அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.விஜய பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக சார்பில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Category:
மாவட்ட செய்திகள்
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி..
by Askar
written by Askar
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி..
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு.
- தென் சென்னை:தமிழிசை சவுந்தர்ராஜன்
- கோவை :அண்ணாமலை
- கன்னியாகுமரி:பொன். ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி:நயினார் நாகேந்திரன்
- வேலூர் :ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)
- மத்திய சென்னை:வினோத் பி.செல்வம்
- நீலகிரி(தனி தொகுதி):எல்.முருகன்
- கிருஷ்ணகிரி:சி.நரசிம்மன்
- பெரம்பலூர்:பாரிவேந்தர் (ஐ.ஜே.கே
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி..
- ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார்
- வேலூர் – எஸ்.பசுபதி
- தருமபுரி-அசோகன்
- திருவண்ணாமலை – கலியபெருமாள்
- கள்ளக்குறிச்சி – குமரகுரு
- திருப்பூர் – பி.அருணாச்சலம்
- நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்
- கோவை – சிங்கை ராமச்சந்திரன்
- பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
- திருச்சி – கருப்பையா
- பெரம்பலூர் – சந்திரமோகன்
- மயிலாடுதுறை – பி.பாபு
- சிவகங்கை – சேவியர்தாஸ்
- தூத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி
- திருநெல்வேலி -சிம்லாமுத்துச்செல்வன்
- கன்னியாகுமரி – பசுலியான் நசரேத்
- புதுச்சேரி – தமிழ்வேந்தன்
- விளவங்கோடு (இடைத்தேர்தல்) – யு.ராணி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடபழனி, ஆற்காடு சாலையில்காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..
by Askar
written by Askar
வடபழனி, ஆற்காடு சாலையில்
காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..
சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாக்க தலைவர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ் மணிவண்ணன் செல்வராஜ், மற்றும் இக்குழுமத்தின் இணைநிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய மருத்துவமனையில் 9 உயர்சிகிச்சை நேர்த்தி மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு நிகரற்ற மருத்துவ சேவை வழங்குவதில் இக்குழுமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
250 படுக்கை வசதிகளைக் கொண்ட இம்மருத்துவமனையில், 75 படுக்கைகளுடன் கூடிய உயிர்காக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவு (CCU), 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் லேமினார் ஃபுளோ-உடன் கூடிய 6 மாடுலர் அறுவைசிகிச்சை அரங்குகள் உட்பட அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து பேசிய ரஜினி காந்த்
நான்காம் நிலை உயர்சிகிச்சை வழங்குநராக வடபழனி – காவேரி மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டிருப்பது, மிக உயர்ந்த நிலையில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் காவேரி மருத்துவமனைகள் குழுமம் காட்டும் அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது. தனிச்சிறப்பான சிகிச்சையையும், மிக நவீன உடல்நல பராமரிப்பு தீர்வுகளையும் வழங்குவதில் உயர்மேண்மை நிலையை எட்டவேண்டும் என்பதில் இம்மருத்துவமனை காட்டி வரும் பொறுப்புறுதி, புதுமையான சிகிச்சை பராமரிப்பின் நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக இதன் நிலையை வலுப்படுத்துகிறது. என்று இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய கடலை மிட்டாயில் புழுக்களா.? கடையின் புகழுக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக உரிமையாளர் பரபரப்பு புகார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய கடலை மிட்டாயில் புழுக்களா.? கடையின் புகழுக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக உரிமையாளர் பரபரப்பு புகார்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்டோர் ஆகும், இங்கே கிடைக்கும் பொருட்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும் என கடையின் வாடிக்கையாளர்கள் கூறுவது உண்டு.
இந்நிலையில் கடந்த 19/03/204 அன்று இரவு 8 மணியளவில் மன்னவராதியை சேர்ந்த சந்தன பிரபு என்பவர் அவருடைய கடையின் அடையாள எண் (7121) முட்டை மற்றும் லாக்டோஜென் ஆகிய இரண்டு பொருட்களை மட்டுமே வாங்கியுள்ளார்.
வாங்கிய பொருட்களின் ரசீதை காண்பித்து கடலை மிட்டாய் வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது சம்பந்தமாக நிலக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா இடத்தில்புகாரும் சென்றுள்ளது.
அதன் பின்னர் சரண்யா சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு தனது உதவியாளரை அனுப்பி ஆய்வு செய்ய கூறியுள்ளார்.
ஆய்வின் போது அங்கே இருந்த மிட்டாய்கள் நல்லவிதமாகவே இருந்துள்ளது.
சில பாக்கெட்களை ஆய்வுக்காக தனது அலுவலகத்திற்கு எடுத்தும் சென்றுள்ளார்.
இந்நிலையில் நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா இடத்தில் பேசினோம் அப்போது அவர் கூறியதாவது;
பெரும்பாலும் கடலை மிட்டாய்களில் புழுக்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவுதான் தூசிகள் அல்லது மாவு கலந்து இருக்கும் பட்சத்தில் அது மட்டும் தான் தென்படும் ஆனால் புழுக்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறினார் மேலும் மேற்கண்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள கடலை மிட்டாய்கள் தரமாக இருப்பதாகவும் அந்த மாவு போன்ற பொருட்கள் கூட இல்லை என கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நிலக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் கலந்தர் நைனா முகமது இடத்தில் பேசினோம் அப்போது அவர் கூறியதாவது;
கடந்த ஐந்து வருடங்களாக நிலக்கோட்டையில் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறோம் ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில், முடிந்து போன தேதியில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்வதற்காகவே ஒருவரை வேலைக்கு அமர்த்தி உள்ளோம். எங்கள் ஸ்டோரில் மிகவும் தரம் வாய்ந்த நல்ல பொருட்களை மட்டுமே வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம் அப்படி இருக்கும் சூழ்நிலையில் மன்னவராதியைச் சேர்ந்த எங்களது வாடிக்கையாளர் சந்தன பிரபு என்பவர் எங்கள் கடையில் கடலை மிட்டாய் வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் எங்கள் ஸ்டோரின் ரசீதை காண்பித்து ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அவர் காண்பித்து செய்திகள் வெளியான ரசீதில் முட்டை மற்றும் லாக்டோஜென் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது, கடலைமிட்டாய் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் வேண்டுமென்றே எங்களது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் எனும் நோக்கத்திலும் வேறு சில காரணங்களாலும் இது போன்ற அவதூறுகளை பரப்பியுள்ளனர். இது எங்களுக்கு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
எங்கள் கடையில் வாங்காத ஒரு பொருளை வாங்கியதாகவும் அதில் புழுக்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டிய நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -21
(கி.பி 1299-1922)
துருக்கியின் தலைநகரான இன்றைய இஸ்தான்ஃபுல்
அரபியில் குஷ்துன்துனியா
என்றும் ரோமர்களால்
காண்ஸ்டாண்டி நோபிள் என்றும் அழைக்கப்பட்ட அந்த அழகிய நகரம் மூன்று புறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்பமாகும்.
காண்ஸ்டாண்டி நோபிள் நகரை சுற்றி பாதுகாப்பு கோட்டை சுவர் இருந்தது.
அதன் கோட்டை வாயில்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன.
சிலசமயம் கடல்நீர் பெருக்கு ஏற்படும்போது படகுகளில் சென்று கோட்டை கதவுகளை மூடுவார்கள்.
கடலில் பாதுகாப்புக்காக
கப்பல்களை சுற்றி நிற்க வைத்து இடைவெளிகளை இரும்பு சங்கிலிகளால் பிணைத்து வேறு கப்பல்கள் இவர்களை மீறி உள்நுழையாதபடி
பாதுகாப்பு ஏற்பாடுகள் வெகு சிறப்பாக ரோம மன்னர்கள் செய்து வைத்து இருந்தனர்.
பைபிளில் கூறப்பட்டுள்ள ஏழு புனித தலங்கள் இங்கு இருப்பதால் இந்த நகரை கிறிஸ்தவர்கள் பெரிதும் நேசித்தனர்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த நகரை மிகச்சிறந்த படைத்தலைவர் வெற்றி கொள்வார் எனவும்,அதுவே மிகச் சிறந்த படை எனவும் அறிவித்தார்கள்.
ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது முதலில் வெற்றி கொள்ளப்படும் நகரம் ரோமா ? அல்லது காண்ஸ்டாண்டி
நோபுளா என வினவப்பட்டது.
அதற்கு நபியவர்கள்
முதலில் “ஹிரகல் என்று மன்னனின்
நகரமாகிய
காண்ஸ்டாண்டி நோபிள் நகரமே என்று முன்னறிவித்ததாக
அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அறிவித்தார்கள்.
இந்த சிறப்பை பெற வரலாறு நெடுகிலும் பல முஸ்லிம் மன்னர்கள் முயற்சித்தும் அதனை வெற்றி கொள்ள முடியவில்லை.
முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில்,
ஸுப்யான் பின் அவ்ப் (ரலி) தலைமையில் ஒரு படையை அனுப்பினார்.
அதில் முக்கிய நபித்தோழர்கள்
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி),அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) ஆகிய மூத்த தோழர்கள் படையில் பயணித்தனர்.
படை முற்றுகை இட்டிருந்த போது
அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள்.
அவர்கள் கோட்டையின் மதில் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அதற்குப் பிறகு உமையாக்களின் ஆட்சியிலும்,
அப்பாஸிய மன்னர்களின் ஆட்சியிலும் பலமுறை முயன்றும்
காண்ஸ்டாண்டி நோபிள் நகரை முஸ்லீம் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.
கி.பி.1393 ஆம்ஆண்டு
உஸ்மானிய மன்னர் பயாசித் பெரும்படையுடன்
காண்ஸ்டாண்டி நோபிள் நகரை முற்றுகையிட்டார்.
இஸ்லாமிய உஸ்மானிய அரசின் கீழ் வந்துவிடுமாறு
ரோமானிய மன்னருக்கு கடிதம் அனுப்பினார்.
ரோமரான பைசாந்திய மன்னர்
ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடினார்.
அதே சமயத்தில்
மங்கோலியர்கள் முஸ்லீம்களின் மீது படை எடுத்து போர்தொடுத்தனர்.
ஆகவே முற்றுகையில் இருந்து
பின்வாங்கி மங்கோலியர்களோடு
போரிடும் சூழல் நிலவியதால் அப்போதும் அந்த நகரை வெற்றிகொள்ள முடியவில்லை.
இந்த சூழலில் மீண்டும் இரண்டாம் முராத் காலத்தில்
காண்ஸ்டாண்டி நோபிள் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டார்.
அப்போது பேரரசிக்கு
அழகான ஆண்குழந்தை பிறந்தது.
அது உலகின் வரலாற்றையே மாற்றி எழுதப்போகிறது என்பதை யாரும் அறியவில்லை.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேரை கைது – 15.45 லட்ச ரூபாய் வசூல்..!!
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023 முதல் 2024 மார்ச் 20 தேதி வரை ரயில் பயணத்தின் போது தேவையில்லாமல் ரயிலின் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை பாதியிலே நிறுத்திய விவகாரம் நேற்று வரை சுமார் 2632 வழக்குகள் பதிவு – 2618 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அபராத தொகையாக இதுவரை சுமார் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்பட்டுள்ளது.
1989 இந்திய ரயில்வே சட்டத்தின்படி, நியாயமான காரணமின்றி எச்சரிக்கை சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அபராதம் ரூ. 1,000 / ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..
ஆட்டோவிற்கு வழி விடக் கூறியதால் கல்லால் தாக்கிய நபர் கைது..
சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாமல் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பிரச்சனை செய்துள்ளார். ஏன் இப்படி பிரச்சனை செய்கிறாய் என்று சங்கரன் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த அவரது மகனான திருமலைக் குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருமலைக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டு மேற்படி சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரீஸ்வரன்(33) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபர்கள் கைது..
குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த அழகு என்பவரின் மகன் காளிராஜ்(29) மீது சார்பு ஆய்வாளர் ராஜேஷ்குமார் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 06 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று, தென்காசி மாவட்டத்தில் 19.03.2024 அன்று சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது..
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாபுரம் பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேட்டூரை சேர்ந்த தவ பெத்தன் என்பவரின் மகன் நாராயணன்(62), டானாவூர் சுப்புராஜ் என்பவரின் மகன் டேவிட்(29), ஆசீர்வாதபுரம் முப்புடாதி என்பவரின் மகன் சக்திவேல் (38) மற்றும் பால்வண்ணநாதபுரம் வீரசக்தி என்பவரின் மகன் முத்துக்குமார் (35) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் 400 பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது..
வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துவழி தலையணை சாலையில் சார்பு ஆய்வாளர் அவிவினா தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த சிந்தாமணியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(23), அருளாட்சியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் மகேந்திரன்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், கார் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் மற்றும் RPF படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில் 20.03.2024 அன்று ஊத்துமலை பகுதியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணாபஸ் முன்னிலையில் RPF வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. முன்னதாக, சுரண்டை பகுதியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணாபஸ் முன்னிலையில் RPF வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்த கொடி அணிவகுப்பு 19.03.2024 அன்று நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 13 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர். முன்னதாக தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 06 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
by Askar
written by Askar
எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள், முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பிரசாரம், தேர்தல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசியதாவது: நம்முடைய கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம், தமிழ்நாட்டோட நலன் முக்கியம், நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம் என்ற வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு. தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை மிகவும் கண்டிப்புடன் சொல்லுகிறேன். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். கூட்டணி கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது தான் ரொம்ப முக்கியம். மக்களை நேரடியா சந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமேல் பாசிச வெறிபிடித்த பாஜவுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி. ஜூன் 4ம் தேதி வெற்றிச் செய்தியோடு வந்து என்னைச் சந்தியுங்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை கோலாகலமாக தொடக்கம்: சென்னை, பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சி..
by Askar
written by Askar
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடப்பது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019, 2021-ம் ஆண்டு சீசனும் சென்னையில் இருந்து தான் தொடங்கியது.
ஐ.பி.எல். போட்டிக்கு தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொள்வதற்காக சென்னை கேப்டன் தோனி 2 வாரத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டார். தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சான்ட்னெர், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, ஷர்துல் தாக்குர், ஷிவம் துபே, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோரும் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரு அணி வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் நேற்று சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கினர். இன்றும் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
முதல் ஆட்டம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் இப்போதே எகிறியுள்ளது. ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதால், ஸ்டேடியம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் குலுங்கப்போகிறது.
இதற்கிடையே, ‘ஐ.பி.எல். பேன்ஸ் பார்க்’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய திரையில் ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக காண இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மதுரையில் நாளையும், நாளை மறுதினமும், கோவையில் மார்ச் 30, 31-ந்தேதியும் ஐ.பி.எல். ஆட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் துவங்கி வைத்தார்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் முகாமினை 20.03.2024 அன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். ஜனநாயகம், கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை, 100% ஓட்டு இந்தியர்களின் பெருமை, நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அரசு பேருந்துகளில் ஒட்டப்பட்டன. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து பேருந்துகளிலும் மார்ச்.20 முதல் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களிடையே தேர்தல் அன்று அனைவரும் கட்டாயம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M. சிவக்குமார், M.மாரீஸ்வரன், அ.பிரபாகர், இ.சாமத்துரை, கலைச்செல்வி, தென்காசி அரசு போக்குவரத்து கழக மேலாளர் பாலசுப்பிரமணியன், புளியங்குடி அரசு போக்குவரத்து கழக மேலாளர் முருகன், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான SVEEP செயல்பாடுகள், ஆவின், கூட்டுறவுத் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, வங்கிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தினசரி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மூளையில் அறுவை சிகிச்சை: குணமடைந்து வருகிறேன் என வீடியோ வெளியிட்ட சத்குரு..
by Askar
written by Askar
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார். சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தல்2024: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயண விபரங்கள் மற்றும் தேதிகள் அறிவிப்பு..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் இணைந்து எதிர்கொள்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 22-ந்தேதி முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
- 22.03.2024 (வெள்ளிக்கிழமை) – திருச்சி, பெரம்பலூர்
- 23.03.2024 (சனிக்கிழமை) – தஞ்சை, நாகை
- 25.03.2024 (திங்கட்கிழமை) – கன்னியாகுமரி, திருநெல்வேலி
- 26.03.2024 (செவ்வாய்கிழமை) – தூத்துக்குடி, இராமநாதபுரம்
- 27.03.2024 (புதன் கிழமை) – தென்காசி, விருதுநகர்
- 29.03.2024 (வெள்ளிக் கிழமை) – தருமபுரி, கிருஷ்ணகிரி
- 30.03.2024 (சனிக்கிழமை) – சேலம், கிருஷ்ணகிரி
- 31.03.2024 (ஞாயிற்றுக் கிழமை) – ஈரோடு, நாமக்கல், கரூர்
- 02.04.2024 (செவ்வாய் கிழமை) – வேலூர், அரக்கோணம்
- 03.04.2024 (புதன் கிழமை) – திருவண்ணாமலை, ஆரணி
- 05.04.2024 (வெள்ளிக்கிழமை) – கடலூர், விழுப்புரம்
- 06.04.2024 (சனிக் கிழமை) – சிதம்பரம், மயிலாடுதுறை
- 07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) – புதுச்சேரி
- 09.04.2024 (செவ்வாய் கிழமை) – மதுரை, சிவகங்கை
- 10.04.2024 (புதன் கிழமை) – தேனி, திண்டுக்கல்
- 12.04.2024 (வெள்ளிக் கிழமை) – திருப்பூர், நீலகிரி
- 13.04.2024 (சனிக் கிழமை) – கோவை, பொள்ளாச்சி
- 15.04.2024 (திங்கட் கிழமை) – திருவள்ளூர் வடசென்னை
- 16.04.2024 (செவ்வாய் கிழமை) – காஞ்சிபுரம், திருபெரும்புதூர்
- 17.04.2024 (புதன் கிழமை) – தென்சென்னை, மத்திய சென்னை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு..
written by Abubakker Sithik
அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு..
சோழவந்தானில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியாத நிலையில் இருந்ததாகவும் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக 37,000 கோடி கேட்டும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற முடியாத நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று எம்பிக்களை அனுப்பினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் அதிமுக கடந்த காலங்களில் காவேரி பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிய சம்பவங்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறது ஆகையால் அதனை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மு காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் முருகேசன், அசோக், அழகுராஜா, குமார், நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், மகளிர் அணி லட்சுமி மாவட்ட மாநில நிர்வாகிகள் பஞ்சவர்ணம், திருப்பதி, வெற்றிவேல் துரை, தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி, தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா, ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி தண்டபாணி, கேபிள் மணி, தியாகு பெருமாள், மன்னாடிமங்கலம், ராஜபாண்டி, மருது, சேது, ஜூஸ் கடை கென்னடி, துரை, புஷ்பம், பேட்டை மாரி, மணிகண்டன், எஸ்பி மணி, வாவிடமருதூர் ஆர் பி குமார், கேட்டுக்கடை முரளி, அவைத்தலைவர் ராமசாமி, சந்தனத்துறை மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூபாய் 78,500 பறிமுதல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும் படை C டீம் , மாநில தணிக்கைத்துறை அலுவலர் தேன் மாரிகனி தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா என்பவரின் மகன் அப்துல் பத்தாஹ் (வயது 50) என்பவர் சிலைமான் அருகே தாஜ் பிரிக்ஸ் கோட்ஸ் என்ற பெயரில் செங்கல் தயாரித்து வருகிறார். காலை வீட்டிலிருந்து TN 64 y 50 51 தன்னுடைய பிரிஸா காரில் ரூபாய் 78 ஆயிரத்து 500 பணம் எடுத்து சென்றார்.
வாகன சோதனையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற விதிமுறையில், ரூபாய் 78,500 க்கு அலுவலர்கள் கணக்கு கேட்டபோது அப்துல் பத்தாஹ் பதிலளிக்காததால் சோதனையில் ஈடுபட்ட அலுவலர் தேன்மாரிக்கனி குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து திருப்பரங்குன்ற வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒத்தியை நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு அணிவகுப்பு போன்றவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் துணை ராணுவப்படையுடன் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு!-எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுத் தாக்கல் செய்தார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ,இந்திய தேசிய லீக் கட்சி தனது ஆதரவு !
by Baker BAker
written by Baker BAker
இ
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது ஆதரவைத்து தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் கவியருவி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர், மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் ஷாஜகான், தென் மண்டல அமைப்புச் செயலாளர் அம்ஜத் கான், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை: அண்ணாமலை ஆவேசம்..
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.
திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?
இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் நான்கு முனை போட்டி!-தனித்து களம் இறங்கும் சீமான்! சூடு கிளப்பிய தமிழ்நாடு தேர்தல் களம்..
by Askar
written by Askar
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியுள்ளது.அதே பலத்துடன் இந்த முறையும் தி.மு.க. கூட்டணி களம் இறங்குவதால் அது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு எதிராக பாரதிய ஜனதா பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை அமைத்துள்ள அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளது.இப்படி தேர்தல் களத்தில் 3 அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. 3 அணிகளுக்கும் நாங்கள் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களம் காண்போம் என்று நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.
You must be logged in to post a comment.