இராமேஸ்வரத்தில் இருந்து 13.6.2020 இல் ஹெட்ரோ என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர் வண்ணன் 43, தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம்(மேற்கு) சேசு 60, பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் ஆஸ்டின் சுசீந்தர் 19 ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் படகு மூழ்கியதால் மீனவர் 4 பேரும் மாயகினர். இவர்களில் ஜேசுவை, மல்லிபட்டினம் மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின் சுசீந்தர், மலர் வண்ணன் உடல் மல்லிபட்டினம் கடற்கரையில் மீட்கப்பட்டது.
பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினர். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், ராமேஸ்வரம் நகர் செயலர் கே.இ.நாசர்கான் உள்பட பலர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.