்று தூத்துக்குடி திமுக மாசெ அனிதா ராதாகிருஷ்ணனிடம் நன்றி தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடியில் இருந்து விசேஷ காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.. முறையான ஏறபாடு இல்லாததால் மக்கள் அவதி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் குறிப்பாக மதுரை, திருச்சி மற்றும் பழனி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் பேருந்துகள் முறைப்படி ஏற்பாடு செய்யாமல் முகூர்த்த நாள் மற்றும் திருவிழா காலங்களில் பொது மக்கள் அதிகம் வரும் நாட்களில் கூடுதல் ஏற்பாடு இல்லாததும் முக்கிய காரணம்.
உதாரணமாக இன்று விசேஷ காலத்தினால் பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருந்தது. மேலும் போக்குவரத்து அதிகாரிகள் ஒருவர் கூட இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மதுரை திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் பகுதிகளில் இன்று (17.2.2019) மாவட்ட ஆட்சியர் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு- 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேர்வு மையமான டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு – 3 கிரேடு- 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் 16.02.2019 மற்றும் 17.02.2019 என இரண்டு தினங்களில் காலை, பிற்பகல் என தலா இரண்டு அமர்வுகளாக முறையே நடத்தப்படுகின்றன. கிரேடு- 3 தேர்வுக்கு 6 தேர்வு மையங்களும் கிரேடு – 4 தேர்வுக்கு 7 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு நடவடிக்கைகளை கண்காணித்திட ஏதுவாக 7 ஆய்வு அலுவலர்களும், 7 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களை சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் 2 நகர்வு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக கிரேடு – 3 தேர்வுக்கு 1,599 நபர்களுக்கும் கிரேடு-4 தேர்வுக்கு 1,851 நபர்களுக்கும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்தவகையில் நேற்று (16.02.2019) நடைபெற்ற தேர்வின் காலை அமர்வில் 843 நபர்களும், பிற்பகல் அமர்வில் 777 நபர்களும் தேர்வு எழுதினர்.
இன்றைய தினம் (17.02.2019) நடைபெறும் தேர்வின் காலை அமர்வில் 924 நபர்கள் தேர்வு எழுதினர். மாலை நடந்த தேர்வில் 952 பேர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தேர்வறைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்கள் தேர்வறைகளுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை மீண்டும் அந்தந்த தேர்வு மையங்களில் உள்ளவாறு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் பொன். கார்த்திகேயன் உடனிருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இந்திய தேசம் முழுவதும் கொண்டாட படுகின்றது அதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் இன்று 17/02/2019 லெப்பை டீ கடை அருகில் மற்றும் ஜூம்மா பள்ளி முன்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் கொடியெற்றும் நிகழ்ச்சி நகர் தலைவர் முபிஸ் முபஸல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லெப்பை டீ கடை அருகே சகோ.பைசல் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்றி வைத்தார். ஜூம்மா பள்ளி முன்புறம் சகோ ஆஷிக் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்றி வைத்தார். நத்தம் கிளை சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஃபிஸ் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் தொகுப்புரையை ஆசிக் வழங்கினார். வரவேற்புரையை ஹுசைன் இப்ராஹிம் நிகழ்த்தினார்.. ஹமீது பைசல் மற்றும் அஹமது நதீர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக 50 துணிச்சலான இராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்தி நம்மை விட்டு பிரிந்த அந்த ஆன்மாக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் SDPI_கட்சியின் தொகுதி செயலாளர் நூருல் ஜமான் கீழக்கரை நகர் தலைவர்க கீழை அஸ்ரப், நகர் செயலாளர் காதர், பொருளாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் SDTU கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் இருந்து பிற நகர்களுக்கு 9 புதிய பேருந்துகள் இயக்கம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரத்தில் இருந்து பிற நகர்களுக்கு 9 புதிய பேருந்துகள் இயக்கம். இப்புதிய தடங்களை தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (17.02.2019) தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் விழாவிற்கு தலைமை வகித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14.02.2019 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்கள்ப யன்பாட்டிற்காக 275 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். இவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 11 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 பேருந்துகள் ஆகும். இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள 9 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைத்தார்.
புதிதாக துவக்கி வைத்தவற்றில் ராமநாதபுரம் புறநகர் கிளை மூலம் ராமநாதபுரம் – மதுரை வழித்தடத்தில் 1, ஏர்வாடி தர்ஹா – குமுளி வழித்தடத்தில் 1, சாயல்குடி-சிதம்பரம் வழித்தடத்தில் 1, ராமநாதபுரம் புறநகர் கிளை மூலம் ராமமேஸ்வரம்-திருச்சி வழித்தடத்தில் 1, பரமக்குடி கிளை மூலம் ராமேஸ்வரம்-மதுரை வழித்தடத்தில் 1, முதுகுளத்தூர் கிளை மூலம் முதுகுளத்தூர் – சிதம்பரம் வழித்தடத்தில் 1, கமுதி கிளை மூலம் கமுதி-சேலம் வழித்தடத்தில் 1 வீதம் 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 07.7.2018 அன்று 35 புதிய பேருந்துகளும், 14.10.2018 அன்று 12 புதிய பேருந்துகளும், 12.01.2019 அன்று 11 புதிய பேருந்துகளும், இன்றைய தினம் 9 புதிய பேருந்துகள் என 4 கட்டங்களாக இதுவரை 67 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கோமதி செல்வக்குமார், துணை மேலாளர் ஆர்.சிவலிங்கம், கோட்ட மேலாளர் வி.சரவணன் (இராமநாதபுரம்) போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், பி.தமிழ்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரஜினியின் அறிக்கை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. தொல்.திருமாவளவன் பேட்டி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பாராளுமன்ற தேர்தல் குறித்து ரஜினியின் அறிவிபபு அவரது தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தற்போது அறிக்கை விடுத்துள்ளார் எனவும் இந்த அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கதையும் ஏற்படுத்தாது என உசிலம்பட்டியில் திருமாவளவன் பேட்டி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன் – அகிலா இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணமக்களுக்கு தாலி எடுத்துகொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பாராளுமன்ற தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள அறிக்கை ஏற்கனவே அறிவித்த நிலைப்பாடுதான் அவரது தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தற்போது அறிக்கை விடுத்துள்ளார் எனவும் இந்த அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கதையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மேலும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் அதில் மாற்றம் இல்லை திமுகவில் மற்ற கட்சிகள் கூட்டணி வைப்பது குறித்து திமுக தலைமைதான் முடிவு செய்யும் அதில் எனது கருத்து ஏதும் இல்லை எனவும் காஷ்மீர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாது மத்திய அரசின் அணுகுமுறை தோல்வி அடைந்துள்ளது மேலும் கடுமையான பாதுகாப்பு நிறைந்த பகுதயில் 350 கிலோ வெடிமருந்தை வைத்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது புலனாய்வுத்துறை எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது எனவும் மத்திய அரசின் ஆட்சி நிர்வாகம் எந்த அளவிற்கு பலவீணமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த தாக்குதல் குறித்து எதிர்வினையாக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் துணை நிற்ப்போம் என அனைத்து கட்சியும் அறிவித்துள்ளது போல நாங்களும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என பேட்டியளித்தார்.
பேட்டி: திருமாவளவன் ( விசிக தலைவர் )
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளது. இதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் பிறப்பித்து உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும், தூத்துக்குடியில் பிற பகுதிகளுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்துக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூடு நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்துக்கும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நெல்லை மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் கோவில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி நெல்லை மாவட்டம் பனவடலிசந்திரம் காவல் நிலையத்துக்கும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தூத்துக்குடி மத்திய பாகத்துக்கும், திருச்செந்தூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆத்தூர் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மது ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி பசுவந்தனை இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்துக்கும், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகதேவி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கும், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கள்மங்களம் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே ???சந்தேகத்தை கிளப்பும் வெல்ஃபேர் கட்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே கடத்தப்பட்டாரா???? இல்லை கார்ப்பரேட்டுகளால் கொல்லப்பட்டாரா???? சந்தேகத்தை கிளப்பும் வெல்ஃபேர் கட்சி.. சூழலியல் போராளி முகிலன் எங்கே? .:இரண்டு நாட்களாக தொடர்பு துண்டிப்பு… காணாமல் போனாரா????? கடத்தப்பட்டாரா?????இல்லை……
நேற்று முன்தினம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற படுகொலை குறித்து முகிலன் ‘மறைக்கப்பட்ட உண்மைகள்: கொளுத்தியது யார்?’ என்னும் ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
அந்நிகழ்வில் பூவுலகின் நண்பர்கள் தோழர்.ஆர்.ஆர்.சீனிவாசன், நேர்மை மக்கள் இயக்கம் பழ.ரகுபதி, இளம்தமிழகம் செந்தில், தமிழ்தேச மக்கள் முன்னணி பரிமளா, மே 17 இயக்கம் சபரி, சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தின இரவு தொடர் வண்டியில் சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை, அவர் மதுரைக்கும் செல்லவில்லை. இதனால் அவர் கடத்தப்பட்டாரா??? இல்லை கார்ப்பரேட்டுகளால்…………… என்ற சந்தேகம் எழுகிறது.
இயற்கை வளம் காக்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து களமாடி வருபவர் தோழர் முகிலன். தோழர் முகிலன் போன்றவர்களை காப்பதற்கு வெல்ஃபேர் கட்சி அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடும் என கட்சியில் மாநில செயலாளர் ம. முகமது கவுஸ் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் அஞ்சலி மற்றும் தேசிய கோடி மரியாதை….புகைப்பட தொகுப்பு
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 17.02.2019 இன்று அஞ்சலி மற்றும் தேசிய கோடி மரியாதை செய்யப்பட்டது, தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை மாணவர்கள் ஏந்தி இந்திய ராணுவத்திற்கு என்றென்றும் துணை நிற்போம், தீவிரவாதத்தை முறியடிப்போம் போன்ற உறுதிமொழிகள் ஏற்றனர்.
இஸ்லாமிய பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் தலைமையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் , இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: அனிதா. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடியில் திமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, முகாமை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா R. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள RC நடுநிலைப் பள்ளியில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்து முகாமை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா R. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் சரவணக்குமார் ,முகாமுக்கு முன்னிலை வகித்தனர்.
முகாமில் S.R.S உமரி சங்கர் மாநில மாணவரணி துணை செயலாளர் , குமாரி விஜயகுமார் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் , A.K. பூபதி தலைமை செயற்குழு உறுப்பினர் , S. கருணாகரன் தலைமை செயற்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் நாளை (18/02/2019) -திங்கட் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் கீழக்கரை நகர், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் அ.தி.மு.க பட்டிமன்ற பொதுக் கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நிலக்கோட்டையில் அ.தி.மு.க பட்டிமன்ற பொதுக் கூட்டம் நடந்தது அதில்அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்சேகாட்டை ஒன்றிய அ.தி.மு.க சார்பாக நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி சீனிவாசன், திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மாவட்ட செயலாளர் மருத ராஜ் ஆகியோர் பேசினர் முன்னாள் அமைச்சர் நத்தம் இராவிசுவநாதன், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் பட்டிமன்ற நடுவர் வைகை செல்வன் தலைமையில் அம்மாவின் வெற்றிக்கு காரணம் ஆளுமையா அல்லது அஞ்சாமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்த து.ஆளுமையோடு இணைந்த அஞ்சாமையே என்று முடிவில் தீர்ப்பு கூறினார் கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் தண்டபாணி, சேகர், மோகன், பீர் முகமது,ராஜா, நல்லதம்பி, சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஜான் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் நாடகம் ஏமாற்று வேலை . அதிமுக ஜெயலலிதாவுடன் செத்துப் போயிற்று. திமுக கருணாநிதியுடன் போய்விட்டது. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதி அனேகமாக எனக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். நான் தேர்தலில் நின்றால் மரண அடி தான். எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு எதிராக பணம் கொடுத்தால் நேராக திகார் சிறைக்கு அனுப்பி விடுவேன். பணம் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு கூட்டணி எதற்கு. தற்போது நடந்து நடைபெற்று வருவது பினாமி ஆட்சி முதல்வரை கொன்றுவிட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பிரதமராகவும் ஒரு தமிழன் தான் வந்து உட்கார வேண்டும். அப்பதான் இந்த நாடு உருப்படும். கடந்த 16 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அகழ்வாராய்ச்சி பண்ணார்களே அதை ஏன் ப்ளோரிடா வுக்கு அனுப்பாமல் இருக்கிறார்கள். காங்கிரசும் சரி பாஜகவும் சரி கூட்டுக் களவாணிகள் தமிழர்களின் மாண்பு தெரிந்துவிடும் என்பதற்காக இருட்டடிப்பு செய்கிறார்கள்.
கீழடி விவகாரம் என்ன ஆகிவிட்டது அமைச்சர் மா.ப பாண்டியராஜன் என்ன செய்கிறார். ஏன் அனுப்ப வில்லை தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் தெரிந்துவிடும் என்பதற்காகவா. 2 லட்சம் தமிழர்களை கொன்று விட்டார்கள் நான் எம்பியாக செல்வேன் ராகுல் காந்தியைப் பார்த்து கேள்வி கேட்பேன். ஏழு பேரை விடுதலை செய்து பரிகாரம் தேடிக் கொண்டால் இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு சீட்டாவது கிடைக்கும். காங்கிரஸும் – பாஜகவும் தமிழின விரோதிகள் தான் 7 பேர் விடுதலை ஏன் பண்ணவில்லை என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.