48
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒத்தியை நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு அணிவகுப்பு போன்றவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் துணை ராணுவப்படையுடன் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.