ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா பொட்ட கானிபள்ளி விவசாயி ஆனந்த் (28) 15 அடிமரத்திலிருந்து தவறி விழுந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தனர். அதன்படி கல்லீரல், சிறுநீரகம், கண்தானமாக பெறப்பட்டது.
Category:
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் திருமதி.இளமதி. சிறுவன் வீட்டிற்கே சென்று வாழ்த்து.
by mohan
written by mohan
திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், பல்வேறு குர்ஆன் வசனங்கள், ஐந்து நிமிடங்கள் தலைகீழாக நிற்பது, ஒற்றைக் கையில் சைக்கிள் ஓட்டுதல், பல நிறங்களையும் பல்வேறு தலைப்புகளையும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அரபி, ஆகிய நான்கு மொழிகளில் கூறியும், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 26.35 செகண்டில் கூறியும் மேலும் இது போன்ற கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தனது தனி திறன் கொண்டு அறிந்து ஒப்புவித்து உலக சாதனை படைத்து “கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இதனை அறிந்த திண்டுக்கல் மேயர் திருமதி.இளமதி அவர்கள் திண்டுக்கல் மதார்பாவா தெருவில் வசித்துவரும் சிறுவன் முகம்மது இக்ராம் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.மேலும் எனது ஊரைச் சேர்ந்த சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று திண்டுக்கல்லுக்கு மாபெரும் பெருமையை தேடி தந்துள்ளார் எனக்கூறினார்.சிறுவனின் தாய் நவ்ரின் தந்தை கிதர் முகமது இருவரையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டலின் படியும் திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்ஙி பாடுபடுவோம் என கூறினார்.இது சம்பந்தமாக சிறுவன் முகம்மது இக்ராமின் குடும்பத்தினர் கூறியதாவது;பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் வளர்ந்து விடுவார்கள் அப்படி அல்லாமல் அவர்களின் திறமைகளை ஆற்றல்களை பெற்றோர் கண்டறிந்து அதன் பக்கம் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும்; மதிப்பிற்குரிய திண்டுக்கல் மேயர் திருமதி. இளமதி அவர்கள் வீட்டிற்கு வந்து பாராட்டுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளது சிறுவனின் வளர்ச்சிக்கு மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கம் நிகழ்வின் போது நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், அதனை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இளவேலங்கால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நடுகற்கள் பற்றியும் மாணவிகளிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மரபு நடைபயணமாக கிருஷ்ணாபுரம் கோயில் மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் ஏதீஷ்குமார் அகழாய்வு பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது ஆய்வு மாணவர்கள் அருண் குமார் மற்றும் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர். இப் பயிலரங்கம் மற்றும் மரபுநடை பயணத்தில் ராணி அண்ணா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் உமாதேவி, சுதாமதி, சகாயமேரி ஆகியோர் உடன் வந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமண விழாவில் வரும் மொய் பணம் அனைத்தையும் ஆதரவற்றோருக்கு வழங்கிய தம்பதியினர்.
by mohan
written by mohan
மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை மதுரை பாலரங்காபுரம் இதில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது.இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் மொய்யை குறி வைத்தே நடத்தப்படுகிறது.இச்சூழலில் மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.திருமண விழாவுக்கு நாமும் சென்றோம். மொய் எழுதும் மேஜை அருகே காகித உறைகளையும் பேனாவும் வைத்திருந்தார்கள். மொய் வைக்க நினைபவர்கள் தங்கள் பெயரை எழுதி தொகையை உறைக்குள் வைத்து அருகிளுள்ள பானைக்குள் போட்டு சென்றார்கள். யார் எவ்வளவு பணம் என்பதையும் குறிப்பிடவில்லை. அவர்கள் வைத்த மொய்யை நோட்டிலும் எழுதவில்லை.இதுகுறித்து மணமகளின் தந்தை ஆத்மராவிடம் பேசினோம், “என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதுக்கு ஒத்துக்கல. இத நான் பப்பளிசிட்டிக்காக பண்ணல, மன திருப்திக்காகவும் இதைப்பார்த்து இன்னும் பல பேர் ஆதரவற்றோர்களுக்கு உதவ முன் வரணும் என்கிற எண்ணத்தாலும்தான். எவ்வளவு மொய்ப்பணம் வந்தாலும் அதை மொத்தமா கொடுக்கப் போறோம்.” என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்மதுரை விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் பேட்டி.|உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்துள்ளன.இந்தியாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.கொரானா குறைந்ததால் தடுப்பூசி போட வேண்டாம் என்பதில்லாமல்தடுப்பூசி போட்டதால் தான் கொரானா இல்லை என்ற நிலை
ஏற்பட்டது.தடுப்பூசி போட்டதால் தான் எத்தனை அலை வந்தாலும் கொரானாவை கட்டுப்படுத்த முடியும்.வரும் 27ம் தேதி முதல் புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது.அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்து எல்லோரும் அரசு பள்ளிகளை நோக்கி வர வேண்டும்.அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்தப்படுவதை போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்ற கேள்விக்கு,*புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது. என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:மதுரை:மதுரை வக்பு வாரியக் கல்லூரி வாசலில்,ஹிஜாப் இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு கொடுத்த உரிமை , ஹிஜாப் தனிமனித சுதந்திரம் போன்ற முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டம். நடத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகைகளை வழங்கவேண்டும்: முன்னாள் அமைச்சர்.
by mohan
written by mohan
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு மட்டும் 4200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது .தற்போது தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய உதவிதொகை நிறுத்தப்பட்டுள்ளது , போர்கால அடிப்படையில் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கைஏழை , எளிய சாமானிய மற்றும் ஆதரவற்றோர்களுக்காக முதியோர் ஓய்வூதிய உதவித்தொகைத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது . இதில் இலங்கை தமிழர்கள் உட்பட 9 பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது . ஆரம்பத்தில் 20 ரூபாயாக தொடங்கப்பட்டது கடந்த 2011 – ம் ஆண்டு அம்மா ஆட்சிக்காலத்தில் 500 ரூ வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதிய உதவித்தொகையை ரூ 1000 மாக உயர்த்தி வழங்கினார் .கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் 12 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது . இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 1200 கோடியாகும் . ஆனால் அம்மா ஆட்சிக்காலத்தில் 32 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது . இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 4200 கோடியாகும் . ஆக கூடுதலாக 3000 கோடி நிதி அம்மா ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டது என்பதை அரசு ஆவண அடிப்படையில் இத்துறையின் முன்னாள் அமைச்சர் என்கிற முறையில் நான் தெரிவிக்க விரும்புகிறேன் .அதுமட்டுமல்லாது இத்திட்டத்திற்காக அம்மா ஆட்சிக்காலத்தில் கட்டணமில்லா தனி சேவை மையம் உருவாக்கபட்டது . இதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது . அதேபோல் தகுதி இல்லாதவர்களுக்கு உரிய காரணங்களும் தெரிவிக்கப்பட்டது . மேலும் ஆதார் அட்டைகள் இதன் மூலம் இணைத்து இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்டன . மேலும் இறந்தவர்கள் , போலியான நபர்களை நீக்கம் செய்யப்பட்டது . குறிப்பாக மாண்புமிகு எடப்படாடியார் தலைமையிலான ஒ.பி.எஸ் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அம்மா ஆட்சிக்காலத்தில் பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டது . 50,000 ரூபாய் சொத்து மதிப்பு இருந்ததை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் , ஆண் வாரிசு இருந்தாலும் வறுமையில் இருந்தால் வழங்கலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் 60 % குறைபாடு இருந்ததை 40 % குறைபாடு இருந்தாலும் வழங்கலாம் என்று விதி தளர்த்தப்பட்டது .மேலும் அம்மா ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் 38 வருவாய் மாவட்டங்களில் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது . அதன் மூலம் கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க அரசானை வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . மக்களை தேடி அரசு என்ற அம்மா சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 62 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது . தற்போது உள்ள அரசு தகுதியுள்ள ஏழை எளிய மக்கள் பெற்று வந்த முதியோர் உதவித்தொகையை காரணம் இல்லாமல் நிறுத்தி வருகிறது . கடந்த 10 வருடங்களாக பெற்றுவந்தோர்களுக்கு தற்போது நிறுத்தி வைக்கபட்டுள்ளது குறிப்பாக கடந்த தி.மு.க தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ரத்து செய்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது . ஆகவே முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடியார் ஒ.பி.எஸ் . ஆகியோர்களின் வழிகாட்டுதல்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.அரசு போர்கால நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள அனைவருக்கும் மீண்டும் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான்கு வழிச்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு; கடையநல்லூரில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்..
by mohan
written by mohan
விவசாய நிலங்களில் நான்கு வழிச்சாலை அமைத்திட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருமங்கலம் தொடங்கி கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள்,விவசாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நான்கு வழிச்சாலை திட்டம் திருமங்கலம் முதல் ராஜபாளையம், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1147 கோடி ரூபாய் செலவில் 146. 98 கிலோ மீட்டர் வரை செயல்படுத்த பட உள்ளது. நன்செய் நிலங்கள், வாழை, எலுமிச்சை, நெல்லி என பல்வேறு விவசாய பயிர்கள் செழித்து வளரும் இப்பகுதியில் சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள், 3 இலட்சம் தென்னை மரங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுகின்றது. எனவே விவசாய நிலங்கள் பாதிக்காதவாறு இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றிடவும், விவசாய நிலங்களை பாதுகாத்திடவும் அனைத்து விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் யாசர் கான் தலைமை தாங்கினார், மாவட்ட பொதுச் செயலாளர் சிக்கந்தர் ஒலி, மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் சர்தார் அரபாத், இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹக்கீம் , ஷேக் முஹம்மது ஒலி, நைனா முஹம்மது @கனி, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது,மாவட்ட துணைச்செயலாளர் தாஜுதீன், கடையநல்லூர் நகர செயலாளர் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, விவசாய அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லாஹ்,விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சாரதி, மாடசாமி, மீரா கனி, ரெசவு மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். சட்டமன்ற தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் நினைவு நாள் இன்று (மார்ச் 17, 1853).
by mohan
written by mohan
கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் செக்கோசுலவாக்கியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது கணிதம், இயற்பியல், இயந்திரவியல் மற்றும் வானியல் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1848-ல் வியன்னாவுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். மரபியலின் தந்தை எனப்படும் கிரிகொர் மென்டல் வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.டாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன. வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இவருடைய பெயரைப் பலர் அவ்வாறே தொடருகின்றனர்.ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள பொது ஒலிகள் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும். ரேடார் (Radio Detection And Ranging) – டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வேகமாக செல்லும் வாகனத்தை நோக்கி மைக்ரோ அலைகள் அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் இடப்பெயர்ச்சியின் மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவியுடன் வானூர்தி உள்ள உயரம், வேகம், நெருங்கும் வானூர்தியின் தொலைவு போன்றவை கணக்கிடப்படுகின்றன. வௌவால்கள் மீயொலியை உருவாக்கும் பண்பு கொண்டவை. இரை மற்றும் தடைப் பொருள்களில் பட்டு எதிரொலிப்பு அடையும் மீயொலிகளில் ஏற்படும் டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வௌவால்கள் இரையின் தொலைவு மற்றும் இயக்கத்தை அறிந்துகொள்கின்றன.இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல், வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட டாப்ளர், மார்ச் 17,1853ல் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று (மார்ச் 17, 1962).
by mohan
written by mohan
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று (மார்ச் 17, 1962).கல்பனா சாவ்லா (Kalpana Chawla) மார்ச் 17, 1962ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)ல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். 1984ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். STS-87ன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.
STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர். முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர். 1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது. மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள், அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor), நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal), நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal). கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது. பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் ‘கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ‘ என்று நிறுவியுள்ளது.ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர். மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது. நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது. இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது. இதழ் மற்றும் புதினத்தில் ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா – கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று. நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக், தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிப்ரவரி 1, 2003ல் தனது 40வது அகவையில் விண்கலம் வெடித்துச் விண்ணில் கலந்துள்ளார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளிடம் செய்து காட்டினர்.
by mohan
written by mohan
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி, திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளிடம் செய்து காட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் 12 முதல் 14 வயது வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், கடந்த 03.01.2022 முதல் அனைத்து நாட்களிலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள சிறார்களுக்கு மருத்துவ குழு மூலம் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ங்கம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் . கு.ராஜேந்திரன், செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் உத்தரவின் பேரிலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி செங்கம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளி 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் குழு மூலம் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கல்வித்துறை சார்பில் வட்டார கல்வி அலுவலர் உதயகுமார் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதேபோல் மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி மருத்துவ குழு செவிலியர் கலைச்செல்வி மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும்மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருபகுதியாக தேவசேரி ஊராட்சியின் பொது சாவடியில் “அங்கக வேளாண்மை-இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி” என்னும் தலைப்பில் தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர்அழகுமணி என்ற சசி, கொய்யா விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், திரவியம் ஆகியோரின் உதவியுடன், பொது கூட்டம் நடத்தினர்.அக்கூட்டத்தில், வேளாண் பிரச்னைகள் குறித்து , விவசாயிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.சமூக வரைபடம், சிக்கல் மரம், தரவரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகள் பலவற்றை அவ்வூர் மக்களை கொண்டு வீதிகளில் வரையச்செய்தனர். இச்செயல்பாட்டில், அவ்வூர் மக்களும் வேளாண் மாணவிகளுடன் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பேரூராட்சியில் சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த.வார்டு கவுன்சிலர் .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் எம் வி எம்.மருது பாண்டியன் தனது சொந்தச் செலவின் மூலம் ஜேசிபி வாகனத்தை கொண்டு குப்பைகளை அகற்றி வருகிறார். அகற்றிய குப்பைகளை உடனடியாக டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இரட்டை அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் விரைவாக சுகாதாரம் பேணி காக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எட்டாவது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அஹ்ரகாரம் கோவிந்தம்மாள் தெரு ரயில்வே பீடர் ரோடு வட்டப் பிள்ளையார் கோவில் மெயின்ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பராமரிப்பின்றி இருந்த சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சரி செய்து கொடுத்தார் வெற்றி பெற்றவுடன் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வார்டு பொது மக்களுக்கு தனது சொந்த செலவில் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுத்த தொழிலதிபர் எம்விஎம் மருதுபாண்டியன் அவர்களை வார்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சந்திரயான் 3 ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் தகவல்.
by mohan
written by mohan
மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான பிரத்தியேக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும்குயின் மீரா சர்வதேச பள்ளியில ஆலோசனைக்குழு உறுப்பினருமான வெங்கட்ராமன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாடினார்பின்பு.இந்திய விண்வெளி மையத்தின் பாரம்பரியம் குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்தார் இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் இதில் பள்ளியின் தலைவர் சந்திரன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் நிர்வாக இணை இயக்குனர் செல்வி ஷீபா மற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த விமலநாதன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இரவு அவரது வீடு புகுந்து சில மர்ம நபர்கள் வீடு பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 45 சவரன் தங்கநகை திருடி சென்றுள்ளனர் என்பது வீட்டிற்கு வந்து பார்த்த போது தெரிய வந்துள்ளது.இதனைதொடர்ந்து மதுரை திலகர் திடல் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவுபடி தெற்கு துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் உதவி ஆணையாளர் உதவி ஆணையாளர் மகேந்திர பிரசாத் மற்றும் பழனிகுமார் ஆலோசனைப்படி குற்றப்பிரிவு தனிப்படை சார்பு ஆய்வாளர் மணிக்குமார் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சகாய கிறிஸ்டி அமலநாதன் ஜெகதீசன் சுந்தரம் இதய ராஜா முதல் செந்தில் இளஞ்செழியன் ஆகியோர் உதவியுடன் நிலை காவலர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் மதுரை சப்பாணிகோவில் சந்தை சேர்ந்த பொன்மணி, (வயது 19) மற்றும் காஜா தெருவை சேர்ந்த சுந்தரேசன், (வயது19)என்பது கண்டறியப்பட்டு இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருடுபோன நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தினர்.மேலும் மதுரை மாநகர காவல்துறை நகரின் 2719 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 12,200 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு நகரம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் CCTV- யின் பங்கு பெரும் உதவியாக இருப்பதால் , பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் CCTV கேமாராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அகல்விளக்கு விலை 5ரூபாயில் இருந்து 10ஆக உயர்வு – பக்தர்களிடம் கருத்துகேட்பு.
by mohan
written by mohan
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக நெய் விளக்கு,எண்ணெய் விளக்கு,எள் விளக்கு ஐந்து ரூபாய்க்கு விற்பனை* விலைவாசிக்கு ஏற்ப விளக்குகளில் விலையை மாற்ற கோவில் நிர்வாகம் திட்டம்* கோயில் வளாகத்திற்குள் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் விளக்குகள் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய பொதுமக்களிடம் கோவில் நிர்வாகம் கருத்து கேட்பு* பொது மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் வருகின்ற 22ஆம் தேதிக்குள் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு* ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் முதல் 3 லட்சம் விளக்குகள் கோவில் வளாகத்திற்குள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பறக்கும் கேமரா மூலம் ரவுடி கைது;தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு..
by mohan
written by mohan
பொதுமக்களை ஆயுதத்துடன் அச்சுறுத்திய ரவுடியை டிரோன் மூலம் கைது செய்த தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்ற நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் தென்காசி பச்ச நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும், அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாகவும், அதில் பீர்முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேற்படி வழக்கு சம்பந்தமாக தென்காசி காவல்துறையினர் சாகுல்ஹமீது என்பவரை தீவீரமாக தேடி வந்தனர். எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது. மேலும் அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களை மிரட்டி வருவதாக தகவல் வந்ததையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை உடனடியாக கைது செய்ய ஆலோசனை செய்து பறக்கும் கேமரா(டிரோன்) வசதியுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர்கள் முத்துராஜ், மாரியப்பன், குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்ச நாயக்கன் பொத்தை அருகில் சென்று டிரோன் மூலம் பச்ச நாயக்கன் பொத்தையில் அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை சினிமா பாணியில் மிகுந்த சிரமத்துடன் கைது செய்தனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து துணிச்சலாக கைது செய்த தென்காசி காவல்துறையினரின் இந்த துணிவு மிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். குற்றவாளியை திறம்பட கைது செய்த தென்காசி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா, சினேகா, ஸ்ரீநிதி, திவ்யா, லூசியா மேரி ,சுவாதி ஆகியோர் வலையப்பட்டியில் கால்நடை முகாமில் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை நகரமன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி அம்மா உணவகம் செயல்பட்டு வந்த நிலையில் உணவகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என உசிலம்பட்டி நகரமன்ற தலைவர் சகுந்தலா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார் இதில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.