Home செய்திகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு பைக்குகளை அப்புறபடுத்த நடவடிக்கை.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு பைக்குகளை அப்புறபடுத்த நடவடிக்கை.

by mohan

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் பழைய பஸ் நிலையத்தை நேற்று 29-ம் தேதி மீண்டும் ஆய்வு செய்தார்.கடந்த வாரம் பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் ஓட்டல்கள், பஸ் நிலையபகுதியில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் 2 சக்கர வாகனங்களை அப்புறபடுத்த உத்தரவிட்டார். அவை சரியாக கடைபிடிக்கவில்லை என ஆட்சியருக்கு புகார் சென்றது.இதனையெடுத்து நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் விதிமீறி கழிப்பறை பகுதி எதிரில் இருக்கும் 2 சக்கர வாகனங்களை அப்புறபடுத்த மீண்டும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com