12
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஓன்றியம் களரி தெற்கு ஊரணியில் கடந்த பல ஆண்டுகளாக சீமை கருவேல் மரங்கள் புதர் போல் மண்டிக்கிடந்தன. குடிநீர் உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் இந்த ஊரணி தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஊரணி சீமை கருவேல் மரங்களை அகற்றி ஊரணியை பராமரிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி களரி கிளை பொறுப்பாளர் ஆனந்தக்குமார் தலைமையில் ஜே சி பி இயந்திரம் மூலம் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி நடந்தது.
செய்தி :- முருகன், கீழை நியூஸ், இராமநாதபுரம்
——————————————————————
You must be logged in to post a comment.