கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளம்பி மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அதிமுக சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கால் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 110 நாட்களுக்கும் மேலாக அதிமுக சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்கும் கீரிப்பாறை அருகே அமைந்துள்ள வெள்ளாந்தி, மாறாமலை உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்கள் கோரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் உள்ளிட்டன அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுர குடிநீரும் முக கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக கழக மாநில அமைப்பு செயலாளருமான மாண்புமிகு தளவாய் சுந்தரம் வழங்கிய இந்த நிவாரண தொகுப்பை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழக அரசிற்கும், குமரிமாவட்ட அதிமுகவிற்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ண குமார், மலையோர கிராம விவசாய சங்கத்தலைவர் ஜி னோ தோவாளை ஒன்றிய கவுன்சிலர் மேரி ஜாய், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.