ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
Daily Archives
March 29, 2024
தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி என்ற STREAKக்கு முடிவுரை எழுதிய பெங்களூரு vs கொல்கத்தா போட்டி..
by Askar
written by Askar
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேமரூன் க்ரீன் 33 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் எடுக்க ஆர்சிபில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
பின்னர், 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கேகேஆர் களமிறங்கியது. இதில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆர்சிபி வீரர்களின் பவுலர்களை சும்மாவே விடவில்லை. சரமாரியாக வெளுத்து வாங்கினர். மீண்டும் ஒரு முறை பெங்களூரு கொல்கத்தாவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்டினர்.
பில்ப் சால் 30 ரன்னிலும், சுனில் நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயார் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசில ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடித்து கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.
இறுதியாக கேகேஆர் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஹோம் மைதான அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் நடந்த 9 லீக் போட்டியிலும் ஹோம் மைதான அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டிரெண்டை மாற்றி முதல் முறையாக கேகேஆர் பெங்களூருவில் வெற்றி கண்டுள்ளது.
அதோடு, ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி 5 போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 6ஆவது போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இதுவரையில் இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் இந்த போட்டி உள்பட 19 போட்டிகளில் கேகேஆர் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார் பேச்சு..
by Askar
written by Askar
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார்..
விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஒ. ஆலங்குளம் பகுதியில் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களுக்காக உங்களுக்காக அவ்வளவு பேசுறாருங்க எவ்வளவு பெருமையா இருக்கு அந்த மாதிரி இவரும் எவ்வளவு சிறப்பா செயல்படுகிறார் நீங்கள் ஒன்னே ஒன்னு புரிந்துக் கொள்ளுங்கள்.
பணத்தை கொடுத்து விலைக்கு வாங்க பார்கிறார்கள். மக்கள் ஏமாறப்போவதில்லை அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நான் உங்களிடம் ஒரு சகோதரியாக கேட்டுக்கொள்கிறேன் தயவு செஞ்சு அவங்க சொல்லுகின்ற பொய் வாக்குகளுக்கு நீங்கள் யாரும் காது கொடுக்க வேண்டாம் கை நீட்ட வேண்டாம் தலை நிமிர்ந்து வாழுங்க நாங்க எல்லாரும் சுயமா சம்பாரிச்சு முன்னுக்கு வந்தவங்க நீங்களும் அப்படித்தான் நாளைக்கு உங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும் குடும்ப நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக தானே எல்லாரும் பாடு படுறீங்க.
நாளைக்கு உங்க பிள்ளைங்க ஒரு டாக்டர் ஆகணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா ஒரு ஐபிஎஸ் ஆபிசர் ஆகனும்னு ஆசை இல்லையா எந்த லஞ்சமும் கொடுக்காமல் வாழ்வதற்கு முதல்ல நம்ம வழி நடத்துவோம்.
ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் அதற்கு நீங்கள் தாமரைக்கு வாக்களித்து ஒரு பெரிய வெற்றியை இந்தியாவே தலை நிமிர்ந்து நடக்கிற மாதிரி மூன்றாவது முறையாக நரேந்திர மோடிஜி அவர்கள் பிரதமராக ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தி.விலக்கு, செம்பட்டி, கட்டதேவன்பட்டி, நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், முதலைக்குளம், விக்ரமங்கலம், வாலாந்தூர்,சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குகளை சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.பார்த்திபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம், செல்லம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், நகர செயலாளர் பூமா ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;
அண்ணா திமுகவில் 40 ஆண்டுகாலம் உழைத்து இன்றைக்கு எடப்பாடியார் ஆசியுடன் வேட்பாளராக நாராயணசாமி களம் காண்கிறார். அதிமுகவை எதிர்த்து நிற்பவர்கள் யார்?இரட்டை இலை சின்னத்தால் வளர்ந்து, இன்றைக்கு அதற்கு எதிராக போட்டியிடுகிறார்கள் இதுதான் தர்மமா, நியாயமா? பதவிக்காக எதிர்த்து நிற்கிறார்கள் என உசிலம்பட்டி மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.
பிஜேபி கூட்டணியில் டிடிவி தினகரன் இங்கு போட்டியிட்டு இரட்டை இலையை தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார் தனக்கு வாழ்வு கொடுத்த, அடையாளம் கொடுத்த கட்சியை எதிர்த்து தோல்வி பெறும் என்று கூறுகிறார் நிச்சயம் இரட்டை இலை வெற்றி பெறும்.
இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து குக்கரை தூக்கிக்கொண்டு செல்கிறார் அங்குள்ள மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட குக்கரை இலவசமாக தருகிறார் என மக்கள் கூறுகிறார்கள்.
இன்றைக்கு திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, சென்ற இடமெல்லாம் அதிமுக வேட்பாளருக்கு மிக மகத்தான வரவேற்பு அளித்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கலின் போது நாமினேஷன் பேப்பரை கூட வீட்டில் வைத்து விட்டார் ஏனென்றால், ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர், அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஆனார் என்ற ஞாபகத்தில் வீட்டில் வைத்து விட்டார்.
இன்றைக்கு அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து உள்ளது, விரலை நீங்கள் வெட்டினால் கூட நாங்கள் அதிமுகவிற்கு தான்
வாக்களிப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஓபிஎஸ் அம்மா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அம்மா அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இரட்டை இலையை எதிர்த்து ஓட்டு போட்டார், இது சட்டமன்ற வரலாற்று பதிவில் உள்ளது. அம்மா அரசை கலைக்க முயற்சி செய்தார் கடைசியில் தோல்வி தான் பெற்றார்.
அதனை தொடர்ந்து கழகத்தில் ஓபிஎஸ் இணைந்த பொழுது கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதலமைச்சர் பதவியும் அதோடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் பதவியை எடப்பாடியார் வழங்கினார்,மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சி அமைய வேண்டும் அதற்கு எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் துரோகம் செய்துவிட்டார் அதனால் தான் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியில் உள்ள 2 கோடி உறுப்பினர்களும் அவரை நீக்கினார்கள். இன்றைக்கு அவர் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார் இன்றைக்கு தோல்வி பயம் ஒபிஎஸ்க்கு வந்து விட்டது.எடப்பாடியார் வழங்கிய அரசு பதவி, கட்சி பதவியை கூட உணராமல் துரோகம் செய்துவிட்டு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
இது ஜனநாயக நாடு என் பெயர் உதயகுமார் என் பெயரில் உள்ளவர்கள் யாரும் கூட வேட்புமனுதாக்கல் செய்யலாம், அதேபோலத்தான் பன்னீர்செல்வம் பெயரில் உள்ளவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்கள் இதை கூட சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி யார் தகுதியானவர்கள் என்று முடிவு எடுத்து அதனை வெளியிட்டார் .
திமுக பாஜகதான் கள்ள உறவு வைத்துள்ளார்கள் அங்கு உதயநிதி பிரதமரிடம் பல்லைகாட்டுகிறார், இங்கு செங்கலை காட்டுகிறார் மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
by Askar
written by Askar
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் ,திண்டுக்கல் சீனிவாசன் , அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் :- எங்கு சென்றாலும் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள் என்றும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை கேவலப்படுத்தி வருகிறார்கள் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி தேர்தல் நிதி என்று 6500 கோடி ரூபாய் மறைமுகமாக பெற்றுள்ளதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச வந்த போது எம்ஜிஆரின் பாடலான ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பேசிய முபாரக் பழனி அடிவாரம் முருகன் கோவில் கிரிவலப் பாதைகளில் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் இதனை நான் வெற்றி பெற்றால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபாரிகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பேன் எனவும் பேசினார். பின்னர் சின்ன பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட முபாரக் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இணைந்து தொழுகை மேற்கொண்டு வந்த இஸ்லாமியரிடம் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்பி குமாரசாமி ,முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபாலு ,குப்புசாமி , நகரச் செயலாளர் முருகானந்தம் ,எம் ஜி ஆர் மன்ற மாநில இணை செயலாளர் ரவி மனோகரன்,ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
by Askar
written by Askar
சின்னமனூரில் வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் செவ்வத்திவீரன் (60), பார் ஊழியர். இவரது மனைவி ஒச்சம்மாள் (55). இவர்களது மகன் ராஜேஷ் (33). இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்தார். செவ்வத்திவீரன் கடன் வாங்கி புது வீடு கட்டியுள்ளார். ஆனால், கடனை அடைக்க முடியாமல், கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இருப்பினும் கடன் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மேலும், வீட்டில் செய்முறை வைத்து, உறவினர்களிடம் மொய் வாங்கி கொஞ்சம் கடனை அடைத்துள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள் விசேஷம் வைக்கும்போது, அவர்களுக்கு மொய் செய்ய முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், மகனும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மகனுடன் மருமகள் தகராறு செய்துவிட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒருபுறம் கடன் பிரச்னை, மறுபுறம் மருமகள் பிரிந்து சென்ற பிரச்னை என பிரச்னைக்கு மேல் பிரச்னை ஏற்பட்டதால் செவ்வத்திவீரன், அவரது மனைவி, மகன் நேற்று இரவு தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மூவரும் பாலில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். இன்று காலை வீட்டின் கதவு 9 மணி வரை திறக்காததால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர்!-மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு..
by Askar
written by Askar
தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர, சென்சஸ் எடுக்கமுடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க.ஒருமுறையாவது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தரமுடியாது என பாஜக கூறிவிட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார் என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் 1 லட்சத்து ஐம்பதாயிரம்! பறிமுதல் செய்த பறக்கும் படை..
by Askar
written by Askar
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி திரியும் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.உடனே அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் சேலையில் சுற்றி வைத்திருந்த பொருள் என்னவென்று பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பணத்துக்கு உரிய ஆவணங்களை இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த 5 நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிச்சை எடுத்து வைத்திருந்த பணம் என தெரியவந்தது.பறிமுதல் செய்த பணத்தை உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு ஐ.நா சபை பாராட்டு சான்று; பொதுமக்கள் பாராட்டு..
சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி ஐ.நா. சபையின் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய பசுமை படையுடன் இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஸ்ரீ பவானி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, கடையநல்லூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நெகிழி இல்லா கடையநல்லூரை உருவாக்க உறுதி கொண்டு தேவையான விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கடையநல்லூர் காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், வனத்துறை அலுவலகம், ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் சென்று அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நெகிழியின் பயன்பாட்டால் மண், காற்று, நீர் ஆகியவை மாசு படுவதையும், அதனால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வு மட்டுமல்ல தங்களுடைய வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பள்ளி சார்பாக காய்கறி மார்கெட் சென்று வாழ்கை கல்வியை வழங்கும் நோக்கில் அனைத்து மாணவர்களும் 100 ரூபாய்க்கு காய்கறி வாங்கும் நிகழ்வில், அனைத்து மாணவர்களும் துணிப்பையுடன் சென்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சமூகத்திற்கும் முன்னுதாரணமாக செயல்படுகின்றனர்.
மாணவர்களின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாக ஐ.நா சபை, இந்திய அரசு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் கல்வித்துறை இணைந்து சாதனா வித்யாலயாவின் பசுமை படையின் 53 மாணவர்களுக்கும், 12 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. ஐநா சபை விருது பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தமிழ்நாடு அரசு மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறுப்பாளர் ஸ்ரீ பவானி, தாளாளர் ரமேஷ், முதல்வர் மயில் கண்ணு ரமேஷ், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1823 கோடி ரூபாய் வரி! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி! நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு..
by Askar
written by Askar
வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ED, IT மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஊழல் செய்த கட்சி பாஜக!-கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நல்முனை சாலை சந்திப்பு பகுதியில் கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது மீண்டும் மேற்கொள்ள உள்ள சுதந்திரப் போராட்டம். அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உங்களை சந்தித்து வாக்குகள் கேட்கும் பொழுது அவர்களிடம் விவசாய மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என்று கேளுங்கள்.வேளாண் மசோதாவை கொண்டு வந்து விவசாய மக்களை பாதிப்படையை சேர்ந்தது பாஜக. அதற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக.
தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைவருக்கும்மான ஆட்சியாக நம் முதலமைச்சரின் ஆட்சி உள்ளது. நீங்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கலாம் என்று போராடாமல் இருக்காதீர்கள். தொழிலாளர்கள் என்றால் போராட வேண்டும் என்று சொன்ன ஒரே முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜகவின் அரசு மக்களுக்கான அரசு அல்ல, அதானி அம்பானி அவர்களின், அவர்களுக்கான அரசு.நாம் ஒரு ரூபாய் நிதியாக வழங்கினால் ஒன்றிய அரசு நமக்கு 25 பைசாவாக திரும்பி அளிக்கிறது ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரட்டிப்பாக 2.22 ரூபாய் வழங்குகிறது.
நாம் தேர்தல் வாக்குறுதியில் அளித்து போல, மகளிர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று, சொன்னதை செய்து காட்டி 1.15 லட்சம் மகளிர்கள் திட்ட மூலம் பயன் பெற்று வருகின்றனர். நாம் நினைக்கும் நியாயமான ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் அமைக்கப்படும். இந்தியா கூட்டணியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாக மோடி தெரிவித்தார். ஆனால் இதுவரை யாருக்கும் மானியம் வழங்கவில்லை. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது சமையல் எரிவாயுவின் விலை 410 ரூபாயாக இருந்தது, தற்பொழுது 1050 விற்கப்படுகிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சமையல் எரிவாயு 500 ஆகவும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்து சட்டப்படி ஊழல் செய்து கொண்டுள்ள கட்சி பாஜக, நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு திருடுவது போல, நள்ளிரவில் அமலாக்க துறை அல்லது வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி, அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்று கொள்கிறேன். அதே அவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் வைத்துள்ள பெரிய சலவை இயந்திரத்தில் போட்டு அவர்களை வெள்ளை ஆக மாற்றிவிடுகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளின் 90% வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது பாஜக போட்டுள்ளது” என்று கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தம்பி அண்ணாமலை எனது வெற்றிக்காக பாடுபடுகிறார்; சீமான் பரப்புரையில் பேச்சு..
written by Abubakker Sithik
பாஜகவில் இருந்து கொண்டு எனது வெற்றிக்காக மறைமுகமாக பாடுபடுகிறார் அண்ணாமலை; கடையநல்லூரில் சீமான் பேச்சு..
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும், நேர்மை என்பது உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைப்பதற்கு சமமாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம். அந்த காலம் இந்த காலம் தான் என் அன்பு மக்களே. பணம் இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும், அதிகாரத்திற்கு செல்ல முடியும் என்கிற நிலை இருக்கும் வரைக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கான சேவை என்பது கனவாகத்தான் இருக்கும். கேடுகட்ட பணநாயகமாக மாறி இருக்கிற இந்த நாட்டில் ஒரு தூய ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான ஒரு புரட்சியாகத்தான் உங்கள் பிள்ளைகள் இந்த அரசியலை முன்னெடுக்கிறோம்.
ஜாதி மதம் கடந்த சமுத்திரம் நாங்கள். மனிதம் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்ட பிள்ளைகள் நாங்கள். உங்கள் வாக்குகளை ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்துக் கொண்டு என்னை வீழ்த்தி விடலாம் என கனவு கண்ட இந்த ஆட்சியாளர்கள். குறிப்பாக பாஜகவை சேர்ந்த என் தம்பி அண்ணாமலை. பாஜகவில் இருந்து கொண்டு மறைமுகமாக என் வெற்றிக்காக பாடுபடும் அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
என்ஐஏ ரெய்டு மூலம் என்னை உலக அளவிற்கு உயர்த்தி சென்றவர் அவர். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்து ஒலிவாங்கி (மைக்) சின்னத்தை கொடுத்து பாஜகவின் பீ டீம் நான் இல்லை என்பதை நிரூபித்த பெருந்தகை. அவருக்கு எனது அன்பையும், நன்றியையும் உரித்தாக்க கடமைபட்டுள்ளேன். என்னை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவிலிருந்து போராடி கொண்டிருக்கிறார். எங்களின் இலக்கு இனத்தின் விடுதலை ஒன்றுதான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் என் அன்பு தம்பி மதிவாணன் அவர்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பரப்புரையில் சீமான் குறிப்பிட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல்களை வெளியிட்டு, பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை..
by Askar
written by Askar
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல்களை வெளியிட்டு, பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு..
by Askar
written by Askar
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.இந்நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26-ல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்..
by Askar
written by Askar
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
தேர்தல் பணி பயிற்சிக்கு வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது!- சீமான்..
by Askar
written by Askar
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
(உஸ்மானிய பேரரசு -29)
(கி.பி 1299-1922)
முஸ்லீம்களுக்குள்ளே
ஏற்பட்ட கொள்கை குழப்பங்களால் ஐரோப்பா மகிழ்ச்சி அடைந்தது.
குறிப்பாக ஈரான் சியா கொள்கையை
பின்பற்றியதால் சுன்னி கொள்கையுடைய
உஸ்மானிய பேரரசை எதிர்த்தது.
ஈரானிற்கு ஐரோப்பிய நாடுகள்
பலவகையான ஆயுதங்களை கொடுத்து உஸ்மானிய
பேரரசிற்கு
எதிராக போர்களை தூண்டியது.
இதுபோன்ற இடைவிடாத பிரச்சினைகளால் உஸ்மானிய பேரரசு அமைதியிழந்து இருந்தது.
இந்த சூழலில் சுல்தான் சலீம் தனது 56 ஆவது வயதில் மரணமடைந்தார்.
அவரைத் தொடர்ந்து
உலகத்தின் கவனத்தை ஈர்த்த சுலைமான் அல் கானூனி அவர்கள் பேரரசராக பதவி ஏற்றார்.
இவரின் ஆட்சியில் உஸ்மானிய அரசு பேரரசாக மட்டுமில்லாமல் வல்லரசாக மாறியது.
இவர் சிறந்த மார்க்க அறிஞராகவும்,
போர் கலையில் வல்லுநராகவும், இருந்தார்.
இவர் இஸ்லாமிய கல்வியையும்,
உலகம்சார்ந்த கல்வியையும்,
ஒருங்கிணைத்து
சிறந்த கல்விமுறையை ஏற்படுத்தினார்.
இதன் பலனாக ஒழுக்கம்,இறைநேசம்
மார்க்கபற்று, உலகின் அன்றைய அறிவுசார்ந்த விஷயங்கள் என கல்விகற்ற மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டனர்.
இதனால் கல்வி புரட்சி ஏற்பட்டது.
கல்வியில் பல ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தனர்.
பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு
அடித்தளம் அமைக்கப்பட்டது.
அந்த நிலையில் ஐரோப்பா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.
முஸ்லீம்களின் முகவரியாக துருக்கி இருந்ததால் ஐரோப்பியர்கள் முஸ்லீம்களை துருக்கியர்கள் என்று அழைத்தனர்.
உஸ்மானிய பேரரசின் கடற்படை மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டது.
ஏராளமான போர்க்கப்பல்கள் இருந்தன.
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக
இருந்ததால், ஆட்சியிலிருந்த சுலைமான் அல் கானூனி அவர்கள் தூர நோக்கு சிந்தனையோடு அற்புதமான திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.
பெரிய கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து
குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம் என்று பாடங்கள் போதிக்கப்பட்டது.
படித்து வெளிவந்த அவர்களையே அரசின் நிர்வாகங்களில் அதிகாரிகளாக நியமனம் செய்தனர்.
இதனால் பேரரசர் நினைத்தபடி அரசாங்கத்தை எளிதாகவும்,
விசுவாசமாகவும், செயல்படுத்த முடிந்தது.
கிறிஸ்தவ இளவரசிகளை தகுதிக்கேற்ப திருமணங்கள் செய்து கொண்டனர்.
இதனால் மிகப்பெரிய இரண்டு சமூகங்கள் ஒன்றிணைந்ததால் ஆட்சியை சிறப்பாக நடத்த முடிந்தது
அரசு நிர்வாகங்கள் மிகச்சிறந்த முறையில் இயங்கியது.
இதனால் பேரரசரின்
திட்டங்களை எளிதாக செயல்படுத்தினர்.
வரிகள் மிகக்குறைவாக வசூலிக்கப்பட்டன.
ஜகாத் போன்ற முஸ்லீம்களிடம் கட்டாயமாக வாங்கப்பட்ட
பொருளாதாரமும்,
மற்ற சமூக மக்களிடம்
மற்ற நாடுகளைவிட
ஜகாத்தை விட குறைவாக வசூலிக்கப்பட்ட பொருளாதாரமும்
இஸ்லாமிய பேரரசுகளை பொருளாதார வலிமை மிக்கதாக ஆக்கியது.
இது ஒரு புரட்சிகரமான
ஒன்றிணைந்த பொருளாதார திட்டமாக இஸ்லாமிய
ஆட்சியாளர்களால்
செயல்படுத்தப்பட்டது.
அப்பாஸிய ஆட்சியில்
பாக்தாத் நகரை தீக்கிரையாக்கிய
செங்கிஸ்கானின் வாரிசுகள் அற்புதமான அறிவுப் பொக்கிசங்களான
புத்தகங்ளையும்
தீயிட்டு கொளுத்தினர்.
பாக்தாதின் யூப்ரடீஸ் டைகிரிஸ் நதிகளில்
கொட்டப்பட்ட புத்தகங்களால் நதிகளே பல மாதங்கள்
கருப்படைந்து ஓடியதாக வரலாறு கூறுகிறது.
இதனால் இஸ்லாமிய சட்ட நூல்கள் எல்லாம் இல்லாமல் ஆயின.
புதிய புதிய பிரச்சினைகளுக்கு
இஸ்லாமிய சட்டப்படி விளக்கங்கள் கொடுக்க மிக சிரமமான சூழல் உருவானது.
சுலைமான் அல் கானூனி அவர்களின் மறுமலர்ச்சி சிந்தனைகள் ஆச்சரியமான
வைகளாக
இருந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
written by Abubakker Sithik
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த தனியார் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் ஒரு கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக பாலமுருகன் கூறியுள்ளார். ஆனால் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூபாய் பத்து லட்சத்திற்கும் அதிகம் என்பதால் இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் பேச்சு..
written by Abubakker Sithik
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி ஆக வேண்டும். மீண்டும் மோடி வந்தால் நமது தலையெழுத்தை அவர் மாற்றி விடுவார். அவர் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை வந்து விட்டால் தேர்தல் இருக்காது. அவர் மட்டும் தான் இருப்பார். நாம் வாய் திறந்து கூட பேச முடியாது. அப்படி ஒரு சூழல் இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கி மோடியை எதிர்க்கிறோம். நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. எம்எல்ஏ தேர்தல், ஊராட்சி தேர்தலிலும், எம்பி தேர்தலிலும் நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. அதற்கு காரணம் தளபதி ஸ்டாலின் அவர்கள். அனைவரையும் அனுசரித்து, மனம் கோணாமல், அனைவரும் தேவையை பூர்த்தி செய்து வருகிறார். மோடியை தோற்கடிக்க வேண்டுமே தவிர நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று பாரபட்சம் இன்றி இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் சமம் என்று நினைத்து பணியாற்ற வேண்டும்.
நமது கூட்டணி ஆட்சி மத்தியில் வரவேண்டும் என்றால் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் ராஜபாளையம் தொகுதியில் தான் அதிக வாக்கு வாங்க வேண்டும். அது தான் மரியாதை. எம் எல் ஏ, நகராட்சி சேர்மன், ஊராட்சி சேர்மன் அனைவரும் திமுகவினராக இருப்பதால் இந்த தொகுதியில் அதிக வாக்குகள் திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும். நமது சொந்த வேலைகளை 15 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு கட்சி பணியாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதி குறித்து மிக எளிமையான முறையில் துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்க திமுகவினர் முயற்சி எடுக்க வேண்டும்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.