10
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பாக உச்சிப்புளி காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், என் மனங்கொண்டான், கீழநாகாச்சி, புதுமடம் ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசங்களை உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என். நாகேஸ்வரன் வழங்கினார்.
இதில் உச்சிப்புளி ரோட்டரி சங்கத் தலைவர் அபுதாகீர், உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்மேகம், கீழநாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில் குமார், தலைவர் தேர்வு ராஜேஸ்வரன், வெள்ளைச்சாமி சிவக்குமார், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.