11
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் பழைய பஸ் நிலையத்தை நேற்று 29-ம் தேதி மீண்டும் ஆய்வு செய்தார்.கடந்த வாரம் பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் ஓட்டல்கள், பஸ் நிலையபகுதியில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் 2 சக்கர வாகனங்களை அப்புறபடுத்த உத்தரவிட்டார். அவை சரியாக கடைபிடிக்கவில்லை என ஆட்சியருக்கு புகார் சென்றது.இதனையெடுத்து நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் விதிமீறி கழிப்பறை பகுதி எதிரில் இருக்கும் 2 சக்கர வாகனங்களை அப்புறபடுத்த மீண்டும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
You must be logged in to post a comment.