இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கமுதி ஒன்றியம் சார்பாக 200 குடும்பங்களுக்கு அத்தியா.வசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம் போகலூர் ஒன்றியம் சார்பாக திருவாடி கிராமத்தில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது, ரஜினி மக்கள் மன்றம் ராமேஸ்வரம் நகர் கிளை சார்பில் வெளி மாநில யாத்ரீக பக்தர்கள் 200 பேருக்கு 30 நாளாக உணவு வழங்கப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றம மண்டபம் ஒன்றியம் சார்பில் உச்சிப்புளி அருகே தாமரைக்குளம், ரெட்டையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள், ஆதரவற்றோர், முதியோர், கணவரை இழந்தோர் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி வழங்கப்பட்டது. அரிசி, காய்கறி தொகுப்பை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் கே.செந்தில் செல்வானந்த் வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி செயலர் முருகானந்தம், மண்டபம் ஒன்றிய செயலர் வி.ரஜினி, மாவட்ட மகளிரணி துணை செயலர் கோகிலா தமிழ் குமரன், கிளை நிர்வாகிகள் தாமரைக்குளம் சந்திர மோகன், காரான் கோவிந்தராஜ், ராமநாதபுரம் நகர தகவல் தொழில் நுட்ப அணி முகவை செல்வா, ரெட்டையூரணி தனபால், கீழமண்குண்டு முத்துராஜ், மேலமண்குண்டு சசிகுமார், தாமரைக்குளம் சீனிமுத்து, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.