மதுரை காமராஜர் பல்கலைக் கழக அலுவலக ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை குறைக்கவும் 2013ம் ஆண்டு முதல் பெற்றுவந்த ஊதியத்தில் பிடித்தம் செய்யவும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக அலுவலக ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அலுவலக நிரந்தர பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே பல்கலைக்கழக நிதி குழு ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை ஒப்புதலோடு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த 22 தேதி நடைபெற்ற ஆட்சி குழுக் கூட்டத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யவும் மேலும் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தில் பின் தேதியிட்டு பிடித்தம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் அலுவலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை கண்டிக்கும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த அலுவலக பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சிமன்ற குழுவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் அலுவலக பணியாளர்களுக்கு வரும் ஏப்ரல் முதல் ஊதியத்தை குறைக்கவும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றிய ஆட்சிமன்ற குழு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் அடிமட்ட ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறக் கூடிய ஒரு நிலையில் உள்ளதாகவும் எனவே கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதி குழு கூட்டத்தில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது மேலும் 2. 2 .2018 ஆண்டு தீர்மானத்தின்படி குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எனவே பல்கலைக்கழக நிர்வாகம் ஊதிய மறு நிர்ணயம் மற்றும் ஊதியப் பிடித்தம் செய்வது என்பது நிதி குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்திற்கு எதிரானது எனவும் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள தீர்மானத்தின்படி ஊதிய விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும் என பல்கலைக்கழக அலுவலக ஊழியர்கள் போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்..
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.