ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் சென்ற பாராளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Category:
மாவட்ட செய்திகள்
தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது!- திருச்சியில் தெறிக்க விட்ட முதலமைச்சர்..
by Askar
written by Askar
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் சிறுகனூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கும் வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி என்றாலே திருப்பு முனைதான். இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று இந்தியாவிற்கே நாம் திருப்பு முனையை ஏற்படுத்த போகிறோம். புதிய வரலாற்றை நாம் எழுத போகிறோம்.
பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஒன்றியத்தில் அமரவை வைப்பதற்காக நடக்கக்கூடிய தேர்தல்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லை என்றால் வெளிநாட்டில்தான் இருப்பார்
தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது. நான் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. முடியாது.
தேர்தலுக்கு தேர்தல் பா.ஜ.க நடத்தும் கபட நாடகத்தை தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களும் இனி நம்ப மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்
இப்போது நடைபெறும் தேர்தல் யுத்தம் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க-வுக்குமானது அல்ல. பாசிச பா.ஜ.கவுக்கும் மக்களுக்கும் நடைபெறும் யுத்தம். இந்த தேர்தல் யுத்தத்தில் வெற்றிப் பெறப் போகிறவர்கள் மக்கள்தான். பாசிச பா.ஜ.க மண்ணோடு மண்ணாகும்.
10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றா இரண்டா?. அதற்கு இமாலய எடுத்துக்காட்டுதான் தேர்தல் பத்திரங்கள் ஊழல். இந்த ஊழல்கள் குறித்து நாம் மட்டுமல்ல இந்திய மக்களே கேள்வி கேட்டாளும் அவர்களிடம் பதில் இல்லை.
PM Cares என்ற பெயரில் பா.ஜ.க மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் ஊழலை முறையாக விசாரித்து அம்பலபடுத்தப்படும்.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துவிட்டுதான் இங்கு வந்து இருக்கிறேன். நம்முடைய பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிறோம். இது நிச்சயம் குடியரசு தலைவர் மாளிகையை அடையும்
பெங்களூருவில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசும் அளவிற்கு பா.ஜ.க வெறுப்பு தீயை வளர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் என்ன வன்முறையாளர்களா?. பயங்கர வாதிகளா?
ஒரு ரூபாய் கொடுக்கும் எங்களுக்கு ஏன் 29 பைசா கொடுக்கிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இதை கேட்டால் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று ஆணவமாக கூறுகிறார். இந்த ஆணவம் தான் பா.ஜ.கவை அழிக்கபோகிறது. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அது அவர்களது உரிமை.
மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவது கடமை. அதைத்தான் தி.மு.க அரசு சரியாக செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்யும் அந்த கூட்டத்தில் போய் பிச்சை என்று நீங்க பேசுவீங்களா?. ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?. மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதியமைச்சர் பதவி? என தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 11 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த நிலையில்; பாலியல் பலாத்காரம் செய்து கொலை என அதிர்ச்சி தகவல்..
by Askar
written by Askar
மதுரை கூடல் புதூர் பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தான் குடியிருந்து வரும் வீட்டில் கழிவறையில் மயங்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களால் நேற்று மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க கூடும் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டில் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை சற்று நேரத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த பிரேத பரிசோதனையில் முதற்கட்டமாக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது;
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை போக்சோ மற்றும்
கொலை வழக்காகவும் மாற்றப்படும். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
by Askar
written by Askar
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்முறை எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காமல் தனித்துப் போட்டியிடுகிறது அக்கட்சி.
எனினும் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கக் கோரிய கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்கவும் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி அனுப்பிய சின்னங்ளை ஆராய்ந்து அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -22
( கி.பி 1299-1922)
சுல்தான் இரண்டாம் முராத் அவர்கள் தனது மகனுக்கு முகம்மது என்று பெயரிட்டார்.
தனது மகனை வளர்த்து பராமரிக்கும் பொறுப்பை “சேக் அல் சம்சுதீன்”என்ற அறிஞர் இடம் ஒப்படைத்தார்.
இவர் முகம்மதுவுக்கு
அல்குர்ஆன்,
அல் ஹதீஸ்,
இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல்,
விண்ணியல்,
போர் தந்திரங்கள்,
வரலாறு என அனைத்து துறைகளையும் போதித்தார்.
அரபு,பாரசீகம், துருக்கி, லத்தீன், மற்றும் கிரேக்க மொழிகளையும் முகம்மது கற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
முகம்மது அவர்கள் இயற்கையிலேயே
அன்பு,பணிவு,
மார்க்கப் பற்று போன்ற நல்ல குணங்களை உடையவராக இருந்தார்.
கவித்துவ புலமையும் பெற்றிருந்தார்.
வாள் பயிற்சி, குதிரையேற்றம்,
போர்நுணுக்கங்கள் போன்ற
போருக்கான
பயிற்சிகளையும்
கற்றிருந்தார்.
சிறுவயது முதலே தனது தந்தையுடன் போர்களிலும் பங்கு பெற்றார்.
முன்னர் இரண்டாம் முராத் 12 வயதே நிரம்பிய தனது மகன் முகம்மதை உஸ்மானிய பேரரசின் மன்னராக அறிவித்துவிட்டு அவர் ஓய்வெடுக்க சென்று விட்டார்.
இந்த சூழலில் மன்னர் சிறுவராக இருந்ததை அறிந்த ரோம பேரரசு உஸ்மானியர்களோடு
போருக்கு படை எடுத்து வந்தது.
சிறுவயது மற்றும் போதிய அனுபவம் இல்லாத முகம்மது, தனது தந்தையை
மீண்டும் வந்து பொறுப்பேற்று போரை நடத்த செய்தி அனுப்பினார்.
இரண்டாம் முராத் அவர்கள் இப்போது நீதான் மன்னர் நீயே போரை நடத்து நான் வரமுடியாது என பதில் கடிதம் அனுப்பினார்.
ஆனால் புத்திசாலித்தனமாக
மன்னர் முகம்மது அவர்கள் தனது தந்தைக்கு மீண்டும்
மன்னர் முகம்மது கட்டளையிடுகிறேன்
வந்து போரை நடத்துங்கள் என கடிதம் எழுதினார்.
மறுக்க முடியாமல் மீண்டும் பொறுப்பேற்று ரோமப்படைகளை
இரண்டாம் முராத் அவர்கள் தோற்கடித்தார்.
போர் வெற்றிக்குப் பிறகு தனது தந்தை இரண்டாம் முராத் அவர்களை மன்னராக மீண்டும் பொறுப்பேற்க வைத்தார் முகம்மது அவர்கள்.
சிறிது காலத்தில் இரண்டாம் முராத் அவர்கள் மரணமடைந்தார்.
பிறகு உஸ்மானிய பேரரசின் மன்னராக தனது 18 வயதில் மீண்டும் முகம்மது பொறுப்பேற்றார்.
உலகின் சிறந்த பத்து மன்னர்களில் ஒருவராக பேரரசர் முகம்மது போற்றப்படுகிறார்.
இந்த முறை காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வென்று முழு துருக்கியையும் கையகப்படுத்தி
உஸ்மானிய பேரரசை
உலகின் முதல் நிலை பேரரசராக கட்டமைக்க திட்டமிட்டார்.
போருக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
போருக்கு பெரும் படை திரட்டப்பட்டது.
கடலில் போர் கப்பல்களை
ஓடவிட்டு ரோமானிய கப்பல்களை சுற்றி வளைத்தார்.
ரோமானிய கடல்படையை ஊடுறுவ இவர் வகுத்த திட்டம் இன்றளவும் ஆச்சரியமானது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்..
by Askar
written by Askar
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். எனினும், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவ்வாறு செய்த இயலாது என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாகக் கண்டித்தது.
ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றும் ஜனநாயக முறைப்படி மனுதாரருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வர் செய்த பரிந்துரையை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தது.
இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறவிப்பையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..
சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ.கே.டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து அதிமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் முதலாவதாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் காளிதாஸ்,, அரியூர் ராதாகிருஷ்ணன், எம் வி பி ராஜா, பேரூர் செயலாளர்கள் முருகேசன், டாக்டர் அசோக் குமார், அழகுராஜா, குமார் மற்றும் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார் மேலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் உட்பட மாநில, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
written by Abubakker Sithik
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது.
டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
சேலம் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை இயற்கை ஆர்வலர்..
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கி பேசினார். நம் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரங்களை நாம் நட வேண்டும். குறைந்த பட்சம் மாணவ மாணவிகள் தங்கள் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் மரங்கள் வளர்ப்பதால் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாதாகைகள் வழங்கி சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசிக்க மாணவ மாணவிகள் பின் தொடர்ந்து வாசித்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 25.03.2024 திங்கள் கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும் அன்று வழக்கம் போல் வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act -1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது, இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்டுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (06.04.2024) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்;மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்!-அதிரடியாக வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..
by Askar
written by Askar
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
- ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
- மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
- நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
- தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தல், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்..
தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்..
- 1.திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா,
- 2. அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு,
- 3.ஆரணி முனைவர் அ.கணேஷ் குமார்,
- 4.கடலூர் தங்கர் பச்சான்,
- 5. மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின்,
- 6. கள்ளக்குறிச்சி இரா.தேவதாஸ் உடையார்,
- 7. 10. தருமபுரி அரசாங்கம்,
- 8.சேலம் ந.அண்ணாதுரை,
- 9. விழுப்புரம் முரளி சங்கர்,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்!-சுகாதரத்துறை அறிவுரை..
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தட்டம்மை நோய்க்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும்.சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுமக்கள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடித்தால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடை காலத்தில் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஸ்ரீதர் வாண்டையார், கருணாஸ் உள்ளிட்ட 8 கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு
by Askar
written by Askar
ஸ்ரீதர் வாண்டையார், கருணாஸ் உள்ளிட்ட 8 கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்தனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர். இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ”முக்குலத்தோர் புலிப்படை” கட்சி தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் கருணாஸ் உறுதி அளித்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள், ‘தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் நிறுவனர்-தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், ‘அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின்’ நிறுவனர்-தலைவர் திருச்சி பொன்.முருகேசன் மற்றும் நிர்வாகிகள், ‘இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச் சங்கத்தின்’ அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன் மற்றும் நிர்வாகிகள், ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரவிந்த் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை: பதட்டமான சூழ்நிலையில் டெல்லி..
by Askar
written by Askar
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது.
ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், இன்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை இன்று கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் மந்திரியான அதிஷி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அமலாக்க அதிகாரிகளின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, அதனை அதனை சட்டப்படி செல்லாதது என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..
ஓபிஎஸ்!
இராமநாதபுரம்,
அமமுக!
தேனி,
திருச்சி,
தமாகா!
ஈரோடு,
ஸ்ரீபெரும்புதூர்,
தூத்துக்குடி,
பாமக!
காஞ்சிபுரம்,
அரக்கோணம்,
தருமபுரி,
ஆரணி,
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி,
சேலம்,
திண்டுக்கல்,
மயிலாடுதுறை,
கடலூர்,
பாஜக!
திருவள்ளூர்,
வடசென்னை,
மத்திய சென்னை,
தென் சென்னை,
திருவண்ணாமலை,
கிருஷ்ணகிரி,
சிதம்பரம்,
நாகப்பட்டினம்,
தஞ்சாவூர்,
நீலகிரி,
கோயம்புத்தூர்,
பொள்ளாச்சி,
திருப்பூர்,
நாமக்கல்,
கரூர்,
மதுரை,
விருதுநகர்,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
ஐ.ஜே.கே. (தாமரை)
பெரம்பலூர்,
தமமுக (தாமரை)
தென்காசி,
புதிய நீதிக்கட்சி ( தாமரை)
வேலூர்,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தாமரை)
சிவகங்கை,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!-எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
by Askar
written by Askar
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.விஜய பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக சார்பில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி..
by Askar
written by Askar
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி..
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு.
- தென் சென்னை:தமிழிசை சவுந்தர்ராஜன்
- கோவை :அண்ணாமலை
- கன்னியாகுமரி:பொன். ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி:நயினார் நாகேந்திரன்
- வேலூர் :ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)
- மத்திய சென்னை:வினோத் பி.செல்வம்
- நீலகிரி(தனி தொகுதி):எல்.முருகன்
- கிருஷ்ணகிரி:சி.நரசிம்மன்
- பெரம்பலூர்:பாரிவேந்தர் (ஐ.ஜே.கே
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி..
- ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார்
- வேலூர் – எஸ்.பசுபதி
- தருமபுரி-அசோகன்
- திருவண்ணாமலை – கலியபெருமாள்
- கள்ளக்குறிச்சி – குமரகுரு
- திருப்பூர் – பி.அருணாச்சலம்
- நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்
- கோவை – சிங்கை ராமச்சந்திரன்
- பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
- திருச்சி – கருப்பையா
- பெரம்பலூர் – சந்திரமோகன்
- மயிலாடுதுறை – பி.பாபு
- சிவகங்கை – சேவியர்தாஸ்
- தூத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி
- திருநெல்வேலி -சிம்லாமுத்துச்செல்வன்
- கன்னியாகுமரி – பசுலியான் நசரேத்
- புதுச்சேரி – தமிழ்வேந்தன்
- விளவங்கோடு (இடைத்தேர்தல்) – யு.ராணி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடபழனி, ஆற்காடு சாலையில்காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..
by Askar
written by Askar
வடபழனி, ஆற்காடு சாலையில்
காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..
சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாக்க தலைவர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ் மணிவண்ணன் செல்வராஜ், மற்றும் இக்குழுமத்தின் இணைநிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய மருத்துவமனையில் 9 உயர்சிகிச்சை நேர்த்தி மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு நிகரற்ற மருத்துவ சேவை வழங்குவதில் இக்குழுமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
250 படுக்கை வசதிகளைக் கொண்ட இம்மருத்துவமனையில், 75 படுக்கைகளுடன் கூடிய உயிர்காக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவு (CCU), 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் லேமினார் ஃபுளோ-உடன் கூடிய 6 மாடுலர் அறுவைசிகிச்சை அரங்குகள் உட்பட அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து பேசிய ரஜினி காந்த்
நான்காம் நிலை உயர்சிகிச்சை வழங்குநராக வடபழனி – காவேரி மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டிருப்பது, மிக உயர்ந்த நிலையில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் காவேரி மருத்துவமனைகள் குழுமம் காட்டும் அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது. தனிச்சிறப்பான சிகிச்சையையும், மிக நவீன உடல்நல பராமரிப்பு தீர்வுகளையும் வழங்குவதில் உயர்மேண்மை நிலையை எட்டவேண்டும் என்பதில் இம்மருத்துவமனை காட்டி வரும் பொறுப்புறுதி, புதுமையான சிகிச்சை பராமரிப்பின் நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக இதன் நிலையை வலுப்படுத்துகிறது. என்று இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
You must be logged in to post a comment.