13
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 17.02.2019 இன்று அஞ்சலி மற்றும் தேசிய கோடி மரியாதை செய்யப்பட்டது, தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை மாணவர்கள் ஏந்தி இந்திய ராணுவத்திற்கு என்றென்றும் துணை நிற்போம், தீவிரவாதத்தை முறியடிப்போம் போன்ற உறுதிமொழிகள் ஏற்றனர்.
இஸ்லாமிய பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் தலைமையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் , இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.