18
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே N.பஞ்சம்பட்டி பிரிவில் திண்டுக்கல்_மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த அருளானந்தம் (வயது 38) சற்று முன் (17/02/2019 – இரவு 10.00 மணியளவில்) சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்க்காக திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இவ்விபத்து குறித்து அம்பாத்துறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.