மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மண்டேலா நகர் பூந்தோட்ட காலனியில் சொர்ண வராகி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலில் கடந்த நான்கு வருடங்களாக பூஜைகள் நடந்து வருகின்றது.இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பத்ரி என்பவர் தனது இடத்தில் கோவில் அனுமதியின்றி கட்டியதாக கூறி சொர்ண வராகி அம்மன் கோவில் சிலையை உடைத்து அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.மேலும் அங்கிருந்த கோயில் மணி மற்றும் பூஜை சாமான்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு கிருஷ்ணன் , மலைச்சாமி, இந்து முன்னணி மாவட்ட செயலளார் சதிஷ், திருப்பரங்குன்றம் செயலாளர செல்வகணேஷ் மற்றும் 8 பெண்கள் உற்பட 20 பேர் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று இந்து அமைப்புகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிட செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.