தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று அங்கு இருக்கும் பாடத்திட்டங்கள், பாடபிரிவுகள், கல்விகட்டணம் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுவதால் மாணவர்கள் கலந்து கொண்டு எல்லா விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு ஸ்கூட்டர், லேப்டாப், செல்போன், கல்வி உதவித்தொகை 5000 என்று ஏராளமான பரிசு காத்து இருக்கின்றன. மேலும் 12 ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு முழுக்கட்டணம் சலுகை, பெற்றோர் இல்லாதவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைப்பு, படித்து முடிந்தவுடன் பெரிய நிறுவனங்களின் உடனடி வேலை வாய்ப்பு பேன்ற பல்வேறு சலுகைகள் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இந்த அறிய வாய்பை மாண மாணவிகள் பயன்படுத்தி மாபெரும் கல்வி கண்காட்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவித்துள்ளனார் .
Category:
தேசிய செய்திகள்
கீழக்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கீழக்கரையில் போதைப் பொருள் வியாபாரிகள் குறிப்பாக 18 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை மூளை செலவு செய்து அவர்களுக்கு தேவையான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை வழங்கி அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையில் இரு வாலிபர்களை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டது கீழக்கரை மக்களிடையே பெரும் பதட்டத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் உங்கள் அருகில் உள்ளவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் நெட்டை இரசு நாற்றுகளும் 3000 எண்கள் விற்பனைக்கு நெட்டை x குட்டை இரக நாற்றுகளும் ஆக மொத்தம் 24500 நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ,ஒரு எண் நெட்டை இரக நாற்று ரூ.60/- எனவும் ஒரு எண் நெட்டை x குட்டை இரக நாற்று ரூ.125/- விலையில் விற்கப்படும் என்றும் ,தென்னை நாற்று விநியோகம் தொடர்பான விபரங்களுக்கு 9080246728 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் 4 வருடங்களில் காய்பிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!
by Baker BAker
written by Baker BAker
இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க இந்நிறுவனம் இலக்கு நிரணயித்துள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தேசிய உள்நாட்டு குழாய் மூலம் இயற்கை வாயு இயக்கத்தை மே 3ம் தேதி வரை நீட்டித்து. ராமநாதபுரத்தில் உள்ள வீடுகளுக்கு இந்த எரிவாயு வழங்கும் பணியை ஏஜி.பி பிரதம் துரிதப்படுத்தி உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்புத் திட்டத்தில் ஒரு மாத இலவச எரிவாயு செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவு கட்டணம், வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகைக் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஏஜிஃபி பிரதம் வழங்குகிறது புதிய நுகர்வோருக்கு பதிவுக் கட்டணத் தொகையான 354 ரூபாய் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான 6000 ரூபாயை தள்ளுபடி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகர்வோர் சாதாரண எல்பிஜி சிலிண் சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத தொகையை சேமிக்க முடியும். மேலும், போக்குவரத்து பிரிவில் குறைந்த செலவில் தேவைக்கேற்ப செய்ய பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜியை வினியோகிக்க இந்நிறுவனம் சிஎன்ஜி நிலையங்களை நிறுவியுள்ளது பல்வேறு முக்கிய இடங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 6 சிஎன்ஜி நிலையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக திறக்கப்படும் இந்த மையங்கள் மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், சிறிய வணிக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சிஎன்ஜியை தடையின்றி வழங்கும். வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் வீடுகளில் குழாய் இயற்கை வாயுவை பயன்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் கார்பன் மற்றும் மாசு வெளியேற்றம் வெகுவாக குறைவதோடு சிறந்த சுற்றுச்சூழலுக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஏஜிஃபி பிரதம் வழங்கும். (AG&P pratham )ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ராமநாதபுரம் மண்டலத் தலைவர் எசக்கிமுத்து பூமாரி கூறுகையில், ராமநாதபுரம் பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக உள்ளூர் சமூகத்திற்கு இயற்கை எரிவாயுவை சீராக வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க 11 கிமீ ஸ்டீல் பைப்லைன் மற்றும் 140 கிமீ மீடியம் டென்சிட்டி பாலிஎதிலீன் பைப்லைனை பதித்துள்ளோம். இதன் மூலம் முதல் கட்டமாக நாங்கள் இப்பகுதியில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு எளிதாக குழாய் இயற்கை எரிவாயுவை வழங்க முடியும். ராமநாதபுரத்தின் உள்பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக. எங்களின் இந்த முயற்சியானது இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், அவர்களின் மாதாந்திர எரிபொருள் செலவினங்களை 30 சதவிதம் வரை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வாகனங்களுக்கான மாற்று எரிபொருளாக சிஎன்ஜி-யை எங்கள் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவானது 45 சதவிதம் வரை குறைகிறது. சிஎன்ஜி-யை பயன்படுத்துவதன் மூலம் அது வாகனங்களின் என்ஜினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக அதிக மைலேஜை அந்த வாகனங்கள் தருகின்றன. மேலும் பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறைகின்றன. பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், வாகனங்களில் சிஎன்ஜியை பயன்படுத்தும்போது அதில் இருந்து குறைந்த அளவு கார்பன் மட்டுமே வெளியேறுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிஎன்ஜி முக்கிய பங்களிக்கிறது. இந்த முன்முயற்சிகள் வரும் 2030-ம் ஆண்டிற்குள் நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன. சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் ராமநாதபுரத்தில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதும் பா.ஜனதா குறி வைத்திருப்பதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையை சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கனவே சந்தித்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பானர்ஜி பேசினார். ஹசன் நகரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது. தேர்தலில் வெற்றி பெறப்போவதாக உறுதியாக நம்பினால், பிறகு ஏன் எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துகிறீர்கள்?.
ஒரு பா.ஜனதா தலைவர், குண்டு வெடிக்கும் என்கிறார். உங்களுக்கு மம்தா பானர்ஜி மீது கோபம் இருந்தால், என்னை கொல்லுங்கள். ஆனால், அபிஷேக் பானர்ஜியை கொல்ல திட்டமிடுகிறீர்கள். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விட்டோம்.
அவர் அபிஷேக் பானர்ஜி வீட்டை உளவு பார்த்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி நேரம் கொடுத்திருந்தால், அவரை கொலை செய்திருக்கக்கூடும்” என்று அவர் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் உலக புவி தினத்தை முன்னிட்டு கிராம மக்களிடத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தாமரைச்செல்வி, சிந்துபிரியா, சுகந்தி, சுமதி, தமிழ்ச்செல்வி, சூரியலட்சுமி, சுவாதி, வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் பற்றி கிராம விவசாயிகளிடம் எடுத்துக் கூறியது பின்வருமாறு: காலநிலை அழுத்தத்தை சமாளிக்க சகிப்புத்தன்மை கொண்ட பயிர்களை வளர்ப்பது போன்ற தகுந்த தணிப்பு தொழில்நுட்பங்களின் தழுவல், திறமையான உற்பத்தித்திறன் மற்றும் வள பயன்பாட்டிற்கான நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர்களை சரியான நேரத்தில் கண்காணிப்பதற்கான வேளாண் ஆலோசனைகள், மண்ணின் கரிம கார்பனை உருவாக்குவதற்கும், தாவர வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும், உரம் மேலாண்மை செய்வதற்கும் பாதுகாப்பு விவசாய நடைமுறைகள், இந்தச் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு, விவசாய அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆகியவை கிராம அளவில் செயல்படுத்தப்படும் பல முன்முயற்சி கொள்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடி சமுதாயக்கூடத்தில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS) நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தெந்த பாடத்தகட்டங்கள் தேர்வு செய்யலாம் என்று விவாதங்கள் மூலம் சிறந்த கல்வியாளர்களை கொண்டு Need exam எப்படி படிக்கனும், தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை பயிலும் வழிமுறைகள், என அனைத்து வகையான பாடத்திட்டம் எடுக்கும் வழிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மருத்துவத்துறையில் எந்த எந்த பாடத்திட்டங்கள் இருக்கும் என்பதையும் வழிகாட்டப்பட்டது, மாணவ மாணவிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஒவ்வொருவரின் எதிர்காலம் திட்டங்கள் மற்றும் லட்சியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி சிறுவர் மன்ற தலைவி செல்வி பா.சுமதி நன்றி கூறி கூட்டம் நிறைவு பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் 1934 வாக்குப்பதிவு மையங்களிலிருந்து கொண்டு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT, கட்டுப்பாட்டு கருவி மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 04.06.2024 அன்று வாக்கு என்னும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் மத்திய காவல் படை, தமிழ்நாடு காவல் துறை, சிறப்பு காவல் பிரிவு ஆகிய துறைகள் மூலம் 261 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் மத்திய காவல் படை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியிலும், அதற்கு அடுத்து சிறப்பு பிரிவு காவல் படையினரும், அதற்கு அடுத்து தமிழ்நாடு காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். இவர்களுடன் தீயணைப்புத்துறை அதிநவீன வாகனங்கள் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வரப்பெற்றுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25 வாக்கு சதவீதம் பதிவு ! வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஜெயபெருமாள் ! !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு பின்னர் அங்கு உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பார்வையிட்டு ராமேஸ்வரம் செல்ல இருக்கிறார். அதிமுக ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியை தாண்டியது! ஐ.நா., தகவல்..
உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது எனவும், தற்போது 144 கோடி பேர் வாழ்வதாகவும் ஐ.நா., மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காகும் எனவும் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்த அமைப்பு சார்பில் உலகளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு குழுவினர் பங்கேற்று நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இவற்றில், உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உள்ளதாகவும், தற்போது 144.17 கோடி பேர் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், நம் அண்டை நாடான சீனா 142.5 கோடி பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், நம் நாட்டின் மக்கள் தொகை அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என கணித்துள்ளது. ஐ.நா., மக்கள் தொகை நிதியம் நடத்திய இந்த ஆய்வில், பல்வேறு கூறுகளின் வாயிலாக மக்கள் தொகையின் விபரங்கள் ஆராயப்பட்டன.
இதன்படி, நம் நாட்டில் 0 – 14 வயதுக்கு உட்பட்டோர் 24 சதவீதம் பேரும், 10 – 19 வயதுக்கு உட்பட்டோர் 17 சதவீதம் பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 10 – 24 வயதுக்கு உட்பட்டோர் 26 சதவீதம் பேரும், 15 – 64 வயது நிரம்பியவர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 7 சதவீதம் பேர் உள்ளதாகவும் கணித்துள்ளது.
நம் நாட்டில் வசிக்கும் ஆண்களின் சராசரி ஆயுள் 71 வயது எனவும், பெண்களுக்கு 74 வயது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தரமான சுகாதார சேவைகள்அளிக்கப்படுவதால், கருத்தரிக்கும் போது நிகழும் மரணங்கள் 8 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தலில் வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – பொது மக்களுக்கு வேண்டுகோள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது.
இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் என்பது நமது நாட்டின் ஐந்து வருட தலைவிதியை நிர்ணயம் செய்யக்குடியதாக, மக்களுக்காக அரசால் ஒதுக்கபடும் நிதிகளை முறையாக மக்கள் நலனுக்காக செலவு செய்ய கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும்.
அற்ப பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க துடிக்கும் அரசியல் வாதிகள் தான் வெற்றி பெற்ற பின் தொகுதி நலனுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை கூற்றாக கொள்ளை அடிப்பார்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு உணர்த்தி இருப்பதை நாம் அறிவோம்.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! உங்கள் ஜனநாயக உரிமையான ஓட்டுக்கு அற்ப பணம் வழங்கிய வேட்பாளர்களை இனம் கண்டு புறம் தள்ளுங்கள். உங்கள் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள். நீங்கள் அளிக்கும் வாக்கு ஊழலுக்கு துணை போகாமல் தொகுதி நலனுக்காக பாடுபடும் ஒரு நல்ல பாரளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யக்கூடிய வாக்காக அமையட்டும்.
ஆக்கம்:- M.U.V. முகைதீன் இப்ராகீம், செயலாளர்,
மக்கள் நல பாதுகாப்பு கழகம்,
கீழக்கரை-623517
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது செவிலியர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி அட்டவணை அட்டைகளை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்றும் அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் சித்ரா நன்றியுரை வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் . இதில் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் பாரதி நகரில் தொடங்கி அம்மா பூங்கா வழியாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி மேளதாளத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் இந்த ஊரில் இதுபோன்ற இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.இந்த வேலையில் இது போன்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது வரவேற்கத்தக்கது மேலும் இச்சங்கத்தின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாக குழுவின் மூலம் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முறையாக இதை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் எங்கள் ஊருக்கு வந்து பார்வை இடவும் இல்லை என்றும் தெரிவித்தனர். . மேலும் இந்த உப்பளம் அமைவதால் ஆணைகுடி, களரி, சாம்பகுளம் சுமைதாங்கி உட்பட் சுற்றியுள்ள கிராமத்தில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பாலாகிவிடும் என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் , காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும்!-ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி நிதியமைச்சர் அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார். இன்று அதன் புள்ளி விவரங்களை கூட இந்த அறிக்கையில் கொடுக்க, அவர்கள் தயாராக இல்லை. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் மிக அதிகமாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி, 10 ஆண்டுகளில் பணவீக்கம் 70% அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். இன்று அக்கட்சியின் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதற்கான எதுவும் இல்லை.
மிக முக்கியமாக வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளை, பிரதமர் இன்று வரை சந்திக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்ற விவசாயிகளை, கடுமையான தடுப்புகள் அமைத்து தடுத்தனர். 10 ஆண்டுகளில் பாஜக தன் அறிக்கைகளால் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. இன்று நாட்டின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மக்கள் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.300-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்தது. பெட்ரோல் விலை ரூ. 75-லிருந்து ரூ. 100-ஐ எட்டியது. டீசல் விலை ரூ. 55-ல் இருந்து ரூ. 90-ஐ எட்டியது. குழந்தைகளுக்கு போதிய அரசு பள்ளிகள் இல்லை. குடிமக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மொத்த செலவு, டெல்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவாக உள்ளது.”
இவ்வாறு டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து “சங்கல்ப் பத்ரா” பாஜகவின் தேர்தல் அறிக்கை..
by Askar
written by Askar
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது,
“வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். பாஜக மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்து கருத்துகளைத் தெரிவித்தனர். கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ‘சங்கல்ப் பாத்ரா’ என்ற பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்குவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் மூலம், தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். பாஜக அரசு மருந்து பொருட்களுக்கு 80% தள்ளுபடி அளித்து வருகிறோம்.
மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம். அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம். 25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து எனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது. இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம்
தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் – திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். இந்தியாவின் கவுரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும். மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர். நாடு முழுவதும் மாணவர்களுக்கு அடையாள எண் வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு. 2025ம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.